Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௮

Qur'an Surah Al-'Ankabut Verse 18

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ ۗوَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ (العنكبوت : ٢٩)

wa-in tukadhibū
وَإِن تُكَذِّبُوا۟
And if you deny
நீங்கள் பொய்ப்பித்தால்
faqad
فَقَدْ
then verily
திட்டமாக
kadhaba
كَذَّبَ
denied
பொய்ப்பித்துள்ளனர்
umamun
أُمَمٌ
(the) nations
பல சமுதாயத்தினர்
min qablikum
مِّن قَبْلِكُمْۖ
before you before you
உங்களுக்கு முன்னர்
wamā
وَمَا
And not
வேறில்லை
ʿalā
عَلَى
(is) on
மீது
l-rasūli
ٱلرَّسُولِ
the Messenger
தூதர்
illā
إِلَّا
except
தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُ
the conveyance
எடுத்துரைத்தலே
l-mubīnu
ٱلْمُبِينُ
clear"
தெளிவான

Transliteration:

Wa in tukazziboo faqad kazzaba umamum min qablikum wa maa'alar Rasooli illal balaaghul mubeen (QS. al-ʿAnkabūt:18)

English Sahih International:

And if you [people] deny [the message] – already nations before you have denied. And there is not upon the Messenger except [the duty of] clear notification. (QS. Al-'Ankabut, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(இப்ராஹீமே! மக்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். அவர் நம்முடைய தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதை தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது அத்தூதர்) மீது கடமையில்லை. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௧௮)

Jan Trust Foundation

இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் பல சமுதாயத்தினர் திட்டமாக பொய்ப்பித்துள்ளனர். தூதர்மீது தெளிவான எடுத்துரைத்தலே தவிர வேறில்லை.