Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௭

Qur'an Surah Al-Furqan Verse 77

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَا يَعْبَؤُا بِكُمْ رَبِّيْ لَوْلَا دُعَاۤؤُكُمْۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُوْنُ لِزَامًا ࣖ (الفرقان : ٢٥)

qul
قُلْ
Say
கூறுவீராக!
mā yaʿba-u
مَا يَعْبَؤُا۟
"Not will care
ஒரு பொருட்டாகவே கருதமாட்டான்
bikum
بِكُمْ
for you
உங்களை
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
lawlā
لَوْلَا
if not
இல்லாதிருந்தால்
duʿāukum
دُعَآؤُكُمْۖ
your prayer (is to Him)
பிரார்த்தனை உங்கள்
faqad
فَقَدْ
But verily
திட்டமாக
kadhabtum
كَذَّبْتُمْ
you have denied
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
fasawfa yakūnu
فَسَوْفَ يَكُونُ
so soon will be
இது கண்டிப்பாக இருக்கும்
lizāman
لِزَامًۢا
the inevitable (punishment)"
உங்களை தொடரக்கூடியதாக

Transliteration:

Qul maa ya'ba'u bikum Rabbee law laa du'aaa'ukum faqad kazzabtum fasawfa yakoonu lizaamaa (QS. al-Furq̈ān:77)

English Sahih International:

Say, "What would my Lord care for you if not for your supplication?" For you [disbelievers] have denied, so it [i.e., your denial] is going to be adherent. (QS. Al-Furqan, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்த மாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௭௭)

Jan Trust Foundation

(நபியே!) சொல்வீராக| “உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! உங்கள் (துன்பத்தில் அவனை மட்டும் அழைத்து உங்கள்) பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை ஒரு பொருட்டாகவே கருதமாட்டான். திட்டமாக நீங்கள் (தூதரையும் வேதத்தையும்) பொய்ப்பித்தீர்கள். இது (-பொய்ப்பித்தல்) உங்களை கண்டிப்பாக தொடரக்கூடியதாக இருக்கும். (இதன் தண்டனையை இம்மையில் அல்லது மறுமையில் கண்டிப்பாக அனுபவிப்பீர்கள்.)