Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௩௩

Qur'an Surah An-Nur Verse 33

ஸூரத்துந் நூர் [௨௪]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۗوَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِيْٓ اٰتٰىكُمْ ۗوَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَاۤءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ (النور : ٢٤)

walyastaʿfifi
وَلْيَسْتَعْفِفِ
And let be chaste
ஒழுக்கமாக இருக்கட்டும்
alladhīna lā yajidūna
ٱلَّذِينَ لَا يَجِدُونَ
those who (do) not find
வசதி பெறாதவர்கள்
nikāḥan
نِكَاحًا
(means for) marriage
திருமணத்திற்கு
ḥattā
حَتَّىٰ
until
வரை
yugh'niyahumu
يُغْنِيَهُمُ
Allah enriches them
அவர்களை நிறைவு செய்கிற
l-lahu
ٱللَّهُ
Allah enriches them
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦۗ
from His Bounty
தன் அருளால்
wa-alladhīna yabtaghūna
وَٱلَّذِينَ يَبْتَغُونَ
And those who seek
இன்னும் விரும்புபவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the writing
பத்திரம் எழுதிட
mimmā malakat
مِمَّا مَلَكَتْ
from (those) whom possess
சொந்தமாக்கிக் கொண்டவர்களில்
aymānukum
أَيْمَٰنُكُمْ
your right hands
உங்கள் வலக்கரங்கள்
fakātibūhum
فَكَاتِبُوهُمْ
then give them (the) writing
எழுதிக் கொடுங்கள் அவர்களுக்கு
in ʿalim'tum
إِنْ عَلِمْتُمْ
if you know
நீங்கள் அறிந்தால்
fīhim
فِيهِمْ
in them
அவர்களில்
khayran
خَيْرًاۖ
any good
நன்மையை
waātūhum
وَءَاتُوهُم
and give them
இன்னும் கொடுங்கள் அவர்களுக்கு
min māli
مِّن مَّالِ
from the wealth of Allah
செல்வத்திலிருந்து
l-lahi
ٱللَّهِ
the wealth of Allah
அல்லாஹ்வின்
alladhī ātākum
ٱلَّذِىٓ ءَاتَىٰكُمْۚ
which He has given you
எது/கொடுத்தான்/உங்களுக்கு
walā tuk'rihū
وَلَا تُكْرِهُوا۟
And (do) not compel
நிர்ப்பந்திக்காதீர்கள்
fatayātikum
فَتَيَٰتِكُمْ
your slave girls
உங்கள் பெண் அடிமைகளை
ʿalā l-bighāi
عَلَى ٱلْبِغَآءِ
to [the] prostitution
விபச்சாரத்தில்
in aradna
إِنْ أَرَدْنَ
if they desire
விரும்பினால்
taḥaṣṣunan
تَحَصُّنًا
chastity
பத்தினித்தனத்தை
litabtaghū
لِّتَبْتَغُوا۟
that you may seek
நீ விரும்பியதற்காக
ʿaraḍa
عَرَضَ
temporary gain
பொருளை
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
(of) the life (of) the world
உலக வாழ்க்கையின்
waman
وَمَن
And whoever
யார்
yuk'rihhunna
يُكْرِههُّنَّ
compels them
அவர்களை நிர்ப்பந்திப்பாரோ
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
ik'rāhihinna
إِكْرَٰهِهِنَّ
their compulsion
அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
கருணை காட்டுபவன்

Transliteration:

Wal yasta'fifil lazeena laa yajidoona nikaahan hata yughniyahumul laahu mi fadlih; wallazeena yabtaghoonal kitaaba mimmaa malakat aimaanukum fakaatiboohum in 'alimtum feehim khairanw wa aatoohum mimmaalil laahil lazeee aataakum; wa laa tukrihoo fatayaatikum 'alal bighaaa'i in aradna tahassunal litabtaghoo 'aradal hayaatid dunyaa; wa mai yukrihhunna fa innal laaha mim ba'di ikraahihinna Ghafoor Raheem (QS. an-Nūr:33)

English Sahih International:

But let them who find not [the means for] marriage abstain [from sexual relations] until Allah enriches them from His bounty. And those who seek a contract [for eventual emancipation] from among whom your right hands possess – then make a contract with them if you know there is within them goodness and give them from the wealth of Allah which He has given you. And do not compel your slave girls to prostitution, if they desire chastity, to seek [thereby] the temporary interests of worldly life. And if someone should compel them, then indeed, Allah is [to them], after their compulsion, Forgiving and Merciful. (QS. An-Nur, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரையில் அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்களுடைய கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்துவிடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.) (ஸூரத்துந் நூர், வசனம் ௩௩)

Jan Trust Foundation

விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திருமணத்திற்கு வசதி பெறாதவர்கள் அல்லாஹ் அவர்களை தன் அருளால் நிறைவு செய்கிற வரை ஒழுக்கமாக இருக்கட்டும். உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (உரிமைப்) பத்திரம் எழுதிட விரும்புபவர்கள் - அவர்களில் நீங்கள் நன்மையை (-நம்பிக்கையையும் நல்ல தன்மையையும்) அறிந்தால் அவர்களுக்கு (உரிமைப் பத்திரம்) எழுதிக் கொடுங்கள். உங்களுக்கு கொடுத்த அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து அவர்களுக்கு கொடுங்கள். நீங்கள் உலக வாழ்க்கையின் பொருளை விரும்பியதற்காக உங்கள் பெண் அடிமைகளை விபசாரத்தில் நிர்ப்பந்திக்காதீர்கள் -அவர்கள் பத்தினித்தனத்தை விரும்பினால். யார் அவர்களை நிர்ப்பந்திப்பாரோ நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் (அவர்களை) மன்னிப்பவன்,(அவர்கள் மீது) கருணை காட்டுபவன் ஆவான்.