Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪௪

Qur'an Surah An-Naml Verse 44

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَاۗ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ەۗ قَالَتْ رَبِّ اِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ وَاَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ (النمل : ٢٧)

qīla
قِيلَ
It was said
கூறப்பட்டது
lahā
لَهَا
to her
அவளுக்கு
ud'khulī
ٱدْخُلِى
"Enter
நீ நுழை!
l-ṣarḥa
ٱلصَّرْحَۖ
the palace"
மாளிகையில்
falammā ra-athu
فَلَمَّا رَأَتْهُ
Then when she saw it
அவள் அதைப் பார்த்த போது
ḥasibathu
حَسِبَتْهُ
she thought it
அவள் அதை கருதினாள்
lujjatan
لُجَّةً
(was) a pool
அலை அடிக்கும் நீராக
wakashafat
وَكَشَفَتْ
and she uncovered
அகற்றினாள்
ʿan sāqayhā
عَن سَاقَيْهَاۚ
[on] her shins
தன் இரு கெண்டைக் கால்களை விட்டும்
qāla
قَالَ
He said
கூறினார்
innahu
إِنَّهُۥ
"Indeed it
நிச்சயமாக இது
ṣarḥun
صَرْحٌ
(is) a palace
மாளிகை
mumarradun
مُّمَرَّدٌ
made smooth
சமப்படுத்தப்பட்டது
min qawārīra
مِّن قَوَارِيرَۗ
of glass"
கண்ணாடிகளால்
qālat
قَالَتْ
She said
அவள் கூறினாள்
rabbi
رَبِّ
"My Lord
என் இறைவா!
innī
إِنِّى
indeed I
நிச்சயமாக நான்
ẓalamtu
ظَلَمْتُ
[I] have wronged
அநீதி செய்து கொண்டேன்
nafsī
نَفْسِى
myself
எனக்கே
wa-aslamtu
وَأَسْلَمْتُ
and I submit
நானும் முஸ்லிமாகி விட்டேன்
maʿa sulaymāna
مَعَ سُلَيْمَٰنَ
with Sulaiman
சுலைமானுடன்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்விற்கு
rabbi
رَبِّ
(the) Lord
இறைவனான
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds"
அகிலங்களின்

Transliteration:

Qeela lahad khulis sarha falammaa ra at hu hasibat hu lujjatanw wa khashafat 'an saaqaihaa; qaala innahoo sarhum mumarradum min qawaareer; qaalat Rabbi innee zalamtu nafsee wa aslamtu ma'a Sulaimaana lillaahi Rabbil 'aalameen (QS. an-Naml:44)

English Sahih International:

She was told, "Enter the palace." But when she saw it, she thought it was a body of water and uncovered her shins [to wade through]. He said, "Indeed, it is a palace [whose floor is] made smooth with glass." She said, "My Lord, indeed I have wronged myself, and I submit with Solomon to Allah, Lord of the worlds." (QS. An-Naml, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

பின்னர் "இம்மாளிகையில் நுழை" என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதனைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான் "அது தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகை தான்" என்று கூறினார். அதற்கவள் "என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப் படுகின்றேன்" என்று கூறினாள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪௪)

Jan Trust Foundation

அவளிடம்| “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவளுக்கு கூறப்பட்டது: “நீ மாளிகையில் நுழை!” அவள் அதைப் பார்த்த போது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு சுலைமானுடன் நானும் முஸ்லிமாகி விட்டேன்.