Skip to content

ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் - Page: 4

Az-Zumar

(az-Zumar)

௩௧

ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ ࣖ ۔ ٣١

thumma
ثُمَّ
பிறகு
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
ʿinda rabbikum
عِندَ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
takhtaṣimūna
تَخْتَصِمُونَ
தர்க்கித்துக் கொள்வீர்கள்
பின்னர், மறுமையில் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக (கொண்டுவரப்பட்டு) நீங்கள் (நீதத்தைக் கோரி உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௧)
Tafseer
௩௨

۞ فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَى اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَاۤءَهٗۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ ٣٢

faman
فَمَنْ
யார்?
aẓlamu
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
mimman kadhaba
مِمَّن كَذَبَ
பொய் சொல்பவனை விட
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
wakadhaba
وَكَذَّبَ
இன்னும் பொய்ப்பித்தான்
bil-ṣid'qi
بِٱلصِّدْقِ
உண்மையை
idh jāahu
إِذْ جَآءَهُۥٓۚ
அது தன்னிடம் வந்தபோது
alaysa
أَلَيْسَ
இல்லையா?
fī jahannama
فِى جَهَنَّمَ
நரகத்தில்
mathwan
مَثْوًى
தங்குமிடம்
lil'kāfirīna
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
அல்லாஹ்வின் மீது பொய் சொல்லி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கின்றது)? ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௨)
Tafseer
௩௩

وَالَّذِيْ جَاۤءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖٓ اُولٰۤىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ٣٣

wa-alladhī jāa
وَٱلَّذِى جَآءَ
வந்தவரும்
bil-ṣid'qi
بِٱلصِّدْقِ
உண்மையைக் கொண்டு
waṣaddaqa
وَصَدَّقَ
இன்னும் உண்மை என்று ஏற்றார்
bihi
بِهِۦٓۙ
அதை
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-mutaqūna
ٱلْمُتَّقُونَ
இறையச்சம் உள்ளவர்கள்
உண்மையைக் கொண்டு வந்தவ(ராகிய நமது தூத)ரும், அதனை உண்மையென்றே நம்பியவரும் ஆகிய இத்தகையவர்கள் தாம் இறை அச்சமுடையவர்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௩)
Tafseer
௩௪

لَهُمْ مَّا يَشَاۤءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۗ ذٰلِكَ جَزٰۤؤُا الْمُحْسِنِيْنَۚ ٣٤

lahum
لَهُم
அவர்களுக்கு
mā yashāūna
مَّا يَشَآءُونَ
அவர்கள் நாடுகின்றதெல்லாம்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْۚ
அவர்களின் இறைவனிடம்
dhālika
ذَٰلِكَ
இதுதான்
jazāu
جَزَآءُ
கூலியாகும்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களின்
அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவ னிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். ஏனென்றால், (இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௪)
Tafseer
௩௫

لِيُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِيْ عَمِلُوْا وَيَجْزِيَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ ٣٥

liyukaffira
لِيُكَفِّرَ
அகற்றி விடுவதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
aswa-a
أَسْوَأَ
கெட்டசெயல்களை
alladhī ʿamilū
ٱلَّذِى عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றில்
wayajziyahum
وَيَجْزِيَهُمْ
இன்னும் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காக
ajrahum
أَجْرَهُم
அவர்களின் கூலியை
bi-aḥsani
بِأَحْسَنِ
மிக அழகிய முறையில்
alladhī kānū yaʿmalūna
ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து வந்ததை விட
அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௫)
Tafseer
௩௬

اَلَيْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗۗ وَيُخَوِّفُوْنَكَ بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖۗ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍۚ ٣٦

alaysa
أَلَيْسَ
இல்லையா?
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bikāfin
بِكَافٍ
போதுமானவனாக
ʿabdahu
عَبْدَهُۥۖ
தனது அடியானுக்கு
wayukhawwifūnaka
وَيُخَوِّفُونَكَ
இன்னும் அவர்கள் உம்மை பயமுறுத்துகின்றனர்
bi-alladhīna min dūnihi
بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ
அவன் அல்லாதவர்களைக் கொண்டு
waman yuḍ'lili l-lahu
وَمَن يُضْلِلِ ٱللَّهُ
அல்லாஹ் யாரை வழிகெடுத்து விடுகின்றானோ
famā lahu
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
min hādin
مِنْ هَادٍ
நேர்வழி காட்டுபவர் யாரும்
தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவைகளைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௬)
Tafseer
௩௭

وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّضِلٍّ ۗ اَلَيْسَ اللّٰهُ بِعَزِيْزٍ ذِى انْتِقَامٍ ٣٧

waman
وَمَن
யாரை
yahdi
يَهْدِ
நேர்வழி செலுத்தினானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
famā lahu
فَمَا لَهُۥ
இல்லை/அவரை
min muḍillin
مِن مُّضِلٍّۗ
வழிகெடுப்பவர் யாரும்
alaysa
أَلَيْسَ
இல்லையா?
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biʿazīzin
بِعَزِيزٍ
மிகைத்தவனாக
dhī intiqāmin
ذِى ٱنتِقَامٍ
பழி தீர்ப்பவனாக
எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுத்துவிடக் கூடியவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் பழிவாங்க ஆற்றல் உடையவனுமல்லவா? ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௭)
Tafseer
௩௮

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ اللّٰهُ ۗ قُلْ اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِيَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖٓ اَوْ اَرَادَنِيْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖۗ قُلْ حَسْبِيَ اللّٰهُ ۗعَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ ٣٨

wala-in
وَلَئِن
sa-altahum
سَأَلْتَهُم
நீர் அவர்களிடம் கேட்டால்
man
مَّنْ
யார்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
qul
قُلْ
கூறுவீராக!
afara-aytum
أَفَرَءَيْتُم
நீங்கள் அறிவியுங்கள்!
mā tadʿūna
مَّا تَدْعُونَ
நீங்கள் அழைப்பவைப் பற்றி
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
in arādaniya
إِنْ أَرَادَنِىَ
எனக்கு நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biḍurrin
بِضُرٍّ
ஒரு தீங்கை
hal hunna kāshifātu
هَلْ هُنَّ كَٰشِفَٰتُ
அவை நீக்கக்கூடியவையா?
ḍurrihi
ضُرِّهِۦٓ
அவனது தீங்கை
aw
أَوْ
அல்லது
arādanī
أَرَادَنِى
அவன் எனக்கு நாடினால்
biraḥmatin
بِرَحْمَةٍ
ஓர் அருளை
hal hunna mum'sikātu
هَلْ هُنَّ مُمْسِكَٰتُ
அவை தடுத்துவிடக் கூடியவையா?
raḥmatihi
رَحْمَتِهِۦۚ
அவனது அருளை
qul
قُلْ
கூறுவீராக!
ḥasbiya l-lahu
حَسْبِىَ ٱللَّهُۖ
அல்லாஹ் எனக்குப் போதுமானவன்
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீதே
yatawakkalu
يَتَوَكَّلُ
நம்பிக்கை வைக்கட்டும்
l-mutawakilūna
ٱلْمُتَوَكِّلُونَ
நம்பிக்கை வைப்பவர்கள்
(நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின், "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். பின்னும், (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் எனக்கு யாதொரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக் கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்." ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௮)
Tafseer
௩௯

قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌ ۚفَسَوْفَ تَعْلَمُوْنَۙ ٣٩

qul
قُلْ
கூறுவீராக!
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
iʿ'malū
ٱعْمَلُوا۟
அமல் செய்யுங்கள்!
ʿalā makānatikum
عَلَىٰ مَكَانَتِكُمْ
நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு
innī
إِنِّى
நிச்சயமாக நானும்
ʿāmilun
عَٰمِلٌۖ
அமல் செய்கிறேன்
fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் விரைவில் அறிவீர்கள்
(பின்னும் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்களுடைய நிலைமையில் இருந்துகொண்டு நீங்கள் (செய்யக் கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும், (என்னுடைய நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக்கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் குற்றம் என்பதைப்) பின்னர், நீங்கள் நிச்சயமாக அறிந்துகொள்வீர்கள்." ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௩௯)
Tafseer
௪௦

مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ ٤٠

man
مَن
யார் ஒருவர்
yatīhi
يَأْتِيهِ
அவருக்கு வரும்
ʿadhābun
عَذَابٌ
வேதனை
yukh'zīhi
يُخْزِيهِ
அவரை இழிவுபடுத்துகின்ற
wayaḥillu
وَيَحِلُّ
இன்னும் இறங்கும்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
ʿadhābun
عَذَابٌ
வேதனை
muqīmun
مُّقِيمٌ
நிரந்தரமான
இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகின்றது? நிலையான வேதனை எவர் மீது இறங்குகின்றது? (என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.) ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௪௦)
Tafseer