۞ مُنِيْبِيْنَ اِلَيْهِ وَاتَّقُوْهُ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُشْرِكِيْنَۙ ٣١
- munībīna
- مُنِيبِينَ
- முற்றிலும் திரும்பியவர்களாக
- ilayhi
- إِلَيْهِ
- அவன் பக்கம்
- wa-ittaqūhu
- وَٱتَّقُوهُ
- இன்னும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்
- wa-aqīmū
- وَأَقِيمُوا۟
- இன்னும் நிறைவேற்றுங்கள்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- walā takūnū
- وَلَا تَكُونُوا۟
- நீங்கள் ஆகிவிடாதீர்கள்
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களில்
(நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த) ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௧)Tafseer
مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ۗ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ ٣٢
- mina alladhīna
- مِنَ ٱلَّذِينَ
- எவர்களில்
- farraqū
- فَرَّقُوا۟
- பிரித்தார்கள்
- dīnahum
- دِينَهُمْ
- தங்களது மார்க்கத்தை
- wakānū
- وَكَانُوا۟
- இன்னும் ஆகிவிட்டனர்
- shiyaʿan
- شِيَعًاۖ
- பல பிரிவுகளாக
- kullu
- كُلُّ
- ஒவ்வொரு
- ḥiz'bin
- حِزْبٍۭ
- கட்சியும்
- bimā
- بِمَا
- உள்ளதைக் கொண்டு
- ladayhim
- لَدَيْهِمْ
- தங்களிடம்
- fariḥūna
- فَرِحُونَ
- மகிழ்ச்சியடைகின்றனர்
(தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வைகளைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ (அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.) ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௨)Tafseer
وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِيْبِيْنَ اِلَيْهِ ثُمَّ اِذَآ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ ٣٣
- wa-idhā massa
- وَإِذَا مَسَّ
- நேர்ந்தால்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களுக்கு
- ḍurrun
- ضُرٌّ
- ஒரு தீங்கு
- daʿaw
- دَعَوْا۟
- அழைக்கின்றனர்
- rabbahum
- رَبَّهُم
- தங்கள் இறைவனை
- munībīna
- مُّنِيبِينَ
- முற்றிலும் திரும்பியவர்களாக
- ilayhi
- إِلَيْهِ
- அவன் பக்கம்
- thumma idhā adhāqahum
- ثُمَّ إِذَآ أَذَاقَهُم
- பிறகு/அவன் சுவைக்க வைத்தால்/அவர்களுக்கு
- min'hu
- مِّنْهُ
- தன்புறத்திலிருந்து
- raḥmatan
- رَحْمَةً
- அருளை
- idhā farīqun
- إِذَا فَرِيقٌ
- அப்போது ஒரு சாரார்
- min'hum
- مِّنْهُم
- அவர்களில்
- birabbihim
- بِرَبِّهِمْ
- தங்கள் இறைவனுக்கு
- yush'rikūna
- يُشْرِكُونَ
- இணைவைக்கின்றனர்
மனிதர்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பின்னர் அவன் (அதனை நீக்கி) அவர்களைத் தன்னுடைய அருளைச் சுவைக்கும்படிச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்களுடைய இறைவனுக்கே இணை வைக்கின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௩)Tafseer
لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۗ فَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ تَعْلَمُوْنَ ٣٤
- liyakfurū
- لِيَكْفُرُوا۟
- நிராகரிப்பதற்காக
- bimā ātaynāhum
- بِمَآ ءَاتَيْنَٰهُمْۚ
- நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
- fatamattaʿū
- فَتَمَتَّعُوا۟
- ஆகவே சுகமனுபவியுங்கள்
- fasawfa taʿlamūna
- فَسَوْفَ تَعْلَمُونَ
- நீங்கள் அறிவீர்கள்
அன்றி, நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப் லிபவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பயனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௪)Tafseer
اَمْ اَنْزَلْنَا عَلَيْهِمْ سُلْطٰنًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوْا بِهٖ يُشْرِكُوْنَ ٣٥
- am
- أَمْ
- அல்லது
- anzalnā
- أَنزَلْنَا
- நாம் இறக்கினோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- sul'ṭānan
- سُلْطَٰنًا
- ஓர் ஆதாரத்தை
- fahuwa
- فَهُوَ
- அது
- yatakallamu
- يَتَكَلَّمُ
- பேசுகிறதா
- bimā
- بِمَا
- எதைப் பற்றி
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- bihi
- بِهِۦ
- அவனுக்கு
- yush'rikūna
- يُشْرِكُونَ
- இணை வைப்பவர்களாக
அவர்கள் இணைவைத்து வணங்குவதற்கு ஆதாரமாகக் கூறக்கூடிய யாதொரு அத்தாட்சியையும் நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? (அவ்வாறு ஒன்றும் இல்லை.) ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௫)Tafseer
وَاِذَآ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَاۗ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ ٣٦
- wa-idhā adhaqnā
- وَإِذَآ أَذَقْنَا
- நாம் சுவைக்க வைத்தால்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களுக்கு
- raḥmatan
- رَحْمَةً
- அருளை
- fariḥū
- فَرِحُوا۟
- மகிழ்ச்சியடைகின்றனர்
- bihā
- بِهَاۖ
- அதனால்
- wa-in tuṣib'hum
- وَإِن تُصِبْهُمْ
- அவர்களை அடைந்தால்
- sayyi-atun
- سَيِّئَةٌۢ
- ஒரு தீமை
- bimā qaddamat
- بِمَا قَدَّمَتْ
- முற்படுத்தியவற்றினால்
- aydīhim
- أَيْدِيهِمْ
- அவர்களின் கரங்கள்
- idhā hum
- إِذَا هُمْ
- அப்போது அவர்கள்
- yaqnaṭūna
- يَقْنَطُونَ
- நிராசையடைந்து விடுகின்றனர்
மனிதர்கள் நம்முடைய அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு யாதொரு தீங்கேற்படும் பட்சத்தில் உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௬)Tafseer
اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٣٧
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- இவர்கள் பார்க்க வேண்டாமா?
