Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௩௯

Qur'an Surah Ar-Rum Verse 39

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۠ فِيْٓ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ ۚوَمَآ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ (الروم : ٣٠)

wamā ātaytum
وَمَآ ءَاتَيْتُم
And what you give
எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
min riban
مِّن رِّبًا
for usury
அன்பளிப்புகளிலிருந்து
liyarbuwā
لِّيَرْبُوَا۟
to increase
வளர்ச்சி காணுவதற்காக
fī amwāli
فِىٓ أَمْوَٰلِ
in (the) wealth
செல்வங்களில்
l-nāsi
ٱلنَّاسِ
(of) people
மக்களின்
falā yarbū
فَلَا يَرْبُوا۟
not (will) increase
அது வளர்ச்சி காணாது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۖ
with Allah
அல்லாஹ்விடம்
wamā ātaytum
وَمَآ ءَاتَيْتُم
But what you give
எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
min zakatin
مِّن زَكَوٰةٍ
of zakah
தர்மங்களிலிருந்து
turīdūna
تُرِيدُونَ
desiring
நீங்கள் நாடியவர்களாக
wajha
وَجْهَ
(the) Countenance
முகத்தை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
then those [they]
அவர்கள்தான்
l-muḍ'ʿifūna
ٱلْمُضْعِفُونَ
(will) get manifold
பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்

Transliteration:

Wa maaa aataitum mir ribal li yarbuwa feee amwaalin naasi falaa yarboo 'indal laahi wa maaa aataitum min zaakaatin tureedoona wajhal laahi fa ulaaa'ika humul mud'ifoon (QS. ar-Rūm:39)

English Sahih International:

And whatever you give for interest [i.e., advantage] to increase within the wealth of people will not increase with Allah. But what you give in Zakah, desiring the face [i.e., approval] of Allah – those are the multipliers. (QS. Ar-Rum, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். (ஸூரத்துர் ரூம், வசனம் ௩௯)

Jan Trust Foundation

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களின் செல்வங்களில் வளர்ச்சி காணுவதற்காக (பிரதிபலனை எதிர்பார்த்து) அன்பளிப்புகளிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ அது அல்லாஹ்விடம் வளர்ச்சி காணாது. அல்லாஹ்வின் முகத்தை நீங்கள் நாடியவர்களாக தர்மங்களிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ (அதுதான் வளர்ச்சி அடையும். அப்படி கொடுக்கின்ற) அவர்கள்தான் (தங்கள் செல்வங்களையும் நன்மைகளையும்) பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்.