Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫௩

Qur'an Surah Al-Ahzab Verse 53

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِيِّ اِلَّآ اَنْ يُّؤْذَنَ لَكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰىهُ وَلٰكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَأْنِسِيْنَ لِحَدِيْثٍۗ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِيَّ فَيَسْتَحْيٖ مِنْكُمْ ۖوَاللّٰهُ لَا يَسْتَحْيٖ مِنَ الْحَقِّۗ وَاِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَاسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَاۤءِ حِجَابٍۗ ذٰلِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّۗ وَمَا كَانَ لَكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَآ اَنْ تَنْكِحُوْٓا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖٓ اَبَدًاۗ اِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا (الأحزاب : ٣٣)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே!
lā tadkhulū
لَا تَدْخُلُوا۟
(Do) not enter
நுழையாதீர்கள்
buyūta
بُيُوتَ
(the) houses
வீடுகளுக்குள்
l-nabiyi
ٱلنَّبِىِّ
(of) the Prophet
நபியின்
illā
إِلَّآ
except
தவிர
an yu'dhana
أَن يُؤْذَنَ
when permission is given
அனுமதி கொடுக்கப்பட்டால்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
ilā ṭaʿāmin
إِلَىٰ طَعَامٍ
for a meal
ஓர் உணவின் பக்கம்
ghayra nāẓirīna
غَيْرَ نَٰظِرِينَ
without awaiting
எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும்
ināhu
إِنَىٰهُ
its preparation
அது தயாராவதை
walākin
وَلَٰكِنْ
But
என்றாலும்,
idhā duʿītum
إِذَا دُعِيتُمْ
when you are invited
நீங்கள் அழைக்கப்பட்டால்
fa-ud'khulū
فَٱدْخُلُوا۟
then enter
நுழையுங்கள்
fa-idhā ṭaʿim'tum
فَإِذَا طَعِمْتُمْ
and when you have eaten
நீங்கள் சாப்பிட்டுவிட்டால்
fa-intashirū
فَٱنتَشِرُوا۟
then disperse
பிரிந்துவிடுங்கள்
walā mus'tanisīna
وَلَا مُسْتَـْٔنِسِينَ
and not seeking to remain
புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும்
liḥadīthin
لِحَدِيثٍۚ
for a conversation
பேச்சை
inna dhālikum
إِنَّ ذَٰلِكُمْ
Indeed that
நிச்சயமாக இது
kāna
كَانَ
was
இருக்கின்றது
yu'dhī
يُؤْذِى
troubling
தொந்தரவு தரக்கூடியதாக
l-nabiya
ٱلنَّبِىَّ
the Prophet
நபிக்கு
fayastaḥyī
فَيَسْتَحْىِۦ
and he is shy
அவர்வெட்கப்படுவார்
minkum
مِنكُمْۖ
of (dismissing) you
உங்களிடம்
wal-lahu
وَٱللَّهُ
But Allah
அல்லாஹ்
lā yastaḥyī
لَا يَسْتَحْىِۦ
is not shy is not shy
வெட்கப்படமாட்டான்
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّۚ
of the truth
சத்தியத்திற்கு
wa-idhā
وَإِذَا
And when
நீங்கள் கேட்டால்
sa-altumūhunna
سَأَلْتُمُوهُنَّ
you ask them
நீங்கள் கேட்டால் அவர்களிடம்
matāʿan
مَتَٰعًا
for something
ஒரு பொருளை
fasalūhunna
فَسْـَٔلُوهُنَّ
then ask them
கேளுங்கள் அவர்களிடம்
min warāi
مِن وَرَآءِ
from behind
பின்னால் இருந்து
ḥijābin
حِجَابٍۚ
a screen
திரைக்கு
dhālikum
ذَٰلِكُمْ
That
அதுதான்
aṭharu
أَطْهَرُ
(is) purer
மிகத் தூய்மையானது
liqulūbikum
لِقُلُوبِكُمْ
for your hearts
உங்கள் உள்ளங்களுக்கு(ம்)
waqulūbihinna
وَقُلُوبِهِنَّۚ
and their hearts
அவர்களின் உள்ளங்களுக்கும்
wamā kāna
وَمَا كَانَ
And not is
ஆகுமானதல்ல
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
an tu'dhū
أَن تُؤْذُوا۟
that you trouble
நீங்கள் தொந்தரவு தருவது(ம்)
rasūla
رَسُولَ
(the) Messenger
தூதருக்கு
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
walā an tankiḥū
وَلَآ أَن تَنكِحُوٓا۟
and not that you should marry
நீங்கள் மணமுடிப்பதும்
azwājahu
أَزْوَٰجَهُۥ
his wives
அவருடைய மனைவிகளை
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦٓ
after him after him
அவருக்குப் பின்னர்
abadan
أَبَدًاۚ
ever
எப்போதும்
inna dhālikum
إِنَّ ذَٰلِكُمْ
Indeed that
நிச்சயமாக/இவை
kāna
كَانَ
is
இருக்கின்றது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
near Allah
அல்லாஹ்விடம்
ʿaẓīman
عَظِيمًا
an enormity
பெரிய பாவமாக

