Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௧

Qur'an Surah As-Sajdah Verse 11

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قُلْ يَتَوَفّٰىكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِيْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ ࣖ (السجدة : ٣٢)

qul
قُلْ
Say
கூறுவீராக!
yatawaffākum
يَتَوَفَّىٰكُم
"Will take your soul
உங்களை உயிர் கைப்பற்றுவார்
malaku l-mawti
مَّلَكُ ٱلْمَوْتِ
(the) Angel (of) the death
மலக்குல் மவுத்
alladhī
ٱلَّذِى
the one who
எவர்
wukkila
وُكِّلَ
has been put in charge
நியமிக்கப்பட்டார்
bikum
بِكُمْ
of you
உங்களுக்கு
thumma
ثُمَّ
Then
பிறகு
ilā rabbikum
إِلَىٰ رَبِّكُمْ
to your Lord
உங்கள் இறைவனிடம்
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned"
திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Qul yatawaffaakum malakul mawtil lazee wukkila bikum Thumma ilaa rabbikum turja'oon (QS. as-Sajdah:11)

English Sahih International:

Say, "The angel of death who has been entrusted with you will take you. Then to your Lord you will be returned." (QS. As-Sajdah, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் "மலக்குல் மவ்த்து" (என்ற மலக்குத்)தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்." (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) கூறுவீராக! உங்களுக்கு நியமிக்கப்பட்ட மலக்குல் மவுத் (-உயிர் வாங்கும் வானவர்) உங்களை உயிர் கைப்பற்றுவார். பிறகு, உங்கள் இறைவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.