Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௩

Qur'an Surah Al-Furqan Verse 73

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا (الفرقان : ٢٥)

wa-alladhīna idhā dhukkirū
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟
And those who when they are reminded
இன்னும் எவர்கள்/அவர்கள் அறிவுறுத்தப்பட்டால்
biāyāti
بِـَٔايَٰتِ
of (the) Verses
வசனங்களைக் கொண்டு
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord
தங்கள் இறைவனின்
lam yakhirrū
لَمْ يَخِرُّوا۟
(do) not fall
விழ மாட்டார்கள்
ʿalayhā
عَلَيْهَا
upon them
அவற்றின் மீது
ṣumman
صُمًّا
deaf
செவிடர்களாக
waʿum'yānan
وَعُمْيَانًا
and blind
இன்னும் குருடர்களாக

Transliteration:

Wallazeena izaa zukkiroo bi Aayaati Rabbihim lam yakhirroo 'alaihaa summanw wa'umyaanaa (QS. al-Furq̈ān:73)

English Sahih International:

And those who, when reminded of the verses of their Lord, do not fall upon them deaf and blind. (QS. Al-Furqan, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது அடித்து விழாமல்; (அதனை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்) (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௭௩)

Jan Trust Foundation

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களைக் கொண்டு அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாக, குருடர்களாக விழமாட்டார்கள். (அவற்றைக் கேட்டு உடனே பயன் பெறுவார்கள்.)