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo laa tadkhuloo bu yootan Nabiyyi ilaaa ai yu'zana lakum ilaa ta'aamin ghaira naazireena inaahu wa laakin izaa du'eetum fadkhuloo fa izaa ta'imtum fantashiroo wa laa mustaaniseena lihadees; inna zaalikum kaana yu'zin Nabiyya fa yastahyee minkum wallaahu laa yastahyee minal haqq; wa izaa sa altumoohunna mataa'an fas'aloohunna minw waraaa'i hijaab; zaalikum atharu liquloobikum wa quloobihinn; wa maa kaana lakum an tu'zoo Rasoolal laahi wa laaa an tankihooo azwaajahoo mim ba'diheee abadaa; inna zaalikum kaana 'indal laahi 'azeema (QS. al-ʾAḥzāb:53)

English Sahih International:

O you who have believed, do not enter the houses of the Prophet except when you are permitted for a meal, without awaiting its readiness. But when you are invited, then enter; and when you have eaten, disperse without seeking to remain for conversation. Indeed, that [behavior] was troubling the Prophet, and he is shy of [dismissing] you. But Allah is not shy of the truth. And when you ask [his wives] for something, ask them from behind a partition. That is purer for your hearts and their hearts. And it is not [conceivable or lawful] for you to harm the Messenger of Allah or to marry his wives after him, ever. Indeed, that would be in the sight of Allah an enormity. (QS. Al-Ahzab, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்களுடைய நபி விருந்துக்காக அழைத்திருந்தபோதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள். அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப் பட்டால்தான் உள்ளே செல்லவும். தவிர, நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளிப்பட்டு விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமானதன்று. அன்றி, அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௫௩)

Jan Trust Foundation

முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! ஓர் உணவின் பக்கம் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் தவிர நபியின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள். (அப்படி அழைக்கப்பட்டாலும்) அது தயாராவதை எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். என்றாலும், நீங்கள் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் (வீட்டினுள்) நுழையுங்கள். நீங்கள் சாப்பிட்டுவிட்டால் (வீட்டிலிருந்து) பிரிந்து (சென்று)விடுங்கள். பேச்சை புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாக இது நபிக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கின்றது. அவர் உங்களிடம் (அதைக் கூற) வெட்கப்படுவார். அல்லாஹ் சத்தியத்திற்கு வெட்கப்படமாட்டான். நீங்கள் அவர்களிடம் (நபியின் மனைவிகளிடம்) (ஏதேனும்) ஒரு பொருளைக் கேட்டால் திரைக்குப் பின்னால் இருந்து அவர்களிடம் கேளுங்கள். அதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் தொந்தரவு தருவதும் அவருக்குப் பின்னர் அவருடைய மனைவிகளை நீங்கள் மணமுடிப்பதும் உங்களுக்கு எப்போதும் ஆகுமானதல்ல. நிச்சயமாக இவை அல்லாஹ்விடம் பெரிய பாவமாக இருக்கின்றது.