Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௬

Qur'an Surah Al-'Ankabut Verse 46

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَلَا تُجَادِلُوْٓا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِيْ هِيَ اَحْسَنُۖ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ وَقُوْلُوْٓا اٰمَنَّا بِالَّذِيْٓ اُنْزِلَ اِلَيْنَا وَاُنْزِلَ اِلَيْكُمْ وَاِلٰهُنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ (العنكبوت : ٢٩)

walā tujādilū
وَلَا تُجَٰدِلُوٓا۟
And (do) not argue
தர்க்கம் செய்யாதீர்கள்
ahla l-kitābi
أَهْلَ ٱلْكِتَٰبِ
(with the) People of the Book (with the) People of the Book
வேதமுடையவர்களிடம்
illā
إِلَّا
except
அன்றி
bi-allatī hiya
بِٱلَّتِى هِىَ
by which [it]
முறையில்/அது
aḥsanu
أَحْسَنُ
(is) best
மிக அழகியது
illā
إِلَّا
except
தவிர
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
those who (do) wrong
அநியாயக்காரர்களை
min'hum
مِنْهُمْۖ
among them
அவர்களில் இருக்கின்ற
waqūlū
وَقُولُوٓا۟
and say
இன்னும் நீங்கள் கூறுங்கள்
āmannā
ءَامَنَّا
"We believe
நம்பிக்கை கொண்டோம்
bi-alladhī unzila
بِٱلَّذِىٓ أُنزِلَ
in that (which) has been revealed
இறக்கப்பட்டதையும்
ilaynā
إِلَيْنَا
to us
எங்களுக்கு
wa-unzila
وَأُنزِلَ
and was revealed
இறக்கப்பட்டதையும்
ilaykum
إِلَيْكُمْ
to you
உங்களுக்கு
wa-ilāhunā
وَإِلَٰهُنَا
And our God
எங்கள் கடவுளும்
wa-ilāhukum
وَإِلَٰهُكُمْ
and your God
உங்கள் கடவுளும்
wāḥidun
وَٰحِدٌ
(is) One
ஒருவன்தான்
wanaḥnu
وَنَحْنُ
and we
நாங்கள்
lahu
لَهُۥ
to Him
அவனுக்குத்தான்
mus'limūna
مُسْلِمُونَ
submit"
கீழ்ப்பணிந்தவர்கள்

Transliteration:

Wa laa tujaadilooo Ahlal Kitaabi illaa billatee hiya ahsanu illal lazeena zalamoo minhum wa qoolooo aamannaa billazeee unzila ilainaa wa unzila ilaikum wa illaahunna wa illahukum waahidunw-wa nahnu lahoo muslimoon (QS. al-ʿAnkabūt:46)

English Sahih International:

And do not argue with the People of the Scripture except in a way that is best, except for those who commit injustice among them, and say, "We believe in that which has been revealed to us and revealed to you. And our God and your God is one; and we are Muslims [in submission] to Him." (QS. Al-'Ankabut, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர் களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலன்றி அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) "எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்ற படியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிப்பட்டு நடக்கின்றோம்" என்றும் கூறுங்கள்! (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௬)

Jan Trust Foundation

இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதமுடையவர்களிடம் மிக அழகிய முறையில் அன்றி தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களில் இருக்கின்ற அநியாயக்காரர்களைத் தவிர. (அவர்கள் உங்களிடம் போர்தொடுத்தால் நீங்களும் அவர்களிடம் போரிடுங்கள்.) இன்னும், நீங்கள் கூறுங்கள்: எங்களுக்கு இறக்கப்பட்டதையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒருவன்தான். நாங்கள் அவனுக்குத்தான் கீழ்ப்பணிந்தவர்கள்.