Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௭௮

Qur'an Surah Al-Anbya Verse 78

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۖ (الأنبياء : ٢١)

wadāwūda
وَدَاوُۥدَ
And Dawud
இன்னும் தாவூது
wasulaymāna
وَسُلَيْمَٰنَ
and Sulaiman
இன்னும் ஸுலைமானை
idh yaḥkumāni
إِذْ يَحْكُمَانِ
when they judged
அவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக
fī l-ḥarthi
فِى ٱلْحَرْثِ
concerning the field
விவசாயத்தின் விளைச்சலில்
idh nafashat
إِذْ نَفَشَتْ
when pastured
நுழைந்த போது
fīhi ghanamu
فِيهِ غَنَمُ
in it sheep
அதில்/ஆடுகள்
l-qawmi
ٱلْقَوْمِ
(of) a people
மக்களுடைய
wakunnā
وَكُنَّا
and We were
இருந்தோம்
liḥuk'mihim
لِحُكْمِهِمْ
to their judgment
அவர்களின் தீர்ப்பை
shāhidīna
شَٰهِدِينَ
witness
நாம் அறிந்தவர்களாக

Transliteration:

Wa Daawooda wa Sulaimaana iz yahkumaani fil harsi iz nafashat feehi ghanamul qawmi wa kunnaa lihukmihim shaahideen (QS. al-ʾAnbiyāʾ:78)

English Sahih International:

And [mention] David and Solomon, when they judged concerning the field – when the sheep of a people overran it [at night], and We were witness to their judgement. (QS. Al-Anbya, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பி வைத்தோம்.) ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்துவிட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௭௮)

Jan Trust Foundation

இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தாவூது இன்னும் சுலைமானை நினைவு கூர்வீராக! அவ்விருவரும் விவசாயத்தின் விளைச்சலில் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக! அதில் (அந்த விளைச்சலில் வேறு) மக்களுடைய ஆடுகள் (இரவில்) நுழைந்த போது... (அவை விளைச்சலை மேய்ந்து நாசப்படுத்தி விட்டன.) அவர்களின் (தாவூது, சுலைமான் மற்றும் அந்தக் கூட்டத்தார்களின்) தீர்ப்பை நாம் அறிந்தவர்களாக இருந்தோம்.