Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨௪

Qur'an Surah Saba Verse 24

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ قُلِ اللّٰهُ ۙوَاِنَّآ اَوْ اِيَّاكُمْ لَعَلٰى هُدًى اَوْ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (سبإ : ٣٤)

qul
قُلْ
Say
கூறுவீராக!
man
مَن
"Who
யார்?
yarzuqukum
يَرْزُقُكُم
provides (for) you
உங்களுக்கு உணவளிப்பான்
mina
مِّنَ
from
இருந்து
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
and the earth?"
இன்னும் பூமி
quli
قُلِ
Say
நீர் கூறுவீராக!
l-lahu
ٱللَّهُۖ
"Allah
அல்லாஹ்தான்
wa-innā
وَإِنَّآ
And indeed we
நிச்சயமாக நாங்கள்
aw
أَوْ
or
அல்லது
iyyākum
إِيَّاكُمْ
you
நீங்களா?
laʿalā hudan
لَعَلَىٰ هُدًى
(are) surely upon guidance
நேர்வழியில்
aw
أَوْ
or
அல்லது
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
in error
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
clear"
தெளிவான

Transliteration:

Qul mai yarzuqukum minas samaawaati wal ardi qulil laahu wa innaaa aw iyyaakum la'alaa hudan aw fee dalaalim mubeen (QS. Sabaʾ:24)

English Sahih International:

Say, "Who provides for you from the heavens and the earth?" Say, "Allah. And indeed, we or you are either upon guidance or in clear error." (QS. Saba, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) "வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?" என்று கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) "அல்லாஹ்தான்" என்று (நீங்களே) கூறி "மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் யார்? பகிரங்கமான தவறான வழியில் இருப்பவன் யார்? (நீங்களா அல்லது நானா?)" என்றும் கேளுங்கள். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

“வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?” என்று (நபியே!) நீர் கேளும்; “அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்” என்றும் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! வானங்கள் இன்னும் பூமியில் இருந்து யார் உங்களுக்கு உணவளிப்பான்? (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ்தான் (உணவளிக்கின்றான்). நிச்சயமாக நாங்கள் நேர்வழியில் அல்லது தெளிவான வழிகேட்டில் இருக்கின்றோமா அல்லது நீங்கள் (நேர்வழியில் அல்லது தெளிவான வழிகேட்டில்) இருக்கின்றீர்களா?