Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 8

Taha

(Ṭāʾ Hāʾ)

௭௧

قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْۗ اِنَّهٗ لَكَبِيْرُكُمُ الَّذِيْ عَلَّمَكُمُ السِّحْرَۚ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ فِيْ جُذُوْعِ النَّخْلِۖ وَلَتَعْلَمُنَّ اَيُّنَآ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى ٧١

qāla
قَالَ
கூறினான்
āmantum
ءَامَنتُمْ
நம்பிக்கை கொண்டீர்களா?
lahu
لَهُۥ
அவரை
qabla
قَبْلَ
முன்னர்
an ādhana
أَنْ ءَاذَنَ
நான் அனுமதியளிப்பதற்கு
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
lakabīrukumu
لَكَبِيرُكُمُ
உங்கள் பெரியவர்
alladhī ʿallamakumu
ٱلَّذِى عَلَّمَكُمُ
அவர் உங்களுக்கு கற்றுக்கொடுத்தார்
l-siḥ'ra
ٱلسِّحْرَۖ
சூனியத்தை
fala-uqaṭṭiʿanna
فَلَأُقَطِّعَنَّ
ஆகவே, நிச்சயமாக வெட்டுவேன்
aydiyakum
أَيْدِيَكُمْ
உங்கள் கைகளை
wa-arjulakum
وَأَرْجُلَكُم
உங்கள் கால்களை
min khilāfin
مِّنْ خِلَٰفٍ
மாற்றமாக
wala-uṣallibannakum
وَلَأُصَلِّبَنَّكُمْ
உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன்
fī judhūʿi
فِى جُذُوعِ
பலகைகளில்
l-nakhli
ٱلنَّخْلِ
பேரித்த மரத்தின்
walataʿlamunna
وَلَتَعْلَمُنَّ
நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
ayyunā
أَيُّنَآ
எங்களில் யார்
ashaddu
أَشَدُّ
கடினமானவர்
ʿadhāban
عَذَابًا
வேதனை செய்வதில்
wa-abqā
وَأَبْقَىٰ
நிரந்தரமானவர்
(இதனைக் கண்ட ஃபிர்அவ்ன்) "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தாம் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களுடைய தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டிப் பேரீச்ச மரத்தின் வேர்களில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். நிலையான வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௧)
Tafseer
௭௨

قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَاۤءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِيْ فَطَرَنَا فَاقْضِ مَآ اَنْتَ قَاضٍۗ اِنَّمَا تَقْضِيْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ۗ ٧٢

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
lan nu'thiraka
لَن نُّؤْثِرَكَ
நாம் உம்மை தேர்ந்தெடுக்க மாட்டோம்
ʿalā mā jāanā
عَلَىٰ مَا جَآءَنَا
எங்களிடம் வந்ததை விட
mina l-bayināti
مِنَ ٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளில் இருந்து
wa-alladhī faṭaranā
وَٱلَّذِى فَطَرَنَاۖ
எங்களைப் படைத்தவனை விட
fa-iq'ḍi
فَٱقْضِ
ஆகவே நீ செய்
mā anta
مَآ أَنتَ
எதை/நீ
qāḍin
قَاضٍۖ
செய்பவனாக இருக்கிறாயோ
innamā taqḍī
إِنَّمَا تَقْضِى
நீ செய்வதெல்லாம்
hādhihi
هَٰذِهِ
இந்த
l-ḥayata l-dun'yā
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ
உலக வாழ்க்கையில்தான்
அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௨)
Tafseer
௭௩

اِنَّآ اٰمَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطٰيٰنَا وَمَآ اَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ السِّحْرِۗ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى ٧٣

innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
birabbinā
بِرَبِّنَا
எங்கள் இறைவனை
liyaghfira
لِيَغْفِرَ
அவன் மன்னிப்பதற்காக
lanā
لَنَا
எங்களுக்கு
khaṭāyānā
خَطَٰيَٰنَا
எங்கள் பாவங்களை
wamā akrahtanā
وَمَآ أَكْرَهْتَنَا
இன்னும் எது/நீ எங்களை நிர்ப்பந்தித்தாய்
ʿalayhi
عَلَيْهِ
அதை செய்வதற்கு
mina l-siḥ'ri
مِنَ ٱلسِّحْرِۗ
சூனியத்தில்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தவன்
wa-abqā
وَأَبْقَىٰٓ
மிக நிரந்தரமானவன்
நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்களுடைய குற்றங்களையும் உன்னுடைய நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலைத்திருப்பவனும் ஆவான்" என்று கூறினார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௩)
Tafseer
௭௪

اِنَّهٗ مَنْ يَّأْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَنَّمَ ۗ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰى ٧٤

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக விஷயமாவது
man
مَن
எவன்
yati
يَأْتِ
வருகிறானோ
rabbahu
رَبَّهُۥ
தன் இறைவனிடம்
muj'riman
مُجْرِمًا
பாவியாக
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
lahu
لَهُۥ
அவனுக்கு
jahannama
جَهَنَّمَ
நரகம்தான்
lā yamūtu
لَا يَمُوتُ
அவன் மரணிக்க மாட்டான்
fīhā
فِيهَا
அதில்
walā yaḥyā
وَلَا يَحْيَىٰ
வாழவும் மாட்டான்
உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் கூலியாகும். அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக் கொண்டு குற்றுயிராகவே கிடப்பான்.) ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௪)
Tafseer
௭௫

