Skip to content

ஸூரா ஸூரத்துந் நூர் - Page: 4

An-Nur

(an-Nūr)

௩௧

وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّۖ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَاۤىِٕهِنَّ اَوْ اٰبَاۤءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَاۤىِٕهِنَّ اَوْ اَبْنَاۤءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِيْٓ اِخْوَانِهِنَّ اَوْ بَنِيْٓ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَاۤىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التَّابِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَاۤءِ ۖوَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّۗ وَتُوْبُوْٓا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ٣١

waqul
وَقُل
கூறுங்கள்
lil'mu'mināti
لِّلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு
yaghḍuḍ'na
يَغْضُضْنَ
அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்
min
مِنْ
பார்வைகளை
abṣārihinna
أَبْصَٰرِهِنَّ
பார்வைகளை தங்கள்
wayaḥfaẓna
وَيَحْفَظْنَ
இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
furūjahunna
فُرُوجَهُنَّ
தங்கள் மறைவிடங்களை
walā yub'dīna
وَلَا يُبْدِينَ
இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்
zīnatahunna
زِينَتَهُنَّ
தங்கள் அலங்காரங்களை
illā mā ẓahara
إِلَّا مَا ظَهَرَ
வெளியில் தெரிபவற்றை தவிர
min'hā
مِنْهَاۖ
அதிலிருந்து
walyaḍrib'na
وَلْيَضْرِبْنَ
இன்னும் அவர்கள் போர்த்திக் கொள்ளட்டும்
bikhumurihinna
بِخُمُرِهِنَّ
தங்கள் முந்தானைகளை
ʿalā juyūbihinna
عَلَىٰ جُيُوبِهِنَّۖ
தங்கள் நெஞ்சுப் பகுதிகள் மீது
walā yub'dīna
وَلَا يُبْدِينَ
இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்
zīnatahunna
زِينَتَهُنَّ
தங்கள் அலங்காரங்களை
illā libuʿūlatihinna
إِلَّا لِبُعُولَتِهِنَّ
தங்கள் கணவர்களுக்கு தவிர
aw
أَوْ
அல்லது
ābāihinna
ءَابَآئِهِنَّ
தங்கள்தந்தைகளுக்கு
aw
أَوْ
அல்லது
ābāi
ءَابَآءِ
தந்தைகளுக்கு
buʿūlatihinna
بُعُولَتِهِنَّ
தங்கள் கணவர்களின்
aw
أَوْ
அல்லது
abnāihinna
أَبْنَآئِهِنَّ
தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு
aw
أَوْ
அல்லது
abnāi
أَبْنَآءِ
ஆண் பிள்ளைகளுக்கு
buʿūlatihinna
بُعُولَتِهِنَّ
தங்கள் கணவர்களின்
aw
أَوْ
அல்லது
ikh'wānihinna
إِخْوَٰنِهِنَّ
தங்கள் சகோதரர்களுக்கு
aw
أَوْ
அல்லது
banī
بَنِىٓ
ஆண் பிள்ளைகளுக்கு
ikh'wānihinna
إِخْوَٰنِهِنَّ
தங்கள் சகோதரர்களின்
aw
أَوْ
அல்லது
banī
بَنِىٓ
ஆண் பிள்ளைகளுக்கு
akhawātihinna
أَخَوَٰتِهِنَّ
தங்கள் சகோதரிகளின்
aw
أَوْ
அல்லது
nisāihinna
نِسَآئِهِنَّ
தங்கள் பெண்களுக்கு
aw mā malakat
أَوْ مَا مَلَكَتْ
அல்லது/சொந்தமாக்கியவர்களுக்கு
aymānuhunna
أَيْمَٰنُهُنَّ
தங்கள் வலக்கரங்கள்
awi
أَوِ
அல்லது
l-tābiʿīna
ٱلتَّٰبِعِينَ
பணியாளர்களுக்கு
ghayri ulī l-ir'bati
غَيْرِ أُو۟لِى ٱلْإِرْبَةِ
ஆசையில்லாத
mina l-rijāli
مِنَ ٱلرِّجَالِ
ஆண்களில்
awi
أَوِ
அல்லது
l-ṭif'li
ٱلطِّفْلِ
சிறுவர்களுக்கு
alladhīna lam yaẓharū
ٱلَّذِينَ لَمْ يَظْهَرُوا۟
எவர்கள்/அறிவில்லை
ʿalā ʿawrāti
عَلَىٰ عَوْرَٰتِ
மறைவிடங்களை
l-nisāi
ٱلنِّسَآءِۖ
பெண்களின்
walā yaḍrib'na
وَلَا يَضْرِبْنَ
இன்னும் அவர்கள் தட்டி நடக்க வேண்டாம்
bi-arjulihinna
بِأَرْجُلِهِنَّ
தங்கள் கால்களை
liyuʿ'lama
لِيُعْلَمَ
அறியப்படுவதற்காக
mā yukh'fīna
مَا يُخْفِينَ
எதை/மறைக்கின்றனர்
min zīnatihinna
مِن زِينَتِهِنَّۚ
தங்கள் அலங்காரங்களை
watūbū
وَتُوبُوٓا۟
இன்னும் பாவமன்னிப்பு கோருங்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
jamīʿan
جَمِيعًا
அனைத்திற்கும்
ayyuha l-mu'minūna
أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்களே
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக
(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். அன்றி, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய கணவர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது (முஸ்லிமாகிய) தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துகொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்னும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்களுடைய அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டித் தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்பைக் கோரி (உங்கள் மனதைத்) திருப்புங்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௧)
Tafseer
௩௨

وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَاۤىِٕكُمْۗ اِنْ يَّكُوْنُوْا فُقَرَاۤءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ٣٢

wa-ankiḥū
وَأَنكِحُوا۟
நீங்கள் திருமணம் செய்து வையுங்கள்
l-ayāmā
ٱلْأَيَٰمَىٰ
ஜோடி இல்லாதவர்களுக்கு
minkum
مِنكُمْ
உங்களில்
wal-ṣāliḥīna
وَٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுக்கு
min
مِنْ
ஆண் அடிமைகளிலும்
ʿibādikum
عِبَادِكُمْ
ஆண் அடிமைகளிலும் உங்கள்
wa-imāikum
وَإِمَآئِكُمْۚ
உங்கள் பெண் அடிமைகளிலும்
in yakūnū
إِن يَكُونُوا۟
அவர்கள் இருந்தால்
fuqarāa
فُقَرَآءَ
ஏழைகளாக
yugh'nihimu
يُغْنِهِمُ
அவர்களை நிறைவுறச் செய்வான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦۗ
தனது அருளால்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௨)
Tafseer
௩௩

وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۗوَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِيْٓ اٰتٰىكُمْ ۗوَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَاۤءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ ٣٣

walyastaʿfifi
وَلْيَسْتَعْفِفِ
ஒழுக்கமாக இருக்கட்டும்
alladhīna lā yajidūna
ٱلَّذِينَ لَا يَجِدُونَ
வசதி பெறாதவர்கள்
nikāḥan
نِكَاحًا
திருமணத்திற்கு
ḥattā
حَتَّىٰ
வரை
yugh'niyahumu
يُغْنِيَهُمُ
அவர்களை நிறைவு செய்கிற
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦۗ
தன் அருளால்
wa-alladhīna yabtaghūna
وَٱلَّذِينَ يَبْتَغُونَ
இன்னும் விரும்புபவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
பத்திரம் எழுதிட
mimmā malakat
مِمَّا مَلَكَتْ
சொந்தமாக்கிக் கொண்டவர்களில்
aymānukum
أَيْمَٰنُكُمْ
உங்கள் வலக்கரங்கள்
fakātibūhum
فَكَاتِبُوهُمْ
எழுதிக் கொடுங்கள் அவர்களுக்கு
in ʿalim'tum
إِنْ عَلِمْتُمْ
நீங்கள் அறிந்தால்
fīhim
فِيهِمْ
அவர்களில்
khayran
خَيْرًاۖ
நன்மையை
waātūhum
وَءَاتُوهُم
இன்னும் கொடுங்கள் அவர்களுக்கு
min māli
مِّن مَّالِ
செல்வத்திலிருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
alladhī ātākum
ٱلَّذِىٓ ءَاتَىٰكُمْۚ
எது/கொடுத்தான்/உங்களுக்கு
walā tuk'rihū
وَلَا تُكْرِهُوا۟
நிர்ப்பந்திக்காதீர்கள்
fatayātikum
فَتَيَٰتِكُمْ
உங்கள் பெண் அடிமைகளை
ʿalā l-bighāi
عَلَى ٱلْبِغَآءِ
விபச்சாரத்தில்
in aradna
إِنْ أَرَدْنَ
விரும்பினால்
taḥaṣṣunan
تَحَصُّنًا
பத்தினித்தனத்தை
litabtaghū
لِّتَبْتَغُوا۟
நீ விரும்பியதற்காக
ʿaraḍa
عَرَضَ
பொருளை
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
உலக வாழ்க்கையின்
waman
وَمَن
யார்
yuk'rihhunna
يُكْرِههُّنَّ
அவர்களை நிர்ப்பந்திப்பாரோ
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
ik'rāhihinna
إِكْرَٰهِهِنَّ
அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
கருணை காட்டுபவன்
(வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரையில் அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்களுடைய கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்துவிடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.) ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௩)
Tafseer
௩௪

وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكُمْ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ ࣖ ٣٤

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
anzalnā
أَنزَلْنَآ
இறக்கியுள்ளோம்
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
āyātin
ءَايَٰتٍ
வசனங்களை
mubayyinātin
مُّبَيِّنَٰتٍ
தெளிவான
wamathalan
وَمَثَلًا
உதாரணத்தையும்
mina alladhīna khalaw
مِّنَ ٱلَّذِينَ خَلَوْا۟
சென்றவர்களின்
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
wamawʿiẓatan
وَمَوْعِظَةً
உபதேசத்தையும்
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றவர்களின் உதாரணங்களையும், இறை அச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசங்களையும் (இதில்) இறக்கி வைத்திருக்கிறோம்; ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௪)
Tafseer
௩௫

۞ اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌۗ اَلْمِصْبَاحُ فِيْ زُجَاجَةٍۗ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍۙ يَّكَادُ زَيْتُهَا يُضِيْۤءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌۗ نُوْرٌ عَلٰى نُوْرٍۗ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَاۤءُۗ وَيَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ۙ ٣٥

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
nūru
نُورُ
ஒளி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
மற்றும் பூமி
mathalu
مَثَلُ
தன்மையாவது
nūrihi
نُورِهِۦ
ஒளியின்
kamish'katin
كَمِشْكَوٰةٍ
ஒரு மாடத்தைப் போன்றாகும்
fīhā
فِيهَا
அதில்
miṣ'bāḥun
مِصْبَاحٌۖ
ஒரு விளக்கு உள்ளது
l-miṣ'bāḥu
ٱلْمِصْبَاحُ
அந்த விளக்கு
fī zujājatin
فِى زُجَاجَةٍۖ
கண்ணாடியில் உள்ளது
l-zujājatu
ٱلزُّجَاجَةُ
அந்த கண்ணாடி
ka-annahā
كَأَنَّهَا
அதைப் போல் உள்ளது
kawkabun
كَوْكَبٌ
ஒரு நட்சத்திரம்
durriyyun
دُرِّىٌّ
மின்னக்கூடிய
yūqadu
يُوقَدُ
எரிக்கப்படுகிறது
min
مِن
இருந்து
shajaratin
شَجَرَةٍ
மரத்தில்
mubārakatin
مُّبَٰرَكَةٍ
அருள் நிறைந்த
zaytūnatin
زَيْتُونَةٍ
ஆலிவ் என்னும்
lā sharqiyyatin
لَّا شَرْقِيَّةٍ
கிழக்கிலும் அல்லாத
walā gharbiyyatin
وَلَا غَرْبِيَّةٍ
மேற்கிலும் அல்லாத
yakādu
يَكَادُ
ஆரம்பித்து விடுகிறது
zaytuhā
زَيْتُهَا
அதன் எண்ணெய்
yuḍīu
يُضِىٓءُ
ஒளிர்கிறது
walaw lam tamsashu
وَلَوْ لَمْ تَمْسَسْهُ
அதன் மீது படவில்லை
nārun
نَارٌۚ
தீ
nūrun
نُّورٌ
ஒளி
ʿalā
عَلَىٰ
மேல்
nūrin
نُورٍۗ
ஒளிக்கு
yahdī
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
linūrihi
لِنُورِهِۦ
தன் ஒளிக்கு
man
مَن
தான்
yashāu
يَشَآءُۚ
நாடியவர்களுக்கு
wayaḍribu
وَيَضْرِبُ
இன்னும் விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-amthāla
ٱلْأَمْثَٰلَ
உதாரணங்களை
lilnnāsi
لِلنَّاسِۗ
மக்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
அனைத்தையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அல்லாஹ், வானங்கள் பூமி (ஆகியவை)களின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கும்) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக்கொண்டு) இருக்கின்றது. (அதில்) பாக்கியம் பெற்ற "ஜைத்தூன்" மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகின்றது. அது கீழ்நாட்டிலுள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெய் நெருப்புத் தொடாவிடினும் பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடிய வர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகின்றான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன்னுடைய தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் மிக்க அறிந்தவன். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௫)
Tafseer
௩௬

فِيْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ يُسَبِّحُ لَهٗ فِيْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۙ ٣٦

fī buyūtin
فِى بُيُوتٍ
இறை இல்லங்களில்
adhina
أَذِنَ
அனுமதித்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an tur'faʿa
أَن تُرْفَعَ
அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கு
wayudh'kara
وَيُذْكَرَ
இன்னும் நினைவு கூறப்படுவதற்கும்
fīhā
فِيهَا
அவற்றில்
us'muhu
ٱسْمُهُۥ
அவனது திருப்பெயர்
yusabbiḥu
يُسَبِّحُ
துதிக்கின்றனர்
lahu
لَهُۥ
அவனை
fīhā
فِيهَا
அவற்றில்
bil-ghuduwi
بِٱلْغُدُوِّ
காலையிலும்
wal-āṣāli
وَٱلْءَاصَالِ
மாலையிலும்
(அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகளில் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் கூறவும், அதைக் கண்ணியப் படுத்தும்படியும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு, ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௬)
Tafseer
௩௭

رِجَالٌ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِيْتَاۤءِ الزَّكٰوةِ ۙيَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ ٣٧

rijālun
رِجَالٌ
பல ஆண்கள்
lā tul'hīhim
لَّا تُلْهِيهِمْ
அவர்களை திசை திருப்பி விடாது
tijāratun
تِجَٰرَةٌ
வர்த்தகமோ
walā bayʿun
وَلَا بَيْعٌ
விற்பனையோ
ʿan dhik'ri
عَن ذِكْرِ
நினைவை விட்டும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-iqāmi
وَإِقَامِ
இன்னும் நிலைநிறுத்துவதை
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
தொழுகையை
waītāi l-zakati
وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِۙ
இன்னும் அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை
yakhāfūna
يَخَافُونَ
அவர்கள் பயப்படுவார்கள்
yawman
يَوْمًا
ஒரு நாளை
tataqallabu fīhi
تَتَقَلَّبُ فِيهِ
தடுமாறும்/அதில்
l-qulūbu
ٱلْقُلُوبُ
உள்ளங்களும்
wal-abṣāru
وَٱلْأَبْصَٰرُ
பார்வைகளும்
(அதில்) பலர் இருக்கின்றனர். (அவர்கள் எத்தகைய வரென்றால்) அவர்களுடைய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பி விடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறி விடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௭)
Tafseer
௩௮

لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖۗ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ ٣٨

liyajziyahumu
لِيَجْزِيَهُمُ
கூலி வழங்குவதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aḥsana
أَحْسَنَ
மிக அழகியவற்றுக்கு
mā ʿamilū
مَا عَمِلُوا۟
அவர்கள் செய்ததில்
wayazīdahum
وَيَزِيدَهُم
மேலும் அதிகப்படுத்துவதற்காக அவர்களுக்கு
min faḍlihi
مِّن فَضْلِهِۦۗ
தனது அருளிலிருந்து
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yarzuqu
يَرْزُقُ
வழங்குகிறான்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடியவருக்கு
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி
அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) வைகளைவிட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மென்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௮)
Tafseer
௩௯

