Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௮

Qur'an Surah Al-Qasas Verse 48

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَآ اُوْتِيَ مِثْلَ مَآ اُوْتِيَ مُوْسٰىۗ اَوَلَمْ يَكْفُرُوْا بِمَآ اُوْتِيَ مُوْسٰى مِنْ قَبْلُۚ قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَاۗ وَقَالُوْٓا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ (القصص : ٢٨)

falammā
فَلَمَّا
But when
வந்த போது
jāahumu
جَآءَهُمُ
came to them
அவர்களுக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
the truth
சத்திய தூதர்
min ʿindinā
مِنْ عِندِنَا
from Us from Us
நம்மிடமிருந்து
qālū
قَالُوا۟
they said
கூறினர்
lawlā ūtiya
لَوْلَآ أُوتِىَ
"Why not he was given
வழங்கப்பட்டிருக்க வேண்டாமா!
mith'la
مِثْلَ
(the) like
போன்ற
mā ūtiya
مَآ أُوتِىَ
(of) what was given
வழங்கப்பட்டதை
mūsā
مُوسَىٰٓۚ
(to) Musa?"
மூஸாவிற்கு
awalam yakfurū
أَوَلَمْ يَكْفُرُوا۟
Did not they disbelieve
இவர்கள் மறுக்கவில்லையா?
bimā ūtiya
بِمَآ أُوتِىَ
in what was given
வழங்கப்பட்டதை
mūsā
مُوسَىٰ
(to) Musa
மூஸாவிற்கு
min qablu
مِن قَبْلُۖ
before? before?
இதற்கு முன்னர்
qālū
قَالُوا۟
They said
கூறினர்
siḥ'rāni
سِحْرَانِ
"Two magic (works)
இரண்டு சூனியங்களாகும்
taẓāharā
تَظَٰهَرَا
supporting each other"
தங்களுக்குள் உதவி செய்தனர்
waqālū
وَقَالُوٓا۟
And they said
அவர்கள் கூறினர்
innā
إِنَّا
"Indeed, we
நிச்சயமாக நாங்கள்
bikullin
بِكُلٍّ
in all
அனைத்தையும்
kāfirūna
كَٰفِرُونَ
(are) disbelievers"
மறுப்பவர்கள்தான்

Transliteration:

Falammaa jaaa'ahumul haqqu min 'indinaa qaaloo law laa ootiya misla maaa ootiyaa Moosaa; awalam yakfuroo bimaaa ootiya Moosaa min qablu qaaloo sihraani tazaaharaa wa qaalooo innaa bikullin kaafiroon (QS. al-Q̈aṣaṣ:48)

English Sahih International:

But when the truth came to them from Us, they said, "Why was he not given like that which was given to Moses?" Did they not disbelieve in that which was given to Moses before? They said, "[They are but] two works of magic supporting each other, and indeed we are, in both, disbelievers." (QS. Al-Qasas, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதனை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக இவர்கள் "மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்துவிட வில்லையா? "(மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்" என்றும் கூறினார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௮)

Jan Trust Foundation

எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்| (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்| “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்மிடமிருந்து சத்திய தூதர் அவர்களுக்கு வந்தபோது, “அவர் (-அந்த தூதர்) மூசாவிற்கு வழங்கப்பட்டதை (-மூஸாவின் வேதம்) போன்ற (வேதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க வேண்டாமா! என்று கூறினர். இதற்கு முன்னர் மூசாவிற்கு வழங்கப்பட்டதை இவர்கள் (-இந்த யூதர்கள்) மறுக்கவில்லையா? அவர்கள் (அந்த யூதர்கள்) கூறினர்: (மூசாவின் வேதமும் ஈசாவின் வேதமும் இவை இரண்டும்) தங்களுக்குள் உதவி செய்த இரண்டு சூனியங்களாகும். (உமக்கு வேதம் வழங்கப்பட்ட பின்னர்) அவர்கள் கூறினர்: “நிச்சயமாக நாங்கள் (மூசா, ஈசா, முஹம்மது ஆகியோரின் வேதங்கள்) அனைத்தையும் மறுப்பவர்கள்தான்.