Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௯

Qur'an Surah As-Saffat Verse 59

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ (الصافات : ٣٧)

illā mawtatanā
إِلَّا مَوْتَتَنَا
Except our death
எங்கள் மரணத்தை தவிர
l-ūlā
ٱلْأُولَىٰ
the first
முதல்
wamā naḥnu
وَمَا نَحْنُ
and not we
இன்னும் நாங்கள் இல்லை
bimuʿadhabīna
بِمُعَذَّبِينَ
will be punished?"
வேதனை செய்யப்படுபவர்களாக

Transliteration:

Illa mawtatanal oola wa maa nahnu bimu'azzabeen (QS. aṣ-Ṣāffāt:59)

English Sahih International:

Except for our first death, and we will not be punished?" (QS. As-Saffat, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சுவனபதியில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்" (என்றும் கூறுவார்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௯)

Jan Trust Foundation

“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எங்கள் முதல் மரணத்தைத் தவிர (நாங்கள் மரணிப்பவர்களாக இல்லை தானே?) இன்னும் நாங்கள் வேதனை செய்யப்படுபவர்களாக இல்லை.