Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௩

Qur'an Surah Al-Furqan Verse 13

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَآ اُلْقُوْا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُّقَرَّنِيْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ۗ (الفرقان : ٢٥)

wa-idhā ul'qū
وَإِذَآ أُلْقُوا۟
And when they are thrown
அவர்கள் போடப்பட்டால்
min'hā
مِنْهَا
thereof
அதில்
makānan
مَكَانًا
(in) a place
இடத்தில்
ḍayyiqan
ضَيِّقًا
narrow
நெருக்கமான
muqarranīna
مُّقَرَّنِينَ
bound in chains
கட்டப்பட்டவர்களாக
daʿaw
دَعَوْا۟
they will call
அழைப்பார்கள்
hunālika
هُنَالِكَ
there
அங்கு
thubūran
ثُبُورًا
(for) destruction
கைசேதமே என்று

Transliteration:

Wa izaaa ulqoo minhaa makaanan daiyiqam muqar raneena da'aw hunaalika subooraa (QS. al-Furq̈ān:13)

English Sahih International:

And when they are thrown into a narrow place therein bound in chains, they will cry out thereupon for destruction. (QS. Al-Furqan, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௩)

Jan Trust Foundation

மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அதில் நெருக்கமான இடத்தில் (சங்கிலிகளால் கைகள் கழுத்துகளுடன்) கட்டப்பட்டவர்களாக போடப்பட்டால் அங்கு (எங்கள்) கைசேதமே என்று (தங்களின் அழிவையும் நாசத்தையும்) அழைப்பார்கள். (உலகிற்கு திரும்ப செல்ல வேண்டுமே என்று கதறுவார்கள். தாங்கள் அழிந்து விடவேண்டுமே என்று சப்தமிடுவார்கள்.)