குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௨
Qur'an Surah Al-Furqan Verse 22
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ يَرَوْنَ الْمَلٰۤىِٕكَةَ لَا بُشْرٰى يَوْمَىِٕذٍ لِّلْمُجْرِمِيْنَ وَيَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا (الفرقان : ٢٥)
- yawma
 - يَوْمَ
 - (The) Day
 - நாளில்
 
- yarawna
 - يَرَوْنَ
 - they see
 - அவர்கள் பார்ப்பார்கள்
 
- l-malāikata
 - ٱلْمَلَٰٓئِكَةَ
 - the Angels
 - வானவர்களை
 
- lā
 - لَا
 - no
 - அறவே இல்லை
 
- bush'rā
 - بُشْرَىٰ
 - glad tidings
 - நற்செய்தி
 
- yawma-idhin
 - يَوْمَئِذٍ
 - (will be) that Day
 - இந்நாளில்
 
- lil'muj'rimīna
 - لِّلْمُجْرِمِينَ
 - for the criminals
 - குற்றவாளிகளுக்கு
 
- wayaqūlūna
 - وَيَقُولُونَ
 - and they will say
 - இன்னும் கூறுவார்கள்
 
- ḥij'ran
 - حِجْرًا
 - "A partition
 - உங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டது
 
- maḥjūran
 - مَّحْجُورًا
 - forbidden"
 - முற்றிலும்
 
Transliteration:
Yawma yarawnal malaaa 'ikata laa bushraa Yawma'izil lilmujrimeena wa yaqooloona hijram mahjooraa(QS. al-Furq̈ān:22)
English Sahih International:
The day they see the angels – no good tidings will there be that day for the criminals, and [the angels] will say, "Prevented and inaccessible." (QS. Al-Furqan, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
(அவர்கள் விரும்பியவாறு) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், இக்குற்றவாளிகளை நோக்கி "இன்றைய தினம் (உங்களுக்கு அழிவைத் தவிர) யாதொரு நல்ல செய்தியும் இல்லை" என்று (அம்மலக்குகள்) கூறுவார்கள். (அக்குற்றவாளிகளோ தங்களை அழிக்க வரும் அம்மலக்குகளைத்) "தடுத்துக் கொள்ளுங்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்" என்று சப்தமிடுவார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௨)
Jan Trust Foundation
அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் வானவர்களை பார்க்கும் நாளில் (அந்த வானவர்கள் கூறுவார்கள்:) இந்நாளில் குற்றவாளிகளுக்கு நற்செய்தி அறவே இல்லை. இன்னும் (வானவர்கள்) கூறுவார்கள்: நற்செய்தி உங்களுக்கு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.