Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭

Qur'an Surah Al-Qasas Verse 7

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَوْحَيْنَآ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَلْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِيْ وَلَا تَحْزَنِيْ ۚاِنَّا رَاۤدُّوْهُ اِلَيْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ (القصص : ٢٨)

wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
And We inspired
நாம் உள்ளத்தில் போட்டோம்
ilā ummi
إِلَىٰٓ أُمِّ
[to] (the) mother
தாயாருக்கு
mūsā
مُوسَىٰٓ
(of) Musa
மூஸாவின்
an arḍiʿīhi
أَنْ أَرْضِعِيهِۖ
that "Suckle him
நீ அவருக்கு பாலூட்டு!
fa-idhā khif'ti
فَإِذَا خِفْتِ
but when you fear
நீ பயந்தால்
ʿalayhi
عَلَيْهِ
for him
அவரை
fa-alqīhi
فَأَلْقِيهِ
then cast him
அவரை எரிந்து விடு
fī l-yami
فِى ٱلْيَمِّ
in(to) the river
கடலில்
walā takhāfī
وَلَا تَخَافِى
and (do) not fear
நீ பயப்படாதே!
walā taḥzanī
وَلَا تَحْزَنِىٓۖ
and (do) not grieve
இன்னும் நீ கவலைப்படாதே!
innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
rāddūhu
رَآدُّوهُ
(will) restore him
அவரை திரும்பக் கொண்டு வருவோம்
ilayki
إِلَيْكِ
to you
உம்மிடம்
wajāʿilūhu
وَجَاعِلُوهُ
and (will) make him
இன்னும் , அவரை ஆக்குவோம்
mina l-mur'salīna
مِنَ ٱلْمُرْسَلِينَ
of the Messengers"
தூதர்களில்

Transliteration:

Wa awhainaaa ilaaa ummi Moosaaa an ardi'eehi faizaa khifti 'alaihi fa alqeehi filyammi wa laa takhaafee wa laa tahzaneee innaa raaaddoohu ilaiki wa jaa'iloohu minal mursaleen (QS. al-Q̈aṣaṣ:7)

English Sahih International:

And We inspired to the mother of Moses, "Suckle him; but when you fear for him, cast him into the river and do not fear and do not grieve. Indeed, We will return him to you and will make him [one] of the messengers." (QS. Al-Qasas, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன்னுடைய இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹீ மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக்கொண்டு) "அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை நம்முடைய தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்" (என்று அறிவித்தோம்.) (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭)

Jan Trust Foundation

நாம் மூஸாவின் தாயாருக்கு| “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூசாவின் தாயாருக்கு (மூசாவை அவர் பெற்றெடுத்த பின்னர்) நாம் உள்ளத்தில் போட்டோம்: “நீ அவருக்கு (-குழந்தை மூசாவிற்கு) பாலூட்டு! அவர் மீது (எதிரிகளின் பார்வை பட்டுவிடும் என்று) நீ பயந்தால் அவரை கடலில் எரிந்து விடு! பயப்படாதே! கவலைப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் திரும்பக் கொண்டு வருவோம். இன்னும், அவரை தூதர்களில் (ஒருவராக) ஆக்குவோம்.