Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௫௨

Qur'an Surah Saba Verse 52

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّقَالُوْٓا اٰمَنَّا بِهٖۚ وَاَنّٰى لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍۚ (سبإ : ٣٤)

waqālū
وَقَالُوٓا۟
And they will say
அவர்கள் கூறுவார்கள்
āmannā
ءَامَنَّا
"We believe
நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦ
in it"
அவனை
wa-annā
وَأَنَّىٰ
But how
எங்கே
lahumu
لَهُمُ
for them
அவர்களுக்கு சாத்தியமாகும்
l-tanāwushu
ٱلتَّنَاوُشُ
(will be) the receiving
அடைவது
min makānin
مِن مَّكَانٍۭ
from a place
இடத்திலிருந்து
baʿīdin
بَعِيدٍ
far off?
தூரமான

Transliteration:

Wa qaloo aamannaa bihee wa annaa lahumut tanaawushu mim makaanim ba'eed (QS. Sabaʾ:52)

English Sahih International:

And they will [then] say, "We believe in it!" But how for them will be the taking [of faith] from a place far away? (QS. Saba, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்? (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௫௨)

Jan Trust Foundation

மேலும் அவர்கள் கூறுவார்கள்| “நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்” என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை பார்த்தபோது) அவனை (அல்லாஹ்வை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து (-மறுமைக்கு சென்றுவிட்ட அவர்கள் அங்கிருந்து கொண்டு தவ்பா - பாவமீட்சியையும் இறை நம்பிக்கையையும்) அடைவது எங்கே அவர்களுக்கு சாத்தியமாகும். (அதாவது உலகத்தில் செய்ய வேண்டியதை மறுமையில் செய்ய ஆசைப்படுகின்றனர். உலகில் செய்ய வேண்டியதை மறுமைக்கு வந்தவுடன் செய்ய ஆசைப்பட்டு என்ன ஆகப்போகிறது?!)