Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்கபூத் - Page: 5

Al-'Ankabut

(al-ʿAnkabūt)

௪௧

مَثَلُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَاۤءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِۚ اِتَّخَذَتْ بَيْتًاۗ وَاِنَّ اَوْهَنَ الْبُيُوْتِ لَبَيْتُ الْعَنْكَبُوْتِۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ٤١

mathalu
مَثَلُ
உதாரணம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
ஆக்கிக் கொண்டனர்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
awliyāa
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களாக
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போல
l-ʿankabūti
ٱلْعَنكَبُوتِ
சிலந்தியின்
ittakhadhat
ٱتَّخَذَتْ
அது ஆக்கிக் கொண்டது
baytan
بَيْتًاۖ
ஒரு வீட்டை
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
awhana
أَوْهَنَ
மிக பலவீனமானது
l-buyūti
ٱلْبُيُوتِ
வீடுகளில்
labaytu
لَبَيْتُ
வீடே
l-ʿankabūti
ٱلْعَنكَبُوتِۖ
சிலந்தியின்
law kānū yaʿlamūna
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
அல்லாஹ்வையன்றி (மற்றவைகளைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கின்றது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களாலும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௧)
Tafseer
௪௨

اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَيْءٍۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٤٢

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிகின்றான்
mā yadʿūna
مَا يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றவற்றை
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
min shayin
مِن شَىْءٍۚ
எதுவாக இருந்தாலும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
அல்லாஹ்வையன்றி அவர்கள் எவைகளை (இறைவனென) அழைக்கின்றார்களோ, அவைகளை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவைகளுக்கு யாதொரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௨)
Tafseer
௪௩

وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِۚ وَمَا يَعْقِلُهَآ اِلَّا الْعَالِمُوْنَ ٤٣

watil'ka
وَتِلْكَ
இந்த
l-amthālu
ٱلْأَمْثَٰلُ
உதாரணங்கள்
naḍribuhā
نَضْرِبُهَا
அவற்றை நாம் விவரிக்கிறோம்
lilnnāsi
لِلنَّاسِۖ
மக்களுக்கு
wamā yaʿqiluhā
وَمَا يَعْقِلُهَآ
இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
l-ʿālimūna
ٱلْعَٰلِمُونَ
அறிஞர்களை
மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதனை உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௩)
Tafseer
௪௪

خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّلْمُؤْمِنِيْنَ ࣖ ۔ ٤٤

khalaqa
خَلَقَ
படைத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையான காரணத்திற்கே
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyatan
لَءَايَةً
ஓர் அத்தாட்சி இருக்கிறது
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
வானங்களையும் பூமியையும் படைத்தவன் மெய்யாகவே அல்லாஹ்தான். (வேறொருவருமன்று.) நம்பிக்கை கொண்டவர் களுக்கு நிச்சயமாக இவைகளிலும் (பல) அத்தாட்சி(கள்) இருக்கின்றன. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௪)
Tafseer
௪௫

اُتْلُ مَآ اُوْحِيَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَۗ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَاۤءِ وَالْمُنْكَرِ ۗوَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ۗوَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ ٤٥

ut'lu
ٱتْلُ
ஓதுவீராக!
mā ūḥiya
مَآ أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டதை
ilayka
إِلَيْكَ
உமக்கு
mina l-kitābi
مِنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
wa-aqimi
وَأَقِمِ
இன்னும் நிலைநிறுத்துவீராக
l-ṣalata
ٱلصَّلَوٰةَۖ
தொழுகையை
inna
إِنَّ
நிச்சயமாக
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகை
tanhā
تَنْهَىٰ
தடுக்கிறது
ʿani l-faḥshāi
عَنِ ٱلْفَحْشَآءِ
மானக்கேடானவற்றை விட்டும்
wal-munkari
وَٱلْمُنكَرِۗ
தீயகாரியங்களை விட்டும்
waladhik'ru
وَلَذِكْرُ
நினைவு கூர்வது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
akbaru
أَكْبَرُۗ
மிகப் பெரியது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிகின்றான்
mā taṣnaʿūna
مَا تَصْنَعُونَ
நீங்கள் செய்பவற்றை
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௫)
Tafseer
௪௬

۞ وَلَا تُجَادِلُوْٓا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِيْ هِيَ اَحْسَنُۖ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ وَقُوْلُوْٓا اٰمَنَّا بِالَّذِيْٓ اُنْزِلَ اِلَيْنَا وَاُنْزِلَ اِلَيْكُمْ وَاِلٰهُنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ٤٦

