குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௫௧
Qur'an Surah Ar-Rum Verse 51
ஸூரத்துர் ரூம் [௩௦]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَىِٕنْ اَرْسَلْنَا رِيْحًا فَرَاَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوْا مِنْۢ بَعْدِهٖ يَكْفُرُوْنَ (الروم : ٣٠)
- wala-in
- وَلَئِنْ
- But if
- arsalnā
- أَرْسَلْنَا
- We sent
- நாம் அனுப்பினால்
- rīḥan
- رِيحًا
- a wind
- ஒரு காற்றை
- fara-awhu
- فَرَأَوْهُ
- and they see it
- அதை அவர்கள் பார்த்தால்
- muṣ'farran
- مُصْفَرًّا
- turn yellow
- மஞ்சளாக
- laẓallū
- لَّظَلُّوا۟
- certainly they continue
- ஆகிவிடுகின்றனர்
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦ
- after it after it
- அதற்குப் பின்னர்
- yakfurūna
- يَكْفُرُونَ
- (in) disbelief
- நிராகரிக்கின்றவர்களாக
Transliteration:
Wa la'in arsalnaa reehan fara awhu musfarral lazalloo mim ba'dihee yakfuroon(QS. ar-Rūm:51)
English Sahih International:
But if We should send a [bad] wind and they saw [their crops] turned yellow, they would remain thereafter disbelievers. (QS. Ar-Rum, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
(மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்களுடைய பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த நன்றியையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர். (ஸூரத்துர் ரூம், வசனம் ௫௧)
Jan Trust Foundation
ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது அவர்களது விளைச்சலை அழித்து விட்ட பின்னர்) அதை (-அந்த விளைச்சலை) அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அதற்குப் பின்னர் (-அழிந்த பின்னர்) அவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றவர்களாக ஆகிவிடுகின்றனர்.