Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஜ் - Page: 6

Al-Hajj

(al-Ḥajj)

௫௧

وَالَّذِيْنَ سَعَوْا فِيْٓ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ ٥١

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
saʿaw
سَعَوْا۟
முயற்சித்தார்கள்
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
muʿājizīna
مُعَٰجِزِينَ
மிகைத்துவிட முயற்சித்தவர்களாக
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
aṣḥābu l-jaḥīmi
أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
நரகவாசிகள்
அன்றி, எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௧)
Tafseer
௫௨

وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِيٍّ اِلَّآ اِذَا تَمَنّٰىٓ اَلْقَى الشَّيْطٰنُ فِيْٓ اُمْنِيَّتِهٖۚ فَيَنْسَخُ اللّٰهُ مَا يُلْقِى الشَّيْطٰنُ ثُمَّ يُحْكِمُ اللّٰهُ اٰيٰتِهٖۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ۙ ٥٢

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
min rasūlin
مِن رَّسُولٍ
எந்த தூதரையும்
walā nabiyyin
وَلَا نَبِىٍّ
நபியையும்
illā
إِلَّآ
தவிர
idhā tamannā
إِذَا تَمَنَّىٰٓ
அவர் ஓதும்போது
alqā
أَلْقَى
கூறினான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
fī um'niyyatihi
فِىٓ أُمْنِيَّتِهِۦ
அவர் ஓதுவதில்
fayansakhu
فَيَنسَخُ
பின்னர் போக்கி விடுவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā yul'qī l-shayṭānu
مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான் கூறுவதை
thumma
ثُمَّ
பிறகு
yuḥ'kimu
يُحْكِمُ
உறுதிப்படுத்துவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
āyātihi
ءَايَٰتِهِۦۗ
தனது வசனங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், தூதரும் (எதையும்) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர்தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்தி விடுகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௨)
Tafseer
௫௩

لِّيَجْعَلَ مَا يُلْقِى الشَّيْطٰنُ فِتْنَةً لِّلَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِيَةِ قُلُوْبُهُمْۗ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَفِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ ۙ ٥٣

liyajʿala
لِّيَجْعَلَ
(முடிவில்)ஆக்குவான்
mā yul'qī
مَا يُلْقِى
கூறுவதை
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
fit'natan
فِتْنَةً
சோதனையாக
lilladhīna fī qulūbihim
لِّلَّذِينَ فِى قُلُوبِهِم
எவர்களுக்கு/அவர்களுடைய உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
நோய்
wal-qāsiyati
وَٱلْقَاسِيَةِ
இன்னும் இறுகியவர்களுக்கு
qulūbuhum
قُلُوبُهُمْۗ
அவர்கள் உள்ளங்கள்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
lafī shiqāqin
لَفِى شِقَاقٍۭ
முரண்பாட்டில்தான் இருக்கின்றனர்
baʿīdin
بَعِيدٍ
மிக தூரமான
(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு (அல்லாஹ்) ஒரு காரணமாகவும் ஆக்கிவிடுகிறான். அன்றி, நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௩)
Tafseer
௫௪

وَّلِيَعْلَمَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَيُؤْمِنُوْا بِهٖ فَتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْۗ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٥٤

waliyaʿlama
وَلِيَعْلَمَ
(முடிவில்,) அறிந்து கொள்வார்(கள்)
alladhīna ūtū
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
அறிவு
annahu
أَنَّهُ
நிச்சயமாக இது
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மைதான்
min rabbika
مِن رَّبِّكَ
உமது இறைவன் புறத்திலிருந்து
fayu'minū
فَيُؤْمِنُوا۟
நம்பிக்கை கொண்டு
bihi
بِهِۦ
அதை
fatukh'bita
فَتُخْبِتَ
பணிந்து விடும்
lahu
لَهُۥ
அதற்கு
qulūbuhum
قُلُوبُهُمْۗ
அவர்களுடைய உள்ளங்கள்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lahādi
لَهَادِ
வழிகாட்டக் கூடியவன்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்களை
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
பாதைக்கு
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான
எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப் பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு தங்கள் மனப்பூர்வமாகவே அவனுக்கு கட்டுப்படுவார்கள். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை, அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௪)
Tafseer
௫௫

وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ مِرْيَةٍ مِّنْهُ حَتّٰى تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً اَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيْمٍ ٥٥

walā yazālu
وَلَا يَزَالُ
தொடர்ந்து இருக்கின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
fī mir'yatin
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில்தான்
min'hu
مِّنْهُ
இதில்
ḥattā
حَتَّىٰ
வரை
tatiyahumu
تَأْتِيَهُمُ
அவர்களிடம் வருகின்ற
l-sāʿatu
ٱلسَّاعَةُ
மறுமை
baghtatan
بَغْتَةً
திடீரென
aw
أَوْ
அல்லது
yatiyahum
يَأْتِيَهُمْ
அவர்களிடம் வருகின்ற
ʿadhābu
عَذَابُ
வேதனை
yawmin
يَوْمٍ
நாளின்
ʿaqīmin
عَقِيمٍ
மலட்டு
(எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரையில் அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும் வரையில் இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௫)
Tafseer
௫௬

