Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Page: 9

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

௮௧

فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ ۗفَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ يَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ ۖوَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِيْنَ ٨١

fakhasafnā
فَخَسَفْنَا
ஆகவே, சொருகிவிட்டோம்
bihi
بِهِۦ
அவனையும்
wabidārihi
وَبِدَارِهِ
அவனுடைய இல்லத்தையும்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியில்
famā kāna
فَمَا كَانَ
ஆக, ஏதும் இல்லை
lahu
لَهُۥ
அவனுக்கு
min fi-atin
مِن فِئَةٍ
கூட்டம்
yanṣurūnahu
يَنصُرُونَهُۥ
அவனுக்கு உதவுகின்ற
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
wamā kāna
وَمَا كَانَ
இன்னும் அவன் இல்லை
mina l-muntaṣirīna
مِنَ ٱلْمُنتَصِرِينَ
உதவி செய்துகொள்பவர்களில்
அவனையும், அவனுடைய மாளிகையையும் நாம் பூமியில் சொருகி விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிரிடையாக அவனுக்கு உதவி செய்யக்கூடிய கூட்டத்தார் ஒருவரும் இருக்கவில்லை. அல்லது அவன் தன்னைத்தானே (அல்லாஹ்வின் பிடியிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௧)
Tafseer
௮௨

وَاَصْبَحَ الَّذِيْنَ تَمَنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ يَقُوْلُوْنَ وَيْكَاَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُۚ لَوْلَآ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ۗوَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ ࣖ ٨٢

wa-aṣbaḥa
وَأَصْبَحَ
காலையில்
alladhīna tamannaw
ٱلَّذِينَ تَمَنَّوْا۟
ஆசைப்பட்டவர்கள்
makānahu
مَكَانَهُۥ
அவனுடைய இடத்தை
bil-amsi
بِٱلْأَمْسِ
நேற்று
yaqūlūna
يَقُولُونَ
கூறினர்
wayka-anna
وَيْكَأَنَّ
பார்க்கவில்லையா!/நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yabsuṭu
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
wayaqdiru
وَيَقْدِرُۖ
இன்னும் சுருக்கிவிடுகிறான்
lawlā an manna
لَوْلَآ أَن مَّنَّ
அருள் புரிந்திருக்கவில்லையென்றால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalaynā
عَلَيْنَا
நம்மீது
lakhasafa
لَخَسَفَ
அவன் சொருகியிருப்பான்
binā
بِنَاۖ
நம்மையும்
wayka-annahu
وَيْكَأَنَّهُۥ
பார்க்கவில்லையா!/நிச்சயமாக
lā yuf'liḥu
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர் களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கின்றான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகின்றான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே! அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கா விடில் அவ்வாறே நம்மையும் பூமி விழுங்கியே இருக்கும், (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று (தெரிகின்றதே! என்று) கூற ஆரம்பித்தார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௨)
Tafseer
௮௩

تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا ۗوَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ ٨٣

til'ka
تِلْكَ
அந்த
l-dāru
ٱلدَّارُ
இல்லமானது
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
மறுமை
najʿaluhā
نَجْعَلُهَا
அதை ஆக்குவோம்
lilladhīna lā yurīdūna
لِلَّذِينَ لَا يُرِيدُونَ
விரும்பாதவர்களுக்கு
ʿuluwwan
عُلُوًّا
அநியாயத்தையோ
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walā fasādan
وَلَا فَسَادًاۚ
குழப்பத்தையோ
wal-ʿāqibatu
وَٱلْعَٰقِبَةُ
முடிவான நற்பாக்கியம்
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு
(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால், முடிவான நற்பாக்கியம் இறை அச்சம் உடையவர்களுக்குத்தான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௩)
Tafseer
௮௪

مَنْ جَاۤءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَاۚ وَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى الَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٨٤

man
مَن
எவர்
jāa
جَآءَ
வருவாரோ
bil-ḥasanati
بِٱلْحَسَنَةِ
நன்மையைக்கொண்டு
falahu
فَلَهُۥ
அவருக்கு
khayrun
خَيْرٌ
நற்கூலி கிடைக்கும்
min'hā
مِّنْهَاۖ
அதனால்
waman
وَمَن
எவர்கள்
jāa
جَآءَ
வருவார்களோ
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
தீமையைக் கொண்டு
falā yuj'zā
فَلَا يُجْزَى
கூலி கொடுக்கப்பட மாட்டார்(கள்)
alladhīna ʿamilū
ٱلَّذِينَ عَمِلُوا۟
செய்தவர்கள்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
illā
إِلَّا
தவிர
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே
(உங்களில்) எவரேனும் யாதொரு நன்மையை(ச் செய்து) கொண்டு வந்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவரேனும் யாதொரு பாவத்தைக் கொண்டு வந்தாலோ, அவர் செய்த பாவங்களின் அளவேயன்றி (அதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௪)
Tafseer
௮௫

