Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௩

Qur'an Surah Al-Qasas Verse 23

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا وَرَدَ مَاۤءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ ەۖ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِۚ قَالَ مَا خَطْبُكُمَا ۗقَالَتَا لَا نَسْقِيْ حَتّٰى يُصْدِرَ الرِّعَاۤءُ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ (القصص : ٢٨)

walammā warada
وَلَمَّا وَرَدَ
And when he came
அவர் வந்தபோது
māa
مَآءَ
(to the) water
நீர்நிலைக்கு
madyana
مَدْيَنَ
(of) Madyan
மத்யனுடைய
wajada
وَجَدَ
he found
கண்டார்
ʿalayhi
عَلَيْهِ
on it
அதனருகில்
ummatan
أُمَّةً
a group
ஒரு கூட்டம்
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِ
of men
மக்களில்
yasqūna
يَسْقُونَ
watering
அவர்கள் நீர் புகட்டுகின்றனர்
wawajada
وَوَجَدَ
and he found
கண்டார்
min dūnihimu
مِن دُونِهِمُ
besides them besides them
அவர்கள் அன்றி
im'ra-atayni
ٱمْرَأَتَيْنِ
two women
இரண்டு பெண்களையும்
tadhūdāni
تَذُودَانِۖ
keeping back
தடுத்துக் கொண்டிருந்தனர்
qāla
قَالَ
He said
அவர் கேட்டார்
mā khaṭbukumā
مَا خَطْبُكُمَاۖ
"What (is the) matter with both of you?"
உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?
qālatā
قَالَتَا
They said
அவ்விருவரும்கூறினர்
lā nasqī
لَا نَسْقِى
"We cannot water "We cannot water
நாங்கள் நீர் புகட்ட மாட்டோம்
ḥattā
حَتَّىٰ
until
வரை
yuṣ'dira
يُصْدِرَ
take away
வெளியேற்றாத
l-riʿāu
ٱلرِّعَآءُۖ
the shepherds
மேய்ப்பவர்கள்
wa-abūnā
وَأَبُونَا
and our father
எங்கள் தந்தையோ
shaykhun
شَيْخٌ
(is) a very old man"
வயதான
kabīrun
كَبِيرٌ
(is) a very old man"
பெரியவர்

Transliteration:

Wa lammaa warada maaa'a Madyana wajada 'alaihi ummatam minannaasi yasqoona wa wajada min doonihimum ra ataini tazoodaani qaala maa khatubkumaa qaalataa laa nasqee hataa yusdirar ri'aaa'u wa aboonaa shaikhun kabeer (QS. al-Q̈aṣaṣ:23)

English Sahih International:

And when he came to the water [i.e., well] of Madyan, he found there a crowd of people watering [their flocks], and he found aside from them two women holding back [their flocks]. He said, "What is your circumstance?" They said, "We do not water until the shepherds dispatch [their flocks]; and our father is an old man." (QS. Al-Qasas, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி) லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) "உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)" என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் "இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயதடைந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவைகளை ஓட்டி வந்திருக்கிறோம்)" என்றார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨௩)

Jan Trust Foundation

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு| “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் மத்யனுடைய நீர்நிலைக்கு வந்தபோது அதனருகில் மக்களில் (தங்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டுகின்ற ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் அன்றி (தங்கள் ஆடுகளை மக்களை விட்டும் அங்கும் இங்கும் ஓடுவதை விட்டும்) தடுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கண்டார். அவர் கேட்டார்: “உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?” அவ்விருவரும் கூறினர்: “நாங்கள் (எங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்ட மாட்டோம். மேய்ப்பவர்கள் (தங்களது கால்நடைகளை இங்கிருந்து) வெளியேற்றாதவரை. எங்கள் தந்தையோ வயதான பெரியவர் ஆவார்.