Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௪

Qur'an Surah Al-Anbya Verse 24

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةً ۗقُلْ هَاتُوْا بُرْهَانَكُمْۚ هٰذَا ذِكْرُ مَنْ مَّعِيَ وَذِكْرُ مَنْ قَبْلِيْۗ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَۙ الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ (الأنبياء : ٢١)

ami ittakhadhū
أَمِ ٱتَّخَذُوا۟
Or (have) they taken
அவர்கள் எடுத்துக் கொண்டார்களா?
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
ālihatan
ءَالِهَةًۖ
gods?
கடவுள்களை
qul
قُلْ
Say
கூறுவீராக
hātū
هَاتُوا۟
"Bring
கொண்டு வாருங்கள்
bur'hānakum
بُرْهَٰنَكُمْۖ
your proof
உங்கள் ஆதாரத்தை
hādhā
هَٰذَا
This
இது
dhik'ru
ذِكْرُ
(is) a Reminder
பேச்சாகும்
man maʿiya
مَن مَّعِىَ
(for those) who (are) with me
என்னுடன் உள்ளவர்களைப் பற்றி
wadhik'ru
وَذِكْرُ
and a Reminder
இன்னும் பேச்சாகும்
man qablī
مَن قَبْلِىۗ
(for those) who (were) before me"
எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றி
bal
بَلْ
But
மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
most of them
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்
l-ḥaqa
ٱلْحَقَّۖ
the truth
சத்தியத்தை
fahum
فَهُم
so they
ஆகவே, அவர்கள்
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
(are) averse
புறக்கணிக்கிறார்கள்

Transliteration:

Amit takhazoo min doonihee aalihatan qul haatoo burhaanakum haaza zikru mam ma'iya wa zikru man qablee; bal aksaruhum laa ya'lamoonal haqqa fahum mu'ridoon (QS. al-ʾAnbiyāʾ:24)

English Sahih International:

Or have they taken gods besides Him? Say, [O Muhammad], "Produce your proof. This [Quran] is the message for those with me and the message of those before me." But most of them do not know the truth, so they are turning away. (QS. Al-Anbya, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளைத் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) "என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்களுடைய அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்துகொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன” என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனை அன்றி (வேறு) கடவுள்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக: “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். அது என்னுடன் உள்ளவர்களைப் பற்றிய பேச்சாகும்; இன்னும் எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றிய பேச்சாகும். அவர்களில் (-இணைவைப்பவர்களில்) அதிகமானவர்கள் சத்தியத்தை அறியமாட்டார்கள். ஆகவே, அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.