Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩௫

Qur'an Surah Al-Hajj Verse 35

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصَّابِرِيْنَ عَلٰى مَآ اَصَابَهُمْ وَالْمُقِيْمِى الصَّلٰوةِۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ (الحج : ٢٢)

alladhīna
ٱلَّذِينَ
Those
எவர்கள்
idhā dhukira
إِذَا ذُكِرَ
when is mentioned
நினைவுகூரப்பட்டால்
l-lahu
ٱللَّهُ
Allah -
அல்லாஹ்
wajilat
وَجِلَتْ
fear
பயப்படும்
qulūbuhum
قُلُوبُهُمْ
their hearts
அவர்களது உள்ளங்கள்
wal-ṣābirīna
وَٱلصَّٰبِرِينَ
and those who are patient
இன்னும் பொறுமையாக இருப்பார்கள்
ʿalā
عَلَىٰ
over
மீது
mā aṣābahum
مَآ أَصَابَهُمْ
whatever has afflicted them
அவர்களுக்கு ஏற்பட்டவற்றின்
wal-muqīmī
وَٱلْمُقِيمِى
and those who establish
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
the prayer
தொழுகையை
wamimmā razaqnāhum
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
and out of what We have provided them
இன்னும் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து
yunfiqūna
يُنفِقُونَ
they spend
தர்மம் செய்வார்கள்

Transliteration:

Allazeena izaa zukiral laahu wajilat quloobuhum wassaabireena 'alaa maaa asaabahum walmuqeemis Salaati wa mimmaa razaqnaahum yunfiqoon (QS. al-Ḥajj:35)

English Sahih International:

Who, when Allah is mentioned, their hearts are fearful, and [to] the patient over what has afflicted them, and the establishers of prayer and those who spend from what We have provided them. (QS. Al-Hajj, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் தானமும் செய்வார்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௩௫)

Jan Trust Foundation

அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்களுக்கு முன்) அல்லாஹ்வை நினைவு கூரப்பட்டால் அவர்களது உள்ளங்கள் பயப்படும். அவர்களுக்கு ஏற்பட்டவற்றின் மீது (-சோதனைகளின் மீது) பொறுமையாக இருப்பார்கள். தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.