Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭

Qur'an Surah Al-Furqan Verse 7

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِيْ فِى الْاَسْوَاقِۗ لَوْلَآ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ (الفرقان : ٢٥)

waqālū
وَقَالُوا۟
And they say
அவர்கள் கூறுகின்றனர்
māli
مَالِ
"Why does
என்ன!
hādhā
هَٰذَا
this
இந்த
l-rasūli
ٱلرَّسُولِ
Messenger
தூதருக்கு
yakulu
يَأْكُلُ
eat
இவர் சாப்பிடுகிறார்
l-ṭaʿāma
ٱلطَّعَامَ
[the] food
உணவு
wayamshī
وَيَمْشِى
and walk
இன்னும் நடக்கிறார்
fī l-aswāqi
فِى ٱلْأَسْوَاقِۙ
in the markets?
கடைத் தெருக்களில்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
Why not is sent down
இறக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
ilayhi
إِلَيْهِ
to him
இவர் மீது
malakun
مَلَكٌ
an Angel
ஒரு வானவர்
fayakūna
فَيَكُونَ
then he be
அவர் இருக்கிறார்
maʿahu
مَعَهُۥ
with him
இவருடன்
nadhīran
نَذِيرًا
a warner?
எச்சரிப்பவராக

Transliteration:

Wa qaaloo maa li haazar Rasooli yaakulut ta'aama wa yamshee fil aswaaq; law laaa unzila ilaihi malakun fa yakoona ma'ahoo nazeeraa (QS. al-Furq̈ān:7)

English Sahih International:

And they say, "What is this messenger that eats food and walks in the markets? Why was there not sent down to him an angel so he would be with him a warner? (QS. Al-Furqan, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: "இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௭)

Jan Trust Foundation

மேலும் அவர்கள் கூறுகிறார்கள்| “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுகின்றனர்: இந்த தூதருக்கு என்ன! இவர் உணவு சாப்பிடுகிறார், கடைத் தெருக்களில் நடக்கிறார். இவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட்டு அவர் இவருடன் (மக்களை) எச்சரிப்பவராக இருக்க வேண்டாமா?