Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௭

Qur'an Surah Ya-Sin Verse 47

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا قِيْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۙقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْٓا اَنُطْعِمُ مَنْ لَّوْ يَشَاۤءُ اللّٰهُ اَطْعَمَهٗٓ ۖاِنْ اَنْتُمْ اِلَّا فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (يس : ٣٦)

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
And when it is said
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
anfiqū
أَنفِقُوا۟
"Spend
நீங்கள் தர்மம் செய்யுங்கள்
mimmā razaqakumu
مِمَّا رَزَقَكُمُ
from what (has) provided you
உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து
l-lahu
ٱللَّهُ
Allah"
அல்லாஹ்
qāla
قَالَ
Said
கூறுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieved
நிராகரித்தவர்கள்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوٓا۟
to those who believed
நம்பிக்கையாளர்களை நோக்கி
anuṭ'ʿimu
أَنُطْعِمُ
"Should we feed
நாங்கள் உணவளிக்க வேண்டுமா?
man law yashāu
مَن لَّوْ يَشَآءُ
whom if Allah willed
எவருக்கு/நாடினால்
l-lahu
ٱللَّهُ
Allah willed
அல்லாஹ்
aṭʿamahu
أَطْعَمَهُۥٓ
He would have fed him?"
அவருக்கு உணவளித்து விடுவான்
in antum
إِنْ أَنتُمْ
Not (are) you
நீங்கள் இல்லை
illā
إِلَّا
except
தவிர
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
in an error
வழிகேட்டிலேயே
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான

Transliteration:

Wa izaa qeela lahum anfiqoo mimmaa razaqakumul laahu qaalal lazeena kafaroo lillazeena aamanooo anut'imu mal-law yashaaa'ul laahu at'amahooo in antum illaa fee dalaalim mubeen (QS. Yāʾ Sīn:47)

English Sahih International:

And when it is said to them, "Spend from that which Allah has provided for you," those who disbelieve say to those who believe, "Should we feed one whom, if Allah had willed, He would have fed? You are not but in clear error." (QS. Ya-Sin, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் "அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக் கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௭)

Jan Trust Foundation

“அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி கூறுகின்றனர்: “அல்லாஹ் நாடினால் எவருக்கு உணவளித்து விடுவானோ அவருக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை.” என்று (முஸ்லிம்களைப் பார்த்து கூறுகின்றனர்).