وَمَنْ يَّأْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰۤىِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰى ۙ ٧٥

waman
وَمَن
இன்னும் யார்
yatihi
يَأْتِهِۦ
அவனிடம்வருவாரோ
mu'minan
مُؤْمِنًا
நம்பிக்கையாளராக
qad ʿamila
قَدْ عَمِلَ
திட்டமாக செய்தார்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
fa-ulāika lahumu
فَأُو۟لَٰٓئِكَ لَهُمُ
அவர்களுக்குத்தான்
l-darajātu
ٱلدَّرَجَٰتُ
தகுதிகள் உண்டு
l-ʿulā
ٱلْعُلَىٰ
மிக உயர்ந்த
எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகின்றாரோ அத்தகையவருக்கு மேலான பதவிகள் இருக்கின்றன. ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௫)
Tafseer
௭௬

جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗوَذٰلِكَ جَزٰۤؤُا مَنْ تَزَكّٰى ࣖ ٧٦

jannātu
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
ʿadnin
عَدْنٍ
அத்ன்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழே
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَاۚ
அதில்
wadhālika
وَذَٰلِكَ
இதுதான்
jazāu
جَزَآءُ
கூலியாகும்
man tazakkā
مَن تَزَكَّىٰ
எவர்/பரிசுத்தமானார்
(மறுமையிலோ அவர்களுக்கு) "அத்ன்" என்ற நிலையான சுவனபதிகள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௬)
Tafseer
௭௭

وَلَقَدْ اَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِيْ فَاضْرِبْ لَهُمْ طَرِيْقًا فِى الْبَحْرِ يَبَسًاۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰى ٧٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
awḥaynā
أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
ilā mūsā
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
an asri
أَنْ أَسْرِ
இரவில் அழைத்துச் செல்வீராக
biʿibādī
بِعِبَادِى
என் அடியார்களை
fa-iḍ'rib
فَٱضْرِبْ
இன்னும் ஏற்படுத்துவீராக
lahum
لَهُمْ
அவர்களுக்காக
ṭarīqan
طَرِيقًا
ஒரு பாதையை
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
yabasan
يَبَسًا
காய்ந்த
lā takhāfu
لَّا تَخَٰفُ
நீர் பயப்பட மாட்டீர்
darakan
دَرَكًا
பிடிக்கப்படுவதை
walā takhshā
وَلَا تَخْشَىٰ
அஞ்சமாட்டீர்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். "நீங்கள் என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுங்கள். (வழியில் குறுக்கிடும்) கடலில் (உங்களது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். (உங்களை எதிரிகள்) அடைந்து விடுவார்களென்று நீங்கள் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உங்களுடைய மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீங்கள் அஞ்சாதீர்கள்" (என்றும் அறிவித்தோம்). ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௭)
Tafseer
௭௮

فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُوْدِهٖ فَغَشِيَهُمْ مِّنَ الْيَمِّ مَا غَشِيَهُمْ ۗ ٧٨

fa-atbaʿahum
فَأَتْبَعَهُمْ
அவர்களைப் பின்தொடர்ந்தான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
bijunūdihi
بِجُنُودِهِۦ
தனது படைகளைக்கொண்டு
faghashiyahum
فَغَشِيَهُم
ஆகவே, அவர்களை சூழவேண்டியது
mina l-yami
مِّنَ ٱلْيَمِّ
கடலில் இருந்து
mā ghashiyahum
مَا غَشِيَهُمْ
எது/ சூழ்ந்தது/அவர்களை
(அவ்வாறே மூஸா நபி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிடவே) ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றான். (சென்ற அவன் கடலில் அவர்களைப் பின்பற்றிச் செல்லவே) கடலும் (இவர்களில் ஒருவரும் தப்பாது) இவர்களை மூழ்கடிக்க வேண்டியவாறு மூழ்கடித்து விட்டது. ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௮)
Tafseer
௭௯

وَاَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهٗ وَمَا هَدٰى ٧٩

wa-aḍalla
وَأَضَلَّ
வழிகெடுத்தான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
qawmahu
قَوْمَهُۥ
தன் சமுதாயத்தினரை
wamā hadā
وَمَا هَدَىٰ
அவன் நேர்வழி காட்டவில்லை
ஃபிர்அவ்ன் தன் மக்களை நேரான வழியில் செலுத்தாமல் தவறான வழியிலேயே செலுத்தினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௯)
Tafseer
௮௦

يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ قَدْ اَنْجَيْنٰكُمْ مِّنْ عَدُوِّكُمْ وَوٰعَدْنٰكُمْ جَانِبَ الطُّوْرِ الْاَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى ٨٠

yābanī is'rāīla
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களே!
qad
قَدْ
திட்டமாக
anjaynākum
أَنجَيْنَٰكُم
உங்களை நாம் பாதுகாத்தோம்
min
مِّنْ
எதிரிகளிடமிருந்து
ʿaduwwikum
عَدُوِّكُمْ
எதிரிகளிடமிருந்து உங்கள்
wawāʿadