Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௧௧

Qur'an Surah Al-Qasas Verse 11

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّيْهِۗ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ۙ (القصص : ٢٨)

waqālat
وَقَالَتْ
And she said
அவள் கூறினாள்
li-ukh'tihi
لِأُخْتِهِۦ
to his sister
அவருடைய சகோதரிக்கு
quṣṣīhi
قُصِّيهِۖ
"Follow him"
நீ அவரைப் பின்தொடர்ந்து செல்
fabaṣurat
فَبَصُرَتْ
So she watched
ஆக, அவள் பார்த்துவிட்டாள்
bihi
بِهِۦ
him
அவரை
ʿan junubin
عَن جُنُبٍ
from a distance
தூரத்திலிருந்து
wahum
وَهُمْ
while they
எனினும், அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
(did) not perceive
உணரவில்லை

Transliteration:

Wa qaalat li ukhtihee qusseehi fabasurat bihee 'an junubinw wahum laa yash'uroon (QS. al-Q̈aṣaṣ:11)

English Sahih International:

And she said to his sister, "Follow him"; so she watched him from a distance while they perceived not. (QS. Al-Qasas, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி "(ஆற்றில் மிதந்து செல்லும்) அதனைப் பின்தொடர்ந்து நீயும் செல்" என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதனை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௧௧)

Jan Trust Foundation

இன்னும் மூஸாவின் சகோதரியிடம்| “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவள் (-மூசாவின் தாயார்) அவருடைய சகோதரிக்கு “நீ அவரைப் பின்தொடர்ந்து செல்” என்று கூறினாள். ஆக, அவள் அவரை தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். எனினும், அவர்கள் (-ஃபிர்அவ்னின் குடும்பத்தார் இவள் அவருடைய சகோதரி என்பதை) உணரவில்லை.