Skip to content

ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் - Page: 8

Az-Zumar

(az-Zumar)

௭௧

وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى جَهَنَّمَ زُمَرًا ۗحَتّٰىٓ اِذَا جَاۤءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَآ اَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ اٰيٰتِ رَبِّكُمْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَا ۗقَالُوْا بَلٰى وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكٰفِرِيْنَ ٧١

wasīqa
وَسِيقَ
ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
ilā jahannama
إِلَىٰ جَهَنَّمَ
நரகத்தின் பக்கம்
zumaran
زُمَرًاۖ
கூட்டம் கூட்டமாக
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā jāūhā
إِذَا جَآءُوهَا
அதற்கு அவர்கள் வந்தவுடன்
futiḥat
فُتِحَتْ
திறக்கப்படும்
abwābuhā
أَبْوَٰبُهَا
அதன் வாசல்கள்
waqāla
وَقَالَ
இன்னும் கூறுவார்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
khazanatuhā
خَزَنَتُهَآ
அதன் காவலாளிகள்
alam yatikum
أَلَمْ يَأْتِكُمْ
உங்களுக்கு வரவில்லையா?
rusulun
رُسُلٌ
தூதர்கள்
minkum
مِّنكُمْ
உங்களில் இருந்தே
yatlūna
يَتْلُونَ
ஓதிக் காட்டினார்களே
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
āyāti
ءَايَٰتِ
வசனங்களை
rabbikum
رَبِّكُمْ
உங்கள் இறைவனின்
wayundhirūnakum
وَيُنذِرُونَكُمْ
இன்னும் உங்களை எச்சரித்தார்களே
liqāa yawmikum hādhā
لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَاۚ
நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி
qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰ
ஏன் வரவில்லை
walākin
وَلَٰكِنْ
எனினும்
ḥaqqat
حَقَّتْ
உறுதியாகி விட்டது
kalimatu
كَلِمَةُ
வாக்கு
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனையின்
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! (வந்தார்கள்)" என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௧)
Tafseer
௭௨

قِيْلَ ادْخُلُوْٓا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۚفَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ ٧٢

qīla
قِيلَ
கூறப்படும்
ud'khulū
ٱدْخُلُوٓا۟
நீங்கள் நுழையுங்கள்!
abwāba
أَبْوَٰبَ
வாசல்களில்
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள்
fīhā
فِيهَاۖ
அதில்
fabi'sa
فَبِئْسَ
மிகக் கெட்டது
mathwā
مَثْوَى
தங்குமிடம்
l-mutakabirīna
ٱلْمُتَكَبِّرِينَ
பெருமையடிப்பவர்களின்
ஆகவே, "நரகத்தின் வாயில்களில் நீங்கள் நுழைந்து விடுங்கள். என்றென்றுமே நீங்கள் அதில் தங்கிவிடுங்கள்" என்று கூறப்படும். ஆகவே, கர்வம்கொண்ட இவர்கள் தங்குமிடம் மகா கெட்டது. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௨)
Tafseer
௭௩

وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَنَّةِ زُمَرًا ۗحَتّٰىٓ اِذَا جَاۤءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ ٧٣

wasīqa
وَسِيقَ
கொண்டு வரப்படுவார்(கள்)
alladhīna ittaqaw
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
அஞ்சியவர்களை
rabbahum
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
ilā l-janati
إِلَى ٱلْجَنَّةِ
சொர்க்கத்திற்கு
zumaran
زُمَرًاۖ
கூட்டம் கூட்டமாக
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā jāūhā
إِذَا جَآءُوهَا
அதற்கருகில் அவர்கள் வரும்போது
wafutiḥat
وَفُتِحَتْ
இன்னும் திறக்கப்படும்
abwābuhā
أَبْوَٰبُهَا
அதன் வாசல்கள்
waqāla
وَقَالَ
கூறுவார்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
khazanatuhā
خَزَنَتُهَا
அதன் காவலாளிகள்
salāmun
سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகட்டும்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
ṭib'tum
طِبْتُمْ
நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள்
fa-ud'khulūhā
فَٱدْخُلُوهَا
ஆகவே, இதில் நுழைந்து விடுங்கள்!
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள், (அந்நாளில் கூட்டம் கூட்டமாகச் சுவர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களுக்கு சாந்தியும் சமாதானமும், உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கி விடுங்கள்" என்று கூறுவார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௩)
Tafseer
௭௪

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاۤءُ ۚفَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ ٧٤

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே!
alladhī ṣadaqanā
ٱلَّذِى صَدَقَنَا
எவன்/எங்களுக்கு உண்மையாக்கினான்
waʿdahu
وَعْدَهُۥ
தனது வாக்கை
wa-awrathanā
وَأَوْرَثَنَا
இன்னும் எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான்
l-arḍa
ٱلْأَرْضَ
இந்த பூமியை
natabawwa-u
نَتَبَوَّأُ
நாங்கள் தங்குவோம்
mina l-janati
مِنَ ٱلْجَنَّةِ
இந்த சொர்க்கத்தில்
ḥaythu nashāu
حَيْثُ نَشَآءُۖ
நாங்கள் நாடிய இடத்தில்
faniʿ'ma
فَنِعْمَ
மிகச் சிறந்ததாகும்
ajru
أَجْرُ
கூலி
l-ʿāmilīna
ٱلْعَٰمِلِينَ
நல்லமல் செய்வோரின்
அதற்கவர்கள், "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சுவனபதியில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான்" என்று கூறுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலி இவ்வாறு நன்மையாகவே முடியும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௪)
Tafseer
௭௫

وَتَرَى الْمَلٰۤىِٕكَةَ حَاۤفِّيْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْۚ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ ٧٥

watarā
وَتَرَى
பார்ப்பீர்கள்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
ḥāffīna
حَآفِّينَ
சூழ்ந்தவர்களாக
min ḥawli
مِنْ حَوْلِ
சுற்றி
l-ʿarshi
ٱلْعَرْشِ
அர்ஷை
yusabbiḥūna
يُسَبِّحُونَ
அவர்கள் துதிப்பார்கள்
biḥamdi
بِحَمْدِ
புகழை
rabbihim
رَبِّهِمْۖ
தங்கள் இறைவனின்
waquḍiya
وَقُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியமான முறையில்
waqīla
وَقِيلَ
கூறப்படும்
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
rabbi
رَبِّ
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
(நபியே! அந்நாளில்) மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் "அர்ஷை" சூழ்ந்து நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, "அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சொந்தமானது" என்று (அனைவராலும் துதி செய்து) புகழ்ந்து கூறப்படும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௫)
Tafseer