Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௮௭

Qur'an Surah Al-Anbya Verse 87

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّآ اِلٰهَ اِلَّآ اَنْتَ سُبْحٰنَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ ۚ (الأنبياء : ٢١)

wadhā l-nūni
وَذَا ٱلنُّونِ
And Dhun-Nun And Dhun-Nun
மீனுடையவரை நினைவு கூர்வீராக
idh dhahaba
إِذ ذَّهَبَ
when he went
அவர் சென்றபோது
mughāḍiban
مُغَٰضِبًا
(while) angry
கோபித்தவராக
faẓanna
فَظَنَّ
and thought
எண்ணினார்
an lan naqdira
أَن لَّن نَّقْدِرَ
that never We would decree
நெருக்கடியை கொடுக்கவே மாட்டோம்
ʿalayhi
عَلَيْهِ
upon him
அவருக்கு
fanādā
فَنَادَىٰ
Then he called
அவர் அழைத்தார்
fī l-ẓulumāti
فِى ٱلظُّلُمَٰتِ
in the darkness(es)
இருள்களில் இருந்தவராக
an lā
أَن لَّآ
that "(There is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّآ
except
தவிர
anta
أَنتَ
You
உன்னை
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
Glory be to You!
நீ மகா பரிசுத்தமானவன்
innī
إِنِّى
Indeed, [I]
நிச்சயமாக நான்
kuntu
كُنتُ
I am
சேர்ந்து விட்டேன்
mina l-ẓālimīna
مِنَ ٱلظَّٰلِمِينَ
of the wrongdoers"
அநியாயக்காரர்களில்

Transliteration:

Wa Zan Nooni iz zahaba mughaadiban fazaanna al lan naqdira 'alaihi fanaanna al lan naqdira 'alaihi fanaadaa fiz zulumaati al laaa ilaaha illaaa Anta Subhaanaka innee kuntu minaz zaalimeen (QS. al-ʾAnbiyāʾ:87)

English Sahih International:

And [mention] the man of the fish [i.e., Jonah], when he went off in anger and thought that We would not decree [anything] upon him. And he called out within the darknesses, "There is no deity except You; exalted are You. Indeed, I have been of the wrongdoers." (QS. Al-Anbya, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௮௭)

Jan Trust Foundation

இன்னும் (நினைவு கூர்வீராக|) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மீனுடையவரை நினைவு கூர்வீராக! அவர் கோபித்தவராக சென்றபோது. நாம் அவருக்கு நெருக்கடியை கொடுக்கவே மாட்டோம் என்று எண்ணினார். அவர் இருள்களில் இருந்தவராக அழைத்தார், “நிச்சயமாக உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் சேர்ந்து விட்டேன்.”