وَالَّذِيْنَ كَفَرُوْٓا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَاۤءًۗ حَتّٰٓى اِذَا جَاۤءَهٗ لَمْ يَجِدْهُ شَيْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ۗ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ ٣٩

wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
kasarābin
كَسَرَابٍۭ
கானல்நீர் போலாகும்
biqīʿatin
بِقِيعَةٍ
வெட்ட வெளியில்
yaḥsabuhu
يَحْسَبُهُ
அதை எண்ணுகிறார்
l-ẓamānu
ٱلظَّمْـَٔانُ
தாகித்தவன்
māan
مَآءً
தண்ணீராக
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā jāahu
إِذَا جَآءَهُۥ
அதனிடம் அவர் வந்தால்
lam yajid'hu
لَمْ يَجِدْهُ
அதை காணமாட்டார்
shayan
شَيْـًٔا
ஏதும்
wawajada
وَوَجَدَ
காண்பார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿindahu
عِندَهُۥ
அதனிடம்
fawaffāhu
فَوَفَّىٰهُ
அவன் அவருக்கு நிறைவேற்றுவான்
ḥisābahu
حِسَابَهُۥۗ
அவருடைய கணக்கை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
மிகத் தீவிரமானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
கேள்வி கணக்கு கேட்பதில்
எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர் களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதனைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கின்றான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௯)
Tafseer
௪௦

اَوْ كَظُلُمٰتٍ فِيْ بَحْرٍ لُّجِّيٍّ يَّغْشٰىهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌۗ ظُلُمٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍۗ اِذَآ اَخْرَجَ يَدَهٗ لَمْ يَكَدْ يَرٰىهَاۗ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ ࣖ ٤٠

aw
أَوْ
அல்லது
kaẓulumātin
كَظُلُمَٰتٍ
இருள்களைப் போலாகும்
fī baḥrin
فِى بَحْرٍ
கடலில் உள்ள
lujjiyyin
لُّجِّىٍّ
ஆழமான
yaghshāhu
يَغْشَىٰهُ
அதை சூழ்ந்திருக்க
mawjun min fawqihi
مَوْجٌ مِّن فَوْقِهِۦ
அலை / மேல்
mawjun
مَوْجٌ
அதன் அலை
min fawqihi
مِّن فَوْقِهِۦ
அதற்கு மேல்
saḥābun
سَحَابٌۚ
மேகம்
ẓulumātun
ظُلُمَٰتٌۢ
இருள்கள்
baʿḍuhā
بَعْضُهَا
அவற்றில் சில
fawqa
فَوْقَ
மேலாக
baʿḍin
بَعْضٍ
சிலவற்றுக்கு
idhā akhraja
إِذَآ أَخْرَجَ
அவன் வெளியே நீட்டினால்
yadahu
يَدَهُۥ
தனது கையை
lam yakad yarāhā
لَمْ يَكَدْ يَرَىٰهَاۗ
அதை அவனால் பார்க்க முடியாது
waman
وَمَن
யாருக்கு
lam yajʿali
لَّمْ يَجْعَلِ
ஏற்படுத்தவில்லையோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahu
لَهُۥ
அவருக்கு
nūran
نُورًا
ஒளியை
famā
فَمَا
இல்லை
lahu
لَهُۥ
அவருக்கு
min nūrin
مِن نُّورٍ
ஒளியும்
அல்லது (அவர்களுடைய செயல்) கடலின் ஆழத்திலுள்ள இருளுக்கு ஒப்பாக இருக்கின்றது. அதனை அலைக்கு மேல் அலைகள் மூடிக் கொண்டிருப்பதுடன் மேகங்களும் (கவிழ்ந்து) மூடிக் கொண்டிருக்கின்றன. அன்றி, அவன் தன் கையை நீட்டிய போதிலும் அதனைக் காண முடியாத அளவுக்கு இருள்களும் ஒன்றன் மேல் ஒன்றாகச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. அல்லாஹ் எவனுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லையோ அவனுக்கு (எங்கிருந்தும்) யாதொரு பிரகாசமும் கிட்டாது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௦)
Tafseer