Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪௯

Qur'an Surah An-Naml Verse 49

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَيِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِيِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ (النمل : ٢٧)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
taqāsamū
تَقَاسَمُوا۟
"Swear to each other
தங்களுக்குள் சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
by Allah
அல்லாஹ்வின் மீது
lanubayyitannahu
لَنُبَيِّتَنَّهُۥ
surely we will attack him by night
நிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம்
wa-ahlahu
وَأَهْلَهُۥ
and his family
அவருடைய குடும்பத்தையும்
thumma lanaqūlanna
ثُمَّ لَنَقُولَنَّ
Then we will surely say
பிறகு கூறுவோம்
liwaliyyihi
لِوَلِيِّهِۦ
to his heir
அவருடைய பொறுப்பாளருக்கு
mā shahid'nā
مَا شَهِدْنَا
"Not we witnessed
நாம்ஆஜராகவில்லை
mahlika ahlihi
مَهْلِكَ أَهْلِهِۦ
(the) destruction (of) his family
அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு
wa-innā laṣādiqūna
وَإِنَّا لَصَٰدِقُونَ
and indeed we (are) surely truthful'"
நாங்கள் உண்மையாளர்கள்

Transliteration:

Qaaloo taqaasamoo billaahi lanubaiyitannahoo wa ahlahoo summaa lanaqoolana liwaliy yihee maa shahidnaa mahlika ahliee wa innaa lasaadiqoon (QS. an-Naml:49)

English Sahih International:

They said, "Take a mutual oath by Allah that we will kill him by night, he and his family. Then we will say to his executor, 'We did not witness the destruction of his family, and indeed, we are truthful.'" (QS. An-Naml, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் நாம் இரவோடு இரவாக அழித்து விடுவோம். (இதனை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், "அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்" என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக்கொண்டார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪௯)

Jan Trust Foundation

அவர்கள்| “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினர்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் ஆஜராகவில்லை, நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்’என்று கூறுவோம்.”