Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௩

Qur'an Surah Saba Verse 43

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَآ اِلَّا رَجُلٌ يُّرِيْدُ اَنْ يَّصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَاۤؤُكُمْ ۚوَقَالُوْا مَا هٰذَآ اِلَّآ اِفْكٌ مُّفْتَرًىۗ وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَاۤءَهُمْۙ اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ (سبإ : ٣٤)

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
And when are recited
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் முன்
āyātunā
ءَايَٰتُنَا
Our Verses
நமது வசனங்கள்
bayyinātin
بَيِّنَٰتٍ
clear
தெளிவான
qālū
قَالُوا۟
they say
அவர்கள் கூறினர்
mā hādhā
مَا هَٰذَآ
"Not (is) this
இவர் இல்லை
illā
إِلَّا
but
தவிர
rajulun
رَجُلٌ
a man
ஓர் ஆடவரே
yurīdu
يُرِيدُ
who wishes
நாடுகின்றனர்
an yaṣuddakum
أَن يَصُدَّكُمْ
to hinder you
இவர் உங்களைத் தடுக்க
ʿammā kāna yaʿbudu
عَمَّا كَانَ يَعْبُدُ
from what used (to) worship
வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும்
ābāukum
ءَابَآؤُكُمْ
your forefathers"
மூதாதைகள் உங்கள்
waqālū
وَقَالُوا۟
And they say
இன்னும் அவர்கள்கூறினர்
mā hādhā
مَا هَٰذَآ
"Not (is) this
இது இல்லை
illā
إِلَّآ
except
தவிர
if'kun
إِفْكٌ
a lie
பொய்
muf'taran
مُّفْتَرًىۚ
invented"
இட்டுக்கட்டப்பட்ட
waqāla
وَقَالَ
And said
இன்னும் கூறினர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieved
நிராகரித்தவர்கள்
lil'ḥaqqi
لِلْحَقِّ
about the truth
சத்தியம்
lammā
لَمَّا
when
வந்த போது
jāahum
جَآءَهُمْ
it came to them
தங்களிடம்
in hādhā
إِنْ هَٰذَآ
"Not (is) this
இது இல்லை
illā
إِلَّا
except
தவிர
siḥ'run
سِحْرٌ
a magic
சூனியமே
mubīnun
مُّبِينٌ
obvious"
தெளிவான

Transliteration:

Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa baiyinaatin qaaloo maa haazaa illaa rajuluny yureedu ai-yasuddakum 'ammaa kaana ya'budu aabaaa'ukum wa qaaloo maa haazaaa illaaa ifkum muftaraa; wa qaalal lazeena kafaroo lilhaqqi lammaa jaaa'ahum in haazaaa illaa sihrum mubeen (QS. Sabaʾ:43)

English Sahih International:

And when Our verses are recited to them as clear evidences, they say, "This is not but a man who wishes to avert you from that which your fathers were worshipping." And they say, "This is not except a lie invented." And those who disbelieve say of the truth when it has come to them, "This is not but obvious magic." (QS. Saba, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் (நம் தூதரைப் பற்றி) "இவர் ஒரு சாதாரண மனிதரே அன்றி வேறில்லை. உங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவைகளிலிருந்து உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்றும் (நம்முடைய தூதர் கூறுகிற) "இது வெறும் கட்டுக்கதையேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். அன்றி "(திருக்குர்ஆனாகிய) இந்த உண்மை வந்த சமயத்தில், இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௩)

Jan Trust Foundation

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்| “இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் “இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்| திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் முன் தெளிவான நமது வசனங்கள் ஓதப்பட்டால் உங்கள் மூதாதைகள் வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும் இவர் உங்களைத் தடுக்க நாடுகின்ற ஓர் ஆடவரே தவிர (உண்மையான நபி) இல்லை. இன்னும் அவர்கள் கூறினர்: இது (-இந்த வேதம்) இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர (உண்மையான இறைவேதம்) இல்லை. நிராகரித்தவர்கள் தங்களிடம் சத்தியம் வந்த போது (அதற்கு) கூறினர்: இது தெளிவான சூனியமே தவிர (வேறு ஓர் உண்மையான அத்தாட்சி) இல்லை.