Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 3

Al-Mu'minun

(al-Muʾminūn)

௨௧

وَاِنَّ لَكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةًۗ نُسْقِيْكُمْ مِّمَّا فِيْ بُطُوْنِهَا وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَأْكُلُوْنَ ۙ ٢١

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
lakum
لَكُمْ
உங்களுக்கு
fī l-anʿāmi
فِى ٱلْأَنْعَٰمِ
கால்நடையில்
laʿib'ratan
لَعِبْرَةًۖ
ஒரு படிப்பினை
nus'qīkum
نُّسْقِيكُم
உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்
mimmā fī buṭūnihā
مِّمَّا فِى بُطُونِهَا
அவற்றின் வயிற்றிலிருந்து
walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
fīhā
فِيهَا
அவற்றில்
manāfiʿu
مَنَٰفِعُ
பலன்களும்
kathīratun
كَثِيرَةٌ
அதிகமான
wamin'hā
وَمِنْهَا
இன்னும் அவற்றிலிருந்து
takulūna
تَأْكُلُونَ
நீங்கள் புசியுங்கள்
நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அன்றி, உங்களுக்கு அவைகளில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௧)
Tafseer
௨௨

وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُوْنَ ࣖ ٢٢

waʿalayhā
وَعَلَيْهَا
அவற்றின் மீதும்
waʿalā l-ful'ki
وَعَلَى ٱلْفُلْكِ
கப்பல்கள் மீதும்
tuḥ'malūna
تُحْمَلُونَ
நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௨)
Tafseer
௨௩

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ اَفَلَا تَتَّقُوْنَ ٢٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
nūḥan
نُوحًا
நூஹை
ilā qawmihi
إِلَىٰ قَوْمِهِۦ
அவருடைய மக்களிடம்
faqāla
فَقَالَ
அவர் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
எனது மக்களே
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا
இல்லை
lakum
لَكُم
உங்களுக்கு
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
கடவுள் யாரும்
ghayruhu
غَيْرُهُۥٓۖ
அவனையன்றி
afalā tattaqūna
أَفَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?
நிச்சயமாக நாம் "நூஹ்" (நபியை) நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?" என்று கூறினார். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௩)
Tafseer
௨௪

فَقَالَ الْمَلَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَآ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْۙ يُرِيْدُ اَنْ يَّتَفَضَّلَ عَلَيْكُمْۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰۤىِٕكَةً ۖمَّا سَمِعْنَا بِهٰذَا فِيْٓ اٰبَاۤىِٕنَا الْاَوَّلِيْنَ ۚ ٢٤

faqāla
فَقَالَ
கூறினர்
l-mala-u
ٱلْمَلَؤُا۟
தலைவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
min qawmihi
مِن قَوْمِهِۦ
அவருடைய மக்களில்
مَا
இல்லை
hādhā
هَٰذَآ
இவர்
illā
إِلَّا
தவிர
basharun
بَشَرٌ
மனிதரே
mith'lukum
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
yurīdu
يُرِيدُ
அவர் நாடுகிறார்
an yatafaḍḍala
أَن يَتَفَضَّلَ
மேன்மை அடைய
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
walaw shāa
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
la-anzala
لَأَنزَلَ
இறக்கி இருப்பான்
malāikatan
مَلَٰٓئِكَةً
வானவர்களை
mā samiʿ'nā
مَّا سَمِعْنَا
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
bihādhā
بِهَٰذَا
இதை
fī ābāinā
فِىٓ ءَابَآئِنَا
எங்கள் மூதாதைகளில்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான
அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தம்முடைய மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் மலக்குகளையே அனுப்பி வைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும், ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௪)
Tafseer
௨௫

اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰى حِيْنٍ ٢٥

in huwa
إِنْ هُوَ
அவர் இல்லை
illā
إِلَّا
தவிர
rajulun
رَجُلٌۢ
ஓர் ஆடவரே
bihi
بِهِۦ
அவருக்கு
jinnatun
جِنَّةٌ
பைத்தியம் (ஏற்பட்டிருக்கிறது)
fatarabbaṣū
فَتَرَبَّصُوا۟
எதிர் பார்த்திருங்கள்
bihi
بِهِۦ
அவருக்கு
ḥattā
حَتَّىٰ
வரை
ḥīnin
حِينٍ
ஒரு காலம்
"இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, (இவர் கூறுவதின் உண்மையை) சிறிது காலம் பொறுத்து இருந்து பாருங்கள்" என்றும் கூறினார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௫)
Tafseer
௨௬

