Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭௫

Qur'an Surah Al-Qasas Verse 75

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْٓا اَنَّ الْحَقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ (القصص : ٢٨)

wanazaʿnā
وَنَزَعْنَا
And We will draw forth
நாம் கொண்டு வருவோம்
min kulli
مِن كُلِّ
from every
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
nation
சமுதாயத்திலிருந்து
shahīdan
شَهِيدًا
a witness
ஒரு சாட்சியாளரை
faqul'nā
فَقُلْنَا
and We will say
பிறகு, கூறுவோம்
hātū
هَاتُوا۟
"Bring
கொண்டு வாருங்கள்
bur'hānakum
بُرْهَٰنَكُمْ
your proof?"
உங்கள் ஆதாரங்களை
faʿalimū
فَعَلِمُوٓا۟
Then they will know
அறிந்துகொள்வார்கள்
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-ḥaqa
ٱلْحَقَّ
the truth
உண்மை
lillahi
لِلَّهِ
(is) for Allah
அல்லாஹ்விற்கே
waḍalla
وَضَلَّ
and (will be) lost
தவறிவிடும்
ʿanhum
عَنْهُم
from them
அவர்களை விட்டு
mā kānū yaftarūna
مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
what they used (to) invent
அவர்கள் பொய்யாக கற்பனைசெய்து கொண்டிருந்தவை

Transliteration:

Wa naza'naa min kulli ummatin shaheedan faqulnaa haatoo burhaanakum fa'alimooo annal haqqa lillaahi wa dalla 'anhum maa kaanoo yaftaroon (QS. al-Q̈aṣaṣ:75)

English Sahih International:

And We will extract from every nation a witness and say, "Produce your proof," and they will know that the truth belongs to Allah, and lost from them is that which they used to invent. (QS. Al-Qasas, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம்முடைய தூதர்களை) அவர்களுக்கு சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி "என்னை அல்லாதவர்களையும் தெய்வங்களென நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக்கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மையான இறைத் தன்மை அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭௫)

Jan Trust Foundation

இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வைத்துக் கொண்டு (முஷ்ரிக்குகளை நோக்கி) “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்கே சொந்த மென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை (-அதன் தூதரை) நாம் கொண்டு வருவோம். பிறகு, உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறுவோம். அவர்கள், “நிச்சயமாக உண்மை(யான ஆதாரம்) அல்லாஹ் விற்கே உரியது” என்று அறிந்து கொள்வார்கள். அவர்கள் பொய்யாக கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு தவறிவிடும்.