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yabsuṭu
- يَبْسُطُ
- விசாலமாக்குகின்றான்
- l-riz'qa
- ٱلرِّزْقَ
- உணவை
- liman yashāu
- لِمَن يَشَآءُ
- தான் நாடியவர்களுக்கு
- wayaqdiru
- وَيَقْدِرُۚ
- இன்னும் சுருக்குகின்றான்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் இருக்கின்றன
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கின்றனர்
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்து விடுகின்றான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௭)Tafseer
فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِۗ ذٰلِكَ خَيْرٌ لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ ۖوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٣٨
- faāti
- فَـَٔاتِ
- ஆகவே கொடுப்பீராக!
- dhā l-qur'bā
- ذَا ٱلْقُرْبَىٰ
- உறவினருக்கு
- ḥaqqahu
- حَقَّهُۥ
- அவருடைய உரிமையை
- wal-mis'kīna
- وَٱلْمِسْكِينَ
- இன்னும் வறியவருக்கு
- wa-ib'na l-sabīli
- وَٱبْنَ ٱلسَّبِيلِۚ
- இன்னும் வழிப்போக்கருக்கு
- dhālika
- ذَٰلِكَ
- இதுதான்
- khayrun
- خَيْرٌ
- சிறந்ததாகும்.
- lilladhīna yurīdūna
- لِّلَّذِينَ يُرِيدُونَ
- நாடுவோருக்கு
- wajha
- وَجْهَ
- முகத்தை
- l-lahi
- ٱللَّهِۖ
- அல்லாஹ்வின்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- இவர்கள்தான்
- l-muf'liḥūna
- ٱلْمُفْلِحُونَ
- வெற்றியாளர்கள்
(நபியே! உங்களது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வாருங்கள். அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய உரிமையைக் கொடுத்து வாருங்கள்). எவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௮)Tafseer
وَمَآ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۠ فِيْٓ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ ۚوَمَآ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ ٣٩
- wamā ātaytum
- وَمَآ ءَاتَيْتُم
- எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
- min riban
- مِّن رِّبًا
- அன்பளிப்புகளிலிருந்து
- liyarbuwā
- لِّيَرْبُوَا۟
- வளர்ச்சி காணுவதற்காக
- fī amwāli
- فِىٓ أَمْوَٰلِ
- செல்வங்களில்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களின்
- falā yarbū
- فَلَا يَرْبُوا۟
- அது வளர்ச்சி காணாது
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِۖ
- அல்லாஹ்விடம்
- wamā ātaytum
- وَمَآ ءَاتَيْتُم
- எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
- min zakatin
- مِّن زَكَوٰةٍ
- தர்மங்களிலிருந்து
- turīdūna
- تُرِيدُونَ
- நீங்கள் நாடியவர்களாக
- wajha
- وَجْهَ
- முகத்தை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-muḍ'ʿifūna
- ٱلْمُضْعِفُونَ
- பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்
(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௯)Tafseer
اَللّٰهُ الَّذِيْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْۗ هَلْ مِنْ شُرَكَاۤىِٕكُمْ مَّنْ يَّفْعَلُ مِنْ ذٰلِكُمْ مِّنْ شَيْءٍۗ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ࣖ ٤٠
- al-lahu alladhī
- ٱللَّهُ ٱلَّذِى
- அல்லாஹ்தான்
- khalaqakum
- خَلَقَكُمْ
- உங்களைப் படைத்தான்
- thumma razaqakum
- ثُمَّ رَزَقَكُمْ
- பிறகு/அவன் உங்களுக்கு உணவளித்தான்
- thumma yumītukum
- ثُمَّ يُمِيتُكُمْ
- பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை
- thumma yuḥ'yīkum
- ثُمَّ يُحْيِيكُمْۖ
- பிறகு/அவன் உங்களை உயிர்ப்பிப்பான்
- hal
- هَلْ
- ?
- min shurakāikum
- مِن شُرَكَآئِكُم
- உங்கள் தெய்வங்களில் (இருக்கின்றாரா)
- man yafʿalu
- مَّن يَفْعَلُ
- செய்கின்றவர்
- min dhālikum
- مِن ذَٰلِكُم
- இவற்றில்
- min shayin
- مِّن شَىْءٍۚ
- எதையும்
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥ
- அவன் மிகப் பரிசுத்தமானவன்
- wataʿālā
- وَتَعَٰلَىٰ
- இன்னும் அவன் மிக உயர்ந்தவன்
- ʿammā yush'rikūna
- عَمَّا يُشْرِكُونَ
- அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையும் செய்யக்கூடிய சக்தி உங்கள் தெய்வங்களில் எதற்கும் உண்டோ? இவர்கள் செய்யும் (இத்தகைய) இணைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்; பரிசுத்தமானவன். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௦)Tafseer