قَالَ رَبِّ انْصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ ٢٦

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
unṣur'nī
ٱنصُرْنِى
எனக்கு நீ உதவுவாயாக
bimā kadhabūni
بِمَا كَذَّبُونِ
அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
(அதற்கு நூஹ் நபி) "என்னுடைய இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்" என்று பிரார்த்தித்தார். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௬)
Tafseer
௨௭

فَاَوْحَيْنَآ اِلَيْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا فَاِذَا جَاۤءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ فَاسْلُكْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْۚ وَلَا تُخَاطِبْنِيْ فِى الَّذِيْنَ ظَلَمُوْاۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ٢٧

fa-awḥaynā
فَأَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
ilayhi
إِلَيْهِ
அவருக்கு
ani iṣ'naʿi
أَنِ ٱصْنَعِ
நீர் செய்வீராக
l-ful'ka
ٱلْفُلْكَ
கப்பலை
bi-aʿyuninā
بِأَعْيُنِنَا
நமது கண்களுக்கு முன்னும்
wawaḥyinā
وَوَحْيِنَا
நமது அறிவிப்பின்படியும்
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வந்துவிட்டால்
amrunā
أَمْرُنَا
நம் கட்டளை
wafāra
وَفَارَ
பொங்க ஆரம்பித்து விட்டால்
l-tanūru
ٱلتَّنُّورُۙ
அடுப்பு
fa-us'luk fīhā
فَٱسْلُكْ فِيهَا
அதில்/ஏற்றுவீராக
min kullin
مِن كُلٍّ
எல்லாவற்றிலிருந்தும்
zawjayni
زَوْجَيْنِ
ஜோடிகளையும்
ith'nayni
ٱثْنَيْنِ
இரண்டு
wa-ahlaka
وَأَهْلَكَ
இன்னும் உமது குடும்பத்தினரையும்
illā
إِلَّا
தவிர
man
مَن
எவன்
sabaqa
سَبَقَ
முந்திவிட்டதோ
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீது
l-qawlu
ٱلْقَوْلُ
வாக்கு
min'hum
مِنْهُمْۖ
அவர்களில்
walā tukhāṭib'nī
وَلَا تُخَٰطِبْنِى
இன்னும் என்னிடம் நீர் உரையாடாதீர்
fī alladhīna ẓalamū
فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ۖ
அநியாயக்காரர்கள் விஷயத்தில்
innahum
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
mugh'raqūna
مُّغْرَقُونَ
மூழ்கடிக்கப்படுவார்கள்
அதற்கு நாம் அவரை நோக்கி நீங்கள் "நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்யுங்கள். நம்முடைய உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வொரு உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உங்களுடைய குடும்பத்தினரையும் நீங்கள் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள். ஆயினும், எவன் மீது நம்முடைய தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்களது குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீங்கள் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்" என்று வஹீ அறிவித்தோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௭)
Tafseer
௨௮

فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ نَجّٰىنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ٢٨

fa-idhā is'tawayta
فَإِذَا ٱسْتَوَيْتَ
நீர் ஏறிவிட்டால்
anta
أَنتَ
நீரும்
waman maʿaka
وَمَن مَّعَكَ
இன்னும் உன்னுடன் இருப்பவரும்
ʿalā l-ful'ki
عَلَى ٱلْفُلْكِ
கப்பலில்
faquli
فَقُلِ
கூறுவீராக
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
alladhī najjānā
ٱلَّذِى نَجَّىٰنَا
எவன்/எங்களை பாதுகாத்தான்
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் "அநியாயக்கார இந்த மக்களில் இருந்தும் எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௮)
Tafseer
௨௯

وَقُلْ رَّبِّ اَنْزِلْنِيْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ ٢٩

waqul
وَقُل
இன்னும் கூறுவீராக
rabbi
رَّبِّ
என் இறைவா
anzil'nī
أَنزِلْنِى
என்னை தங்க வைப்பாயாக
munzalan
مُنزَلًا
ஓர் இடத்தில்
mubārakan
مُّبَارَكًا
அருள் நிறைந்த
wa-anta
وَأَنتَ
நீ
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-munzilīna
ٱلْمُنزِلِينَ
தங்க வைப்பவர்களில்
அன்றி "என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ளவனாக (பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலிலிருந்து) இறக்கி வைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்தியுங்கள்" (என்றும் கூறினோம்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௯)
Tafseer
௩௦

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِيْنَ ٣٠

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
(பல) அத்தாட்சிகள்
wa-in kunnā
وَإِن كُنَّا
நிச்சயமாக நாம் இருந்தோம்
lamub'talīna
لَمُبْتَلِينَ
சோதிப்பவர்களாகவே
(இவ்வாறு மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதித்தபோதிலும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௦)
Tafseer