Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௬௪

Qur'an Surah An-Naml Verse 64

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمَّنْ يَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَمَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗقُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (النمل : ٢٧)

amman
أَمَّن
Or Who
?/எவன்
yabda-u
يَبْدَؤُا۟
originates
முதலில் உருவாக்குகின்றான்
l-khalqa
ٱلْخَلْقَ
the creation
படைப்புகளை
thumma
ثُمَّ
then
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥ
repeats it
அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
waman
وَمَن
and Who
இன்னும் எவன்
yarzuqukum
يَرْزُقُكُم
provides you
உங்களுக்கு உணவளிக்கின்றான்
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
from the heavens
மேகத்திலிருந்தும்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
and the earth?
இன்னும் பூமியிலிருந்தும்
a-ilāhun
أَءِلَٰهٌ
Is there any god
ஒரு கடவுளா?!
maʿa l-lahi
مَّعَ ٱللَّهِۚ
with Allah?
அல்லாஹ்வுடன்
qul
قُلْ
Say
கூறுவீராக
hātū
هَاتُوا۟
"Bring forth
கொண்டு வாருங்கள்
bur'hānakum
بُرْهَٰنَكُمْ
your proof
உங்கள் ஆதாரத்தை
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
உண்மையாளர்களாக

Transliteration:

Ammmany-yabda'ul khalqa summa yu'eeduhoo wa many-yarzuqukum minas sammaaa'i wal ard; 'a-ilaahum ma'allah; qul haatoo burhaanakum in kuntum saadiqeen (QS. an-Naml:64)

English Sahih International:

Is He [not best] who begins creation and then repeats it and who provides for you from the heaven and earth? Is there a deity with Allah? Say, "Produce your proof, if you should be truthful." (QS. An-Naml, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கிப்) பூமியில் (தானியங்களை முளைக்கச் செய்து) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்களுடைய அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௬௪)

Jan Trust Foundation

முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக| “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லது) படைப்புகளை எவன் முதலில் உருவாக்கி, (பின்னர் அவை அழிந்த) பிறகு அவற்றை மீண்டும் உருவாக்குகின்றானோ, மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் உணவளிக்கின்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (நபியே!) கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!