Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௬

Qur'an Surah Ya-Sin Verse 66

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ نَشَاۤءُ لَطَمَسْنَا عَلٰٓى اَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰى يُبْصِرُوْنَ (يس : ٣٦)

walaw nashāu
وَلَوْ نَشَآءُ
And if We willed
நாம் நாடியிருந்தால்
laṭamasnā
لَطَمَسْنَا
We (would have) surely obliterated
குருடாக்கி இருப்போம்
ʿalā aʿyunihim
عَلَىٰٓ أَعْيُنِهِمْ
[over] their eyes
அவர்களின் கண்களை
fa-is'tabaqū
فَٱسْتَبَقُوا۟
then they (would) race
தவறி இருப்பார்கள்
l-ṣirāṭa
ٱلصِّرَٰطَ
(to find) the path
பாதை
fa-annā
فَأَنَّىٰ
then how
ஆக, எப்படி
yub'ṣirūna
يُبْصِرُونَ
(could) they see?
பார்ப்பார்கள்

Transliteration:

Wa law nashaaa'u lata masna 'alaaa aiyunihim fasta baqus-siraata fa-annaa yubsiroon (QS. Yāʾ Sīn:66)

English Sahih International:

And if We willed, We could have obliterated their eyes, and they would race to [find] the path, and how could they see? (QS. Ya-Sin, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கி விடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் எதைத்தான் பார்க்க முடியும்? (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௬)

Jan Trust Foundation

நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் நாடியிருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். அவர்கள் பாதை தவறி இருப்பார்கள். ஆக, அவர்கள் எப்படி பார்பார்கள்! (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக நாம் அவர்களை இவ்வுலகிலேயே தண்டிக்க நாடி இருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். அவர்கள் எதையும் பார்க்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்திருப்பார்கள்.)