Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௮

Qur'an Surah Al-Furqan Verse 18

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ يَنْۢبَغِيْ لَنَآ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِيَاۤءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَاۤءَهُمْ حَتّٰى نَسُوا الذِّكْرَۚ وَكَانُوْا قَوْمًاۢ بُوْرًا (الفرقان : ٢٥)

qālū
قَالُوا۟
They say
அவர்கள் கூறுவர்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
"Glory be to You
நீ மிகப் பரிசுத்தமானவன்
mā kāna
مَا كَانَ
Not it was proper
இல்லை
yanbaghī
يَنۢبَغِى
it was proper
தகுதியானதாக
lanā
لَنَآ
for us
எங்களுக்கு
an nattakhidha
أَن نَّتَّخِذَ
that we take
எடுத்துக் கொள்வது
min dūnika
مِن دُونِكَ
besides You besides You
உன்னை அன்றி
min awliyāa
مِنْ أَوْلِيَآءَ
any protectors
பாதுகாவலர்களை
walākin
وَلَٰكِن
But
எனினும்
mattaʿtahum
مَّتَّعْتَهُمْ
You gave them comforts
நீ அவர்களுக்கு சுகமளித்தாய்
waābāahum
وَءَابَآءَهُمْ
and their forefathers
மூதாதைகளுக்கும் அவர்களுடைய
ḥattā
حَتَّىٰ
until
இறுதியாக
nasū
نَسُوا۟
they forgot
அவர்கள் மறந்தனர்
l-dhik'ra
ٱلذِّكْرَ
the Message
அறிவுரையை
wakānū
وَكَانُوا۟
and became
இன்னும் ஆகிவிட்டனர்
qawman
قَوْمًۢا
a people
மக்களாக
būran
بُورًا
ruined"
அழிந்து போகும்

Transliteration:

Qaaloo Subhaanaka maa kaana yambaghee lanaaa an nattakhiza min doonika min awliyaaa'a wa laakim matta'tahum wa aabaaa'ahum hattaa nasuz zikra wa kaanoo qawmam booraa (QS. al-Furq̈ān:18)

English Sahih International:

They will say, "Exalted are You! It was not for us to take besides You any allies [i.e., protectors]. But You provided comforts for them and their fathers until they forgot the message and became a people ruined." (QS. Al-Furqan, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அதற்கு அவை (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு காப்பவனாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியன்று. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்" என்று கூறும். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௮)

Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள் “இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்” என்று கூறுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவர்: நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி பாதுகாவலர்களை (தெய்வங்களை) எடுத்துக் கொள்வது எங்களுக்கு தகுதியானதாக (சரியானதாக) இல்லை. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் (வாழ்க்கையில்) சுகமளித்தாய். இறுதியாக, அவர்கள் (உனது) அறிவுரையை மறந்தனர். இன்னும் அழிந்து போகும் மக்களாக ஆகிவிட்டனர்.