اَلْمُلْكُ يَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۗيَحْكُمُ بَيْنَهُمْۗ فَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِيْ جَنّٰتِ النَّعِيْمِ ٥٦

al-mul'ku
ٱلْمُلْكُ
ஆட்சி
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lillahi
لِّلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
fa-alladhīna
فَٱلَّذِينَ
ஆக, எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
fī jannāti
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
“நயீம்” இன்பமிகு
அந்நாளில், சர்வ அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சுவனபதியில் தங்கிவிடுவார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௬)
Tafseer
௫௭

وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَا فَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ࣖ ٥٧

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
muhīnun
مُّهِينٌ
இழிவுதரக்கூடிய
எவர்கள் (நம்முடைய தீர்ப்பை) நிராகரித்து, நம்முடைய வசனங்களை பொய்யாக்குகின்றார்களோ அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௭)
Tafseer
௫௮

وَالَّذِيْنَ هَاجَرُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ قُتِلُوْٓا اَوْ مَاتُوْا لَيَرْزُقَنَّهُمُ اللّٰهُ رِزْقًا حَسَنًاۗ وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ ٥٨

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
hājarū
هَاجَرُوا۟
நாடு துறந்து சென்றார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thumma
ثُمَّ
பிறகு
qutilū
قُتِلُوٓا۟
கொல்லப்பட்டு விட்டார்களோ
aw mātū
أَوْ مَاتُوا۟
அல்லது / மரணித்து விட்டார்களோ
layarzuqannahumu
لَيَرْزُقَنَّهُمُ
நிச்சயமாக அவர்களுக்கு கொடுப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
riz'qan
رِزْقًا
உணவை
ḥasanan
حَسَنًاۚ
அழகிய
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lahuwa
لَهُوَ
அவன்
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-rāziqīna
ٱلرَّٰزِقِينَ
உணவளிப்பவர்களில்
எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) வெட்டுப்படுகிறார்களோ அல்லது இறந்து விடுகின்றனரோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், உணவளிப்பவர்களில் எல்லாம் மிக்க மேலானவன். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௮)
Tafseer
௫௯

لَيُدْخِلَنَّهُمْ مُّدْخَلًا يَّرْضَوْنَهٗۗ وَاِنَّ اللّٰهَ لَعَلِيْمٌ حَلِيْمٌ ٥٩

layud'khilannahum
لَيُدْخِلَنَّهُم
நிச்சயமாக அவர்களை நுழைப்பான்
mud'khalan
مُّدْخَلًا
நுழைவிடத்தில்
yarḍawnahu
يَرْضَوْنَهُۥۗ
அவர்கள் திருப்தி படுவார்கள்/அதை
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
laʿalīmun
لَعَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥalīmun
حَلِيمٌ
மகா சகிப்பாளன்
ஆகவே, நிச்சயமாக அவன் அவர்களை அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் சேர்த்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௯)
Tafseer
௬௦

۞ ذٰلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوْقِبَ بِهٖ ثُمَّ بُغِيَ عَلَيْهِ لَيَنْصُرَنَّهُ اللّٰهُ ۗاِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ٦٠

dhālika
ذَٰلِكَ
அது
waman
وَمَنْ
எவர்
ʿāqaba
عَاقَبَ
தண்டிப்பார்
bimith'li mā ʿūqiba
بِمِثْلِ مَا عُوقِبَ
தண்டிக்கப்பட்டது போன்று
bihi
بِهِۦ
அதற்காக
thumma
ثُمَّ
பிறகு
bughiya
بُغِىَ
வன்முறை செய்யப்பட்டது
ʿalayhi
عَلَيْهِ
தன்மீது
layanṣurannahu
لَيَنصُرَنَّهُ
நிச்சயமாக அவருக்கு உதவுவான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
laʿafuwwun
لَعَفُوٌّ
மகா மன்னிப்பாளன்
ghafūrun
غَفُورٌ
பெரும் பிழை பொறுப்பாளன்
இவ்வாறே (காரியம் நடைபெறும்.) எவரேனும் தன்னை (எதிரி) துன்புறுத்திய மாதிரியே அந்தளவுக்கு அவனைத் துன்புறுத்தி விட்டு, பின்னும் அவனை (அந்த எதிரியை)க் கொடுமை செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (கொடுமைக்குள்ளான) அவனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கிறான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௦)
Tafseer