Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩௦

Qur'an Surah Al-Hajj Verse 30

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ حُرُمٰتِ اللّٰهِ فَهُوَ خَيْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖۗ وَاُحِلَّتْ لَكُمُ الْاَنْعَامُ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِ ۙ (الحج : ٢٢)

dhālika
ذَٰلِكَ
That
அவைதான்
waman
وَمَن
and whoever
எவர்
yuʿaẓẓim
يُعَظِّمْ
honors
மதிப்பார்
ḥurumāti
حُرُمَٰتِ
(the) sacred rites
புனிதங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
fahuwa
فَهُوَ
then it
அது
khayrun
خَيْرٌ
(is) best
மிகச் சிறந்தது
lahu
لَّهُۥ
for him
அவருக்கு
ʿinda rabbihi
عِندَ رَبِّهِۦۗ
near his Lord
அவருடைய இறைவனிடம்
wa-uḥillat
وَأُحِلَّتْ
And are made lawful
ஆகுமாக்கப் பட்டுள்ளன
lakumu
لَكُمُ
to you
உங்களுக்கு
l-anʿāmu
ٱلْأَنْعَٰمُ
the cattle
கால்நடைகள்
illā
إِلَّا
except
தவிர
mā yut'lā
مَا يُتْلَىٰ
what is recited
ஓதிக்காட்டப்படுபவற்றை
ʿalaykum
عَلَيْكُمْۖ
to you
உங்களுக்கு
fa-ij'tanibū
فَٱجْتَنِبُوا۟
So avoid
விலகிக்கொள்ளுங்கள்
l-rij'sa
ٱلرِّجْسَ
the abomination
அசுத்தங்களை
mina l-awthāni
مِنَ ٱلْأَوْثَٰنِ
of the idols
சிலைகளை
wa-ij'tanibū
وَٱجْتَنِبُوا۟
and avoid
இன்னும் விலகிக் கொள்ளுங்கள்
qawla
قَوْلَ
(the) word
பேச்சை (விட்டு)
l-zūri
ٱلزُّورِ
false
பொய்

Transliteration:

Zaalika wa mai yu'azzim hurumaatil laahi fahuwa khairul lahoo 'inda Rabbih; wa uhillat lakumul an'aamu illaa maa yutlaa 'alaikum fajtanibur rijsa minal awsaani wajtaniboo qawlaz zoor (QS. al-Ḥajj:30)

English Sahih International:

That [has been commanded], and whoever honors the sacred ordinances of Allah – it is best for him in the sight of his Lord. And permitted to you are the grazing livestock, except what is recited to you. So avoid the uncleanliness of idols and avoid false statement, (QS. Al-Hajj, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பான வைகளை எவர் மகிமைப்படுத்துகின்றாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பித்த (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வைகளைத் தவிர (மற்றவைகளைப் புசிப்பது) ஆகும். ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். அன்றி, பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்." (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௩௦)

Jan Trust Foundation

இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவைதான் (-உங்களுக்கு ஏவப்பட்ட விஷயங்கள், அழுக்குகளை நீக்குவது, நேர்ச்சைகளை நிறைவேற்றுவது கஅபாவை தவாஃப் செய்வது- ஆகியவைதான். உங்கள் மீது கடமையாகும்.) எவர் அல்லாஹ்வுடைய புனிதங்களை (-மக்கா, ஹஜ், உம்ரா இன்னும் அவற்றில் தடுக்கப்பட்ட விஷயங்களை) எவர் மதிப்பாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் மிகச் சிறந்தது. உங்களுக்கு கால்நடைகள் (அவற்றை அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து புசிப்பது) ஆகுமாக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு (இந்தக் குர்ஆனில் 5:3) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர. (அவை உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளன.) அசுத்தங்களை -சிலைகளை- (வணங்குவதை) விட்டு விலகிக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சை விட்டு விலகிக் கொள்ளுங்கள்.