walā tujādilū
وَلَا تُجَٰدِلُوٓا۟
தர்க்கம் செய்யாதீர்கள்
ahla l-kitābi
أَهْلَ ٱلْكِتَٰبِ
வேதமுடையவர்களிடம்
illā
إِلَّا
அன்றி
bi-allatī hiya
بِٱلَّتِى هِىَ
முறையில்/அது
aḥsanu
أَحْسَنُ
மிக அழகியது
illā
إِلَّا
தவிர
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களை
min'hum
مِنْهُمْۖ
அவர்களில் இருக்கின்ற
waqūlū
وَقُولُوٓا۟
இன்னும் நீங்கள் கூறுங்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bi-alladhī unzila
بِٱلَّذِىٓ أُنزِلَ
இறக்கப்பட்டதையும்
ilaynā
إِلَيْنَا
எங்களுக்கு
wa-unzila
وَأُنزِلَ
இறக்கப்பட்டதையும்
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
wa-ilāhunā
وَإِلَٰهُنَا
எங்கள் கடவுளும்
wa-ilāhukum
وَإِلَٰهُكُمْ
உங்கள் கடவுளும்
wāḥidun
وَٰحِدٌ
ஒருவன்தான்
wanaḥnu
وَنَحْنُ
நாங்கள்
lahu
لَهُۥ
அவனுக்குத்தான்
mus'limūna
مُسْلِمُونَ
கீழ்ப்பணிந்தவர்கள்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர் களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலன்றி அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) "எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்ற படியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிப்பட்டு நடக்கின்றோம்" என்றும் கூறுங்கள்! ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௬)
Tafseer
௪௭

وَكَذٰلِكَ اَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَۗ فَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يُؤْمِنُوْنَ بِهٖۚ وَمِنْ هٰٓؤُلَاۤءِ مَنْ يُّؤْمِنُ بِهٖۗ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَآ اِلَّا الْكٰفِرُوْنَ ٤٧

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
anzalnā
أَنزَلْنَآ
நாம் இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَۚ
இவ்வேதத்தை
fa-alladhīna ātaynāhumu
فَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
bihi
بِهِۦۖ
இதை
wamin hāulāi
وَمِنْ هَٰٓؤُلَآءِ
இன்னும் இவர்களில்
man yu'minu bihi
مَن يُؤْمِنُ بِهِۦۚ
நம்பிக்கை கொள்கின்றவர்களும்/இதை
wamā yajḥadu
وَمَا يَجْحَدُ
மறுக்க மாட்டார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நமது வசனங்களை
illā
إِلَّا
தவிர
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களை
(நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உங்களுக்கு இவ்வேதத்தை அருளியிருக்கின்றோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க) ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். அன்றி, (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதனை நம்பிக்கை கொள்கின்றனர். (மனமுரண்டாக நிராகரிக்கும்) காஃபிர்களைத் தவிர (மற்ற எவரும்) நம்முடைய வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௭)
Tafseer
௪௮

وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِيَمِيْنِكَ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ ٤٨

wamā kunta
وَمَا كُنتَ
நீர் இல்லை
tatlū
تَتْلُوا۟
ஓதுபவராக
min qablihi
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்
min kitābin
مِن كِتَٰبٍ
ஒரு வேதத்தை
walā takhuṭṭuhu
وَلَا تَخُطُّهُۥ
இன்னும் அதை எழுதுபவராகவும் இல்லை
biyamīnika
بِيَمِينِكَۖ
உமது வலக்கரத்தால்
idhan
إِذًا
அப்படி இருந்திருந்தால்
la-ir'tāba
لَّٱرْتَابَ
நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்
l-mub'ṭilūna
ٱلْمُبْطِلُونَ
வீணர்கள்
(நபியே!) நீங்கள் இதற்கு முன்னர் யாதொரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உங்களுடைய கையால் நீங்கள் அதனை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதனை நீங்கள் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௮)
Tafseer
௪௯

بَلْ هُوَ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ فِيْ صُدُوْرِ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَۗ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَآ اِلَّا الظّٰلِمُوْنَ ٤٩

bal
بَلْ
மாறாக,
huwa
هُوَ
இது
āyātun
ءَايَٰتٌۢ
அத்தாட்சிகளாகும்
bayyinātun
بَيِّنَٰتٌ
தெளிவான
fī ṣudūri
فِى صُدُورِ
நெஞ்சங்களில்
alladhīna ūtū
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்களின்
l-ʿil'ma
ٱلْعِلْمَۚ
கல்வி
wamā yajḥadu
وَمَا يَجْحَدُ
மறுக்க மாட்டார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நமது வசனங்களை
illā
إِلَّا
தவிர
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்களை
அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இது பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய இவ்வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௯)
Tafseer
௫௦

وَقَالُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيٰتٌ مِّنْ رَّبِّهٖ ۗ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ ۗوَاِنَّمَآ اَنَا۠ نَذِيْرٌ مُّبِيْنٌ ٥٠

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறினர்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
இவர் மீது
āyātun
ءَايَٰتٌ
அத்தாட்சிகள்
min rabbihi
مِّن رَّبِّهِۦۖ
அவரது இறைவனிடமிருந்து
qul
قُلْ
கூறுவீராக!
innamā
إِنَّمَا
எல்லாம்
l-āyātu
ٱلْءَايَٰتُ
அத்தாட்சிகள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
wa-innamā
وَإِنَّمَآ
எல்லாம்
anā
أَنَا۠
நான்
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளர்தான்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
அன்றி ("தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை.) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்." ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௦)
Tafseer