Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௬

Qur'an Surah Saba Verse 16

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَيْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ (سبإ : ٣٤)

fa-aʿraḍū
فَأَعْرَضُوا۟
But they turned away
ஆனால் புறக்கணித்தனர்
fa-arsalnā
فَأَرْسَلْنَا
so We sent
ஆகவே அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
அவர்கள் மீது
sayla
سَيْلَ
(the) flood
பெரும் வெள்ளத்தை
l-ʿarimi
ٱلْعَرِمِ
(of) the dam
அடியோடு அரித்து செல்கின்ற
wabaddalnāhum
وَبَدَّلْنَٰهُم
and We changed for them
இன்னும் மாற்றிவிட்டோம் அவர்களுக்கு
bijannatayhim
بِجَنَّتَيْهِمْ
their two gardens
அவர்களின் இரண்டு தோட்டங்களுக்குப் பதிலாக
jannatayni
جَنَّتَيْنِ
(with) two gardens
இரண்டு தோட்டங்களை
dhawātay
ذَوَاتَىْ
producing fruit
உடைய
ukulin
أُكُلٍ
producing fruit
பழங்கள்
khamṭin
خَمْطٍ
bitter
துர்நாற்றமுள்ள
wa-athlin
وَأَثْلٍ
and tamarisks
இன்னும் காய்க்காத மரங்கள்
washayin min sid'rin qalīlin
وَشَىْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ
and (some)thing of lote trees few
இன்னும் மிகக் குறைவான சில இலந்தை மரங்களை

Transliteration:

Fa-a''radoo fa-arsalnaa 'alaihim Sailal 'Arimi wa baddalnaahum bijannataihim jannataini azwaatai ukulin khamtinw wa aslinw wa shai'im min sidrin qaleel (QS. Sabaʾ:16)

English Sahih International:

But they turned away [refusing], so We sent upon them the flood of the dam, and We replaced their two [fields of] gardens with gardens of bitter fruit, tamarisks and something of sparse lote trees. (QS. Saba, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்கள் (அதனைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தான தொரு ஏரியை உடைக்கக் கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பி வைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களையும், சில இலந்தை மரங்களையும் கொண்ட தோப்புகளாக மாற்றிவிட்டோம். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௧௬)

Jan Trust Foundation

ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆனால், அவர்கள் புறக்கணித்தனர். ஆகவே, அடியோடு அரித்து செல்கின்ற பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பினோம். அவர்களின் இரண்டு (நல்ல) தோட்டங்களுக்குப் பதிலாக (கசப்பான கெட்ட) துர்நாற்றமுள்ள பழங்களை உடைய, காய்க்காத மரங்களை உடைய, இன்னும் மிகக்குறைவான சில இலந்தை மரங்களை உடைய இரண்டு தோட்டங்களை மாற்றிவிட்டோம்.