Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௪

Qur'an Surah Al-Mu'minun Verse 44

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَاۗ كُلَّمَا جَاۤءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ فَاَتْبَعْنَا بَعْضَهُمْ بَعْضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِيْثَۚ فَبُعْدًا لِّقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ (المؤمنون : ٢٣)

thumma
ثُمَّ
Then
பிறகு
arsalnā
أَرْسَلْنَا
We sent
நாம் அனுப்பினோம்
rusulanā
رُسُلَنَا
Our Messengers
நமது தூதர்களை
tatrā
تَتْرَاۖ
(in) succession
தொடர்ச்சியாக
kulla mā jāa
كُلَّ مَا جَآءَ
Every time Every time came
வந்தபோதெல்லாம்
ummatan
أُمَّةً
(to) a nation
ஒரு சமுதாயத்திற்கு
rasūluhā
رَّسُولُهَا
its Messenger
அதன் தூதர்
kadhabūhu
كَذَّبُوهُۚ
they denied him
அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்
fa-atbaʿnā
فَأَتْبَعْنَا
so We made (them) follow
ஆகவே, பின்னர் கொண்டு வந்தோம்
baʿḍahum
بَعْضَهُم
some of them
அவர்களில் சிலரை
baʿḍan
بَعْضًا
others
சிலரை
wajaʿalnāhum
وَجَعَلْنَٰهُمْ
and We made them
அவர்களை நாம் ஆக்கிவிட்டோம்
aḥādītha
أَحَادِيثَۚ
narrations
படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக
fabuʿ'dan
فَبُعْدًا
So away
தொலைந்து போகட்டும்
liqawmin
لِّقَوْمٍ
with a people
மக்கள்
lā yu'minūna
لَّا يُؤْمِنُونَ
not they believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Summa arsalnaa Rusulanaa tatraa kulla maa jaaa'a ummatar Rasooluhaa kazzabooh; fa atba'naa ba'dahum ba'danw wa ja'alnaahum ahaadees; fabu'dal liqawmil laa yu'minoon (QS. al-Muʾminūn:44)

English Sahih International:

Then We sent Our messengers in succession. Every time there came to a nation its messenger, they denied him, so We made them follow one another [to destruction], and We made them narrations. So away with a people who do not believe. (QS. Al-Mu'minun, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

பின்னரும் நாம் நம்முடைய தூதர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பிக் கொண்டே இருந்தோம். எவ்வகுப்பாரிடம் நம்முடைய தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௪)

Jan Trust Foundation

பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு நாம் நமது தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒரு சமுதாயத்திற்கு, அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களில் சிலரை (அழித்து) சிலரை பின்னர் கொண்டு வந்தோம். அவர்களை (மக்களுக்கு) படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்டோம். நம்பிக்கை கொள்ளாத மக்கள் தொலைந்து போகட்டும்.