Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Word by Word

An-Naml

(an-Naml)

bismillaahirrahmaanirrahiim

طٰسۤ ۚ تِلْكَ اٰيٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِيْنٍ ۙ ١

tta-seen
طسٓۚ
தா, சீன்.
til'ka
تِلْكَ
இவை
āyātu
ءَايَٰتُ
வசனங்கள்
l-qur'āni
ٱلْقُرْءَانِ
இந்த குர்ஆனுடைய
wakitābin
وَكِتَابٍ
இன்னும் வேதத்தின்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
தா; ஸீன். இவை தெளிவான வேதமாகிய இந்தத் திருக்குர்ஆனின் (சில) வசனங்களாகும். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧)
Tafseer

هُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ ۙ ٢

hudan
هُدًى
நேர்வழியாகவும்
wabush'rā
وَبُشْرَىٰ
நற்செய்தியாகவும்
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨)
Tafseer

الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ ٣

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuqīmūna
يُقِيمُونَ
நிலை நிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wayu'tūna
وَيُؤْتُونَ
இன்னும் தருவார்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
bil-ākhirati hum
بِٱلْءَاخِرَةِ هُمْ
மறுமையை/அவர்கள்
yūqinūna
يُوقِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். அன்றி, மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩)
Tafseer

اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَيَّنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُوْنَ ۗ ٤

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna lā yu'minūna
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
zayyannā
زَيَّنَّا
நாம் அலங்கரித்து விட்டோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களுடைய செயல்களை
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
yaʿmahūna
يَعْمَهُونَ
தறிகெட்டு அலைகிறார்கள்
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) நாம் அவர்களுடைய (தீய) காரியங்களை அழகாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் அதில் தட்டழிந்து திரிகின்றனர். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪)
Tafseer

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَهُمْ سُوْۤءُ الْعَذَابِ وَهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ٥

ulāika
أُو۟لَٰٓئِكَ
alladhīna
ٱلَّذِينَ
அவர்கள்தான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
sūu
سُوٓءُ
கெட்ட
l-ʿadhābi
ٱلْعَذَابِ
தண்டனை
wahum
وَهُمْ
அவர்கள்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
humu
هُمُ
அவர்கள்தான்
l-akhsarūna
ٱلْأَخْسَرُونَ
நஷ்டவாளிகள்
இத்தகையவர்களுக்கு (அவர்கள் மரண காலத்தில்) தீய வேதனைதான் உண்டு. மறுமையிலோ அவர்கள் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக இருப்பார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫)
Tafseer

وَاِنَّكَ لَتُلَقَّى الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِيْمٍ عَلِيْمٍ ٦

wa-innaka
وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
latulaqqā
لَتُلَقَّى
மனனம் செய்விக்கப்படுகிறீர்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
min ladun ḥakīmin
مِن لَّدُنْ حَكِيمٍ
மகா ஞானவானிடமிருந்து
ʿalīmin
عَلِيمٍ
நன்கறிந்தவன்
(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய, (அனைத்தையும்) நன்கு அறிந்தவனிடம் இருந்தே இந்தக் குர்ஆன் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬)
Tafseer

اِذْ قَالَ مُوْسٰى لِاَهْلِهٖٓ اِنِّيْٓ اٰنَسْتُ نَارًاۗ سَاٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِيْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ ٧

idh qāla
إِذْ قَالَ
அந்த சமயத்தை நினைவு கூறினார்
mūsā
مُوسَىٰ
மூசா
li-ahlihi
لِأَهْلِهِۦٓ
தன்குடும்பத்தினருக்கு
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
ānastu
ءَانَسْتُ
நான் பார்த்தேன்
nāran
نَارًا
நெருப்பை
saātīkum
سَـَٔاتِيكُم
உங்களுக்கு கொண்டு வருகிறேன்
min'hā
مِّنْهَا
அதிலிருந்து
bikhabarin
بِخَبَرٍ
ஒரு செய்தியை
aw
أَوْ
அல்லது
ātīkum
ءَاتِيكُم
உங்களுக்கு கொண்டு வருகிறேன்
bishihābin
بِشِهَابٍ
நெருப்பை
qabasin
قَبَسٍ
எடுக்கப்பட்ட
laʿallakum taṣṭalūna
لَّعَلَّكُمْ تَصْطَلُونَ
நீங்கள் குளிர் காய்வதற்காக
மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்றபொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி "நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். (நீங்கள் இங்கு தாமதித்து இருங்கள்.) நான் சென்று (நம்முடைய வழியைப் பற்றி) யாதொரு விஷயத்தை அதன் மூலம் அறிந்து வருகின்றேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஓர் எரி கொள்ளியேனும் கொண்டு வருவேன்" என்று கூறி, ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭)
Tafseer

فَلَمَّا جَاۤءَهَا نُوْدِيَ اَنْۢ بُوْرِكَ مَنْ فِى النَّارِ وَمَنْ حَوْلَهَاۗ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ٨

falammā jāahā
فَلَمَّا جَآءَهَا
அவர் அதனிடம் வந்த போது
nūdiya
نُودِىَ
அழைக்கப்பட்டார்
an būrika
أَنۢ بُورِكَ
பரிசுத்தமானவன்
man fī l-nāri
مَن فِى ٱلنَّارِ
நெருப்பில் இருப்பவன்
waman ḥawlahā
وَمَنْ حَوْلَهَا
இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும்
wasub'ḥāna
وَسُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
rabbi
رَبِّ
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் "நெருப்பில் இருப்பவர் (மலக்கின்) மீதும் அதன் சமீபமாக இருப்பவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது என்(று சப்தமிட்டுக் கூறப்பெற்)றதுடன், உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்" என்றும் கூறப்பட்டது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮)
Tafseer

يٰمُوْسٰٓى اِنَّهٗٓ اَنَا اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ ٩

yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
innahu
إِنَّهُۥٓ
நிச்சயமாக
anā
أَنَا
நான்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவனான
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானமுடையவனான
(அன்றி) மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ். நான் அனைவரையும் மிகைத்தவன்; (அனைத்தையும் நன்கறிந்த) ஞானமுடையவன். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௯)
Tafseer
௧௦

وَاَلْقِ عَصَاكَ ۗفَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَاۤنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْۗ يٰمُوْسٰى لَا تَخَفْۗ اِنِّيْ لَا يَخَافُ لَدَيَّ الْمُرْسَلُوْنَ ۖ ١٠

wa-alqi
وَأَلْقِ
போடுவீராக!
ʿaṣāka
عَصَاكَۚ
உமது தடியை
falammā raāhā
فَلَمَّا رَءَاهَا
அவர் அதை பார்த்த போது
tahtazzu
تَهْتَزُّ
நெளிவதாக
ka-annahā
كَأَنَّهَا
அது போன்று
jānnun
جَآنٌّ
பாம்பை
wallā
وَلَّىٰ
திரும்பினார்
mud'biran
مُدْبِرًا
புறமுதுகிட்டு
walam yuʿaqqib
وَلَمْ يُعَقِّبْۚ
அவர் திரும்பவே இல்லை
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
lā takhaf
لَا تَخَفْ
பயப்படாதீர்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lā yakhāfu
لَا يَخَافُ
பயப்பட மாட்டார்கள்
ladayya
لَدَىَّ
என்னிடம்
l-mur'salūna
ٱلْمُرْسَلُونَ
இறைத்தூதர்கள்
(மூஸாவே!) உங்களுடைய தடியை நீங்கள் எறியுங்கள்" என்றும் (கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதனை எறியவே) அது ஒரு பாம்பைப் போல் (ஆகி) நெளிவதைக் கண்டு அவர் திரும்பியும் பார்க்காது அதனைவிட்டும் விலகிச் சென்றார். (ஆகவே, நாம் மூஸாவை நோக்கி) மூஸாவே! நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக என்னிடத்தில் எந்தத் தூதரும் பயப்படமாட்டார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௦)
Tafseer