اِنَّ الَّذِيْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰنَ لَرَاۤدُّكَ اِلٰى مَعَادٍ ۗقُلْ رَّبِّيْٓ اَعْلَمُ مَنْ جَاۤءَ بِالْهُدٰى وَمَنْ هُوَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٨٥

inna
إِنَّ
நிச்சயமாக
alladhī faraḍa
ٱلَّذِى فَرَضَ
இறக்கியவன்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
larādduka
لَرَآدُّكَ
உம்மை திரும்பக்கொண்டு வருவான்
ilā maʿādin
إِلَىٰ مَعَادٍۚ
வழமைக்கு
qul
قُل
கூறுவீராக!
rabbī
رَّبِّىٓ
என் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
man jāa
مَن جَآءَ
கொண்டு வந்தவரையும்
bil-hudā
بِٱلْهُدَىٰ
நேர்வழியை
waman huwa
وَمَنْ هُوَ
இருப்பவரையும்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(நபியே!) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உங்கள் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உங்களை (மக்காவாகிய) உங்களுடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௫)
Tafseer
௮௬

وَمَا كُنْتَ تَرْجُوْٓا اَنْ يُّلْقٰٓى اِلَيْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِيْرًا لِّلْكٰفِرِيْنَ ۖ ٨٦

wamā kunta tarjū
وَمَا كُنتَ تَرْجُوٓا۟
நீர் எதிர்பார்த்திருக்கவில்லை
an yul'qā
أَن يُلْقَىٰٓ
இறக்கப்படுவதை
ilayka
إِلَيْكَ
உமக்கு
l-kitābu
ٱلْكِتَٰبُ
இந்த வேதம்
illā
إِلَّا
என்றாலும்
raḥmatan
رَحْمَةً
கருணையினால்தான்`
min rabbika
مِّن رَّبِّكَۖ
உமது இறைவனின்
falā takūnanna
فَلَا تَكُونَنَّ
ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்
ẓahīran
ظَهِيرًا
உதவியாளராக
lil'kāfirīna
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
(நபியே!) உங்களது இறைவனின் அருளால் அன்றி இவ்வேதம் (அவன் புறத்திலிருந்து) உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. (அவனுடைய அருளாலேயே இது உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.) ஆகவே, நீங்கள் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டாம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௬)
Tafseer
௮௭

وَلَا يَصُدُّنَّكَ عَنْ اٰيٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَيْكَ وَادْعُ اِلٰى رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ ۚ ٨٧

walā yaṣuddunnaka
وَلَا يَصُدُّنَّكَ
உம்மை அவர்கள் திருப்பி விடவேண்டாம்
ʿan āyāti
عَنْ ءَايَٰتِ
வசனங்களை விட்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
baʿda
بَعْدَ
பின்னர்
idh unzilat
إِذْ أُنزِلَتْ
அவை இறக்கப்பட்டதன்
ilayka
إِلَيْكَۖ
உமக்கு
wa-ud'ʿu
وَٱدْعُ
அழைப்பீராக
ilā
إِلَىٰ
பக்கம்
rabbika
رَبِّكَۖ
உமது இறைவன்
walā takūnanna
وَلَا تَكُونَنَّ
இன்னும் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
இவ்வேதம் உங்களுக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீங்கள் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உங்களைத் தடுத்து விட வேண்டாம். ஆகவே, உங்கள் இறைவன் பக்கம் (நீங்கள் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருங்கள். நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௭)
Tafseer
௮௮

وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۘ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ كُلُّ شَيْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ۗ لَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ࣖ ٨٨

walā tadʿu
وَلَا تَدْعُ
இன்னும் அழைத்துவிடாதீர் !
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَۘ
வேறு
لَآ
இல்லவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரிய கடவுள்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَۚ
அவனை
kullu
كُلُّ
எல்லா
shayin
شَىْءٍ
பொருள்களும்
hālikun
هَالِكٌ
அழியக்கூடியவையே
illā
إِلَّا
தவிர
wajhahu
وَجْهَهُۥۚ
அவனது முகத்தை
lahu
لَهُ
அவனுக்கே உரியது
l-ḥuk'mu
ٱلْحُكْمُ
அதிகாரம்
wa-ilayhi
وَإِلَيْهِ
அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
(நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை நீங்கள் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௮)
Tafseer