Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩௮

Qur'an Surah Al-'Ankabut Verse 38

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَعَادًا وَّثَمُوْدَا۟ وَقَدْ تَّبَيَّنَ لَكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْۗ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ وَكَانُوْا مُسْتَبْصِرِيْنَ ۙ (العنكبوت : ٢٩)

waʿādan
وَعَادًا
And Aad
இன்னும் ஆதை
wathamūdā
وَثَمُودَا۟
and Thamud
இன்னும் சமூதை
waqad tabayyana
وَقَد تَّبَيَّنَ
and verily (has) become clear
தெளிவாக இருக்கின்றது
lakum
لَكُم
to you
உங்களுக்கு
min masākinihim
مِّن مَّسَٰكِنِهِمْۖ
from their dwellings
அவர்களின் தங்குமிடங்களில் இருந்து
wazayyana
وَزَيَّنَ
And made fair-seeming
அலங்கரித்தான்
lahumu
لَهُمُ
to them
அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
their deeds
அவர்களின் செயல்களை
faṣaddahum
فَصَدَّهُمْ
and averted them
தடுத்தான் அவர்களை
ʿani l-sabīli
عَنِ ٱلسَّبِيلِ
from the Way
பாதையிலிருந்து
wakānū
وَكَانُوا۟
though they were
அவர்கள் இருந்தனர்
mus'tabṣirīna
مُسْتَبْصِرِينَ
endowed with insight
தெளிவானவர்களாக

Transliteration:

Wa 'Aadanw wa Samooda wa qat tabaiyana lakum mim masaakinihim wa zaiyana lahumush Shaitaanu a'maalahum fasaddahum 'anis sabeeli wa kaanoo mustabsireen (QS. al-ʿAnkabūt:38)

English Sahih International:

And [We destroyed] Aad and Thamud, and it has become clear to you from their [ruined] dwellings. And Satan had made pleasing to them their deeds and averted them from the path, and they were endowed with perception. (QS. Al-'Ankabut, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போக வர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயலையே ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர் களாகத்தான் இருந்தார்கள். (ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்.) (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩௮)

Jan Trust Foundation

இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன; ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் ஆதை, சமூதை நினைவு கூருங்கள்! அவர்களின் தங்குமிடங்களில் இருந்து உங்களுக்கு (அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது) தெளிவாக இருக்கின்றது. ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் செயல்களை அலங்கரித்தான். அவர்களை (நேரான) பாதையிலிருந்து தடுத்தான். அவர்கள் (தங்கள் வழிகேட்டில்) தெளிவானவர்களாக (-தற்பெருமையுடையவர்களாக) இருந்தனர்.