Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩௭

Qur'an Surah Al-Hajj Verse 37

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَاۤؤُهَا وَلٰكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْۗ كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰىكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ (الحج : ٢٢)

lan yanāla
لَن يَنَالَ
Will not reach
அறவே அடையாது
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
luḥūmuhā
لُحُومُهَا
their meat
அவற்றின்இறைச்சிகள்
walā dimāuhā
وَلَا دِمَآؤُهَا
and not their blood
இன்னும் அவற்றின்இரத்தங்கள்
walākin
وَلَٰكِن
but
எனினும்
yanāluhu
يَنَالُهُ
reaches Him
அவனை அடையும்
l-taqwā
ٱلتَّقْوَىٰ
the piety
இறையச்சம்
minkum
مِنكُمْۚ
from you
உங்களிடமிருந்து
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
sakharahā
سَخَّرَهَا
He subjected them
அவற்றை வசப்படுத்திக் கொடுத்தான்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
litukabbirū
لِتُكَبِّرُوا۟
so that you may magnify
பெருமைப் படுத்துவதற்காக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
ʿalā mā hadākum
عَلَىٰ مَا هَدَىٰكُمْۗ
for what He has guided you
அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக
wabashiri
وَبَشِّرِ
And give glad tidings
நற்செய்தி கூறுவீராக
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
(to) the good-doers
அழகிய முறையில் கீழ்ப்படிகின்றவர்களுக்கு

Transliteration:

Lany yanaalal laaha luhoo muhaa wa laa dimaaa'uhaa wa laakiny yanaaluhut taqwaa minkum; kazaalika sakhkharhaa lakum litukabbirul laaha 'alaa ma hadaakum; wa bashshirul muhsineen (QS. al-Ḥajj:37)

English Sahih International:

Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you. Thus have We subjected them to you that you may glorify Allah for that [to] which He has guided you; and give good tidings to the doers of good. (QS. Al-Hajj, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்களுடைய இறை அச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்றி செய்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௩௭)

Jan Trust Foundation

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றின் இறைச்சிகள், அவற்றின் இரத்தங்கள் அல்லாஹ்வை அறவே அடையாது. எனினும், இறையச்சம்தான் உங்களிடமிருந்து அவனை அடையும். இவ்வாறுதான் அவன் அவற்றை (அந்த குர்பானி பிராணிகளை) உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், அல்லாஹ்வை -அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக- நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக. (நபியே!) அல்லாஹ்விற்கு அழகிய முறையில் கீழ்ப்படிகின்றவர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!