Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௬௦

Qur'an Surah An-Naml Verse 60

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَكُمْ مِّنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَاۤىِٕقَ ذَاتَ بَهْجَةٍۚ مَا كَانَ لَكُمْ اَنْ تُنْۢبِتُوْا شَجَرَهَاۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗبَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ ۗ (النمل : ٢٧)

amman
أَمَّنْ
Or Who
?/எவன்
khalaqa
خَلَقَ
has created
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
பூமியையும்
wa-anzala
وَأَنزَلَ
and sent down
இன்னும் அவன் இறக்கினான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
from the sky
மேகத்திலிருந்து
māan
مَآءً
water?
மழையை
fa-anbatnā
فَأَنۢبَتْنَا
And We caused to grow
நாம் முளைக்க வைத்தோம்
bihi
بِهِۦ
thereby
அதன்மூலம்
ḥadāiqa
حَدَآئِقَ
gardens
தோட்டங்களை
dhāta bahjatin
ذَاتَ بَهْجَةٍ
of beauty (and delight) of beauty (and delight)
அழகிய காட்சியுடைய
mā kāna
مَّا كَانَ
not it is
முடியாது
lakum
لَكُمْ
for you
உங்களால்
an tunbitū
أَن تُنۢبِتُوا۟
that you cause to grow
நீங்கள் முளைக்க வைக்க
shajarahā
شَجَرَهَآۗ
their trees
அதன் மரங்களை
a-ilāhun
أَءِلَٰهٌ
Is there any god
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
maʿa l-lahi
مَّعَ ٱللَّهِۚ
with Allah?
அல்லாஹ்வுடன்
bal
بَلْ
Nay
மாறாக
hum
هُمْ
they
அவர்கள்
qawmun
قَوْمٌ
(are) a people
மக்கள்
yaʿdilūna
يَعْدِلُونَ
who ascribe equals
இணைவைக்கின்றனர்

Transliteration:

Amman khalaqas samaawaati wal arda wa anzala lakum minas samaaa'i maaa'an fa ambatnaa bihee hadaaa'iqa zaata bahjjah; maa kanna lakum an tumbitoo shajarahaa; 'a-ilaahum ma'al laah; bal hum qawmuny ya'diloon (QS. an-Naml:60)

English Sahih International:

[More precisely], is He [not best] who created the heavens and the earth and sent down for you rain from the sky, causing to grow thereby gardens of joyful beauty which you could not [otherwise] have grown the trees thereof? Is there a deity with Allah? [No], but they are a people who ascribe equals [to Him]. (QS. An-Naml, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

அன்றி, வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதனைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகான தோட்டங் களையும் உற்பத்தி செய்கிறோம். (நம்முடைய உதவியின்றி) அதன் மரங்களை முளைப்பிக்க உங்களால் முடியாது. ஆகவே, அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இவ்வாறிருந்தும்) இவர்கள் (தங்கள் கற்பனை தெய்வங்களை இறைவனுக்குச்) சமமாக்குகின்றனர். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௬௦)

Jan Trust Foundation

அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு அவன்) சிறந்தவனா? (அல்லது எதற்கும் ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா?). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்கள் இணைவைக்கின்ற மக்கள் ஆவர்.