Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௫௪

Qur'an Surah An-Naml Verse 54

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖٓ اَتَأْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ (النمل : ٢٧)

walūṭan
وَلُوطًا
And Lut
இன்னும் லூத்தையும்
idh
إِذْ
when
கூறிய சமயத்தை
qāla
قَالَ
he said
நினைவு கூறுவீராக!
liqawmihi
لِقَوْمِهِۦٓ
to his people
அவர் தம் மக்களுக்கு
atatūna
أَتَأْتُونَ
"Do you commit
நீங்கள் செய்கிறீர்களா?
l-fāḥishata
ٱلْفَٰحِشَةَ
[the] immorality
மகா அசிங்கமான
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள்
tub'ṣirūna
تُبْصِرُونَ
see?
அறியத்தான் செய்கிறீர்கள்

Transliteration:

Wa lootan iz qaala liqawmiheee ataatoonal faa hishata wa antum qawmun tajjhaloon (QS. an-Naml:54)

English Sahih International:

And [mention] Lot, when he said to his people, "Do you commit immorality while you are seeing? (QS. An-Naml, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

லூத்தையும் (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்) அவர் தன் மக்களை நோக்கி (மறைவு திரைவின்றி) "மக்கள் முன்பாகவே நீங்கள் மானக்கேடான காரியங்களைச் செய்கின்றீர்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௫௪)

Jan Trust Foundation

லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் லூத்தையும் (நாம் அனுப்பினோம்). அவர் தம் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! நீங்கள் மகா அசிங்கமான செயலை செய்கிறீர்கள். (இதன் அசிங்கத்தையும் கேவலத்தையும்) நீங்கள் அறியத்தான் செய்கிறீர்கள்.