Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௪

Qur'an Surah Al-Mu'minun Verse 14

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَأْنٰهُ خَلْقًا اٰخَرَۗ فَتَبَارَكَ اللّٰهُ اَحْسَنُ الْخَالِقِيْنَۗ (المؤمنون : ٢٣)

thumma
ثُمَّ
Then
பிறகு
khalaqnā
خَلَقْنَا
We created
நாம் படைத்தோம்
l-nuṭ'fata
ٱلنُّطْفَةَ
the semen-drop
இந்திரியத் துளியை
ʿalaqatan
عَلَقَةً
(into) a clinging substance
ஒரு இரத்தக்கட்டியாக
fakhalaqnā
فَخَلَقْنَا
then We created
நாம் படைத்தோம்
l-ʿalaqata
ٱلْعَلَقَةَ
the clinging substance
இரத்தக் கட்டியை
muḍ'ghatan
مُضْغَةً
(into) an embryonic lump
ஒரு சதைத் துண்டாக
fakhalaqnā
فَخَلَقْنَا
then We created
நாம் படைத்தோம்
l-muḍ'ghata
ٱلْمُضْغَةَ
the embryonic lump
சதைத் துண்டை
ʿiẓāman
عِظَٰمًا
(into) bones
எலும்புகளாக
fakasawnā
فَكَسَوْنَا
then We clothed
அணிவித்தோம்
l-ʿiẓāma
ٱلْعِظَٰمَ
the bones
எலும்புகளுக்கு
laḥman
لَحْمًا
(with) flesh;
சதையை
thumma
ثُمَّ
then
பிறகு
anshanāhu
أَنشَأْنَٰهُ
We produce it
அவனைப் படைத்தோம்
khalqan
خَلْقًا
(as) a creation
படைப்பாக
ākhara
ءَاخَرَۚ
another
வேறு ஒரு
fatabāraka
فَتَبَارَكَ
So blessed is
மிக்க அருள் வளம் நிறைந்து விட்டான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
aḥsanu
أَحْسَنُ
(the) Best
மிக அழகியவனாகிய
l-khāliqīna
ٱلْخَٰلِقِينَ
(of) the Creators
செய்பவர்களில்

Transliteration:

Summa khalaqnan nutfata 'alaqatan fakhalaqnal 'alaqata mudghatan fakhalaq nal mudghata 'izaaman fakasawnal 'izaama lahman summa anshaanaahu khalqan aakhar; fatabaarakal laahu ahsanul khaaliqeen (QS. al-Muʾminūn:14)

English Sahih International:

Then We made the sperm-drop into a clinging clot, and We made the clot into a lump [of flesh], and We made [from] the lump, bones, and We covered the bones with flesh; then We developed him into another creation. So blessed is Allah, the best of creators. (QS. Al-Mu'minun, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௪)

Jan Trust Foundation

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு இந்திரியத் துளியை ஒரு இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம் படைத்தோம். இரத்தக் கட்டியை ஒரு சதைத் துண்டாக நாம் படைத்தோம். சதைத் துண்டை எலும்புகளாக நாம் படைத்தோம். எலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பிறகு அவனை (உயிர் ஊதி அதன்மூலம்) வேறு ஒரு (புதிய) படைப்பாக நாம் படைத்தோம். செய்பவர்களில் மிக அழகியவனாகிய அல்லாஹ் மிக்க அருள் வளம் நிறைந்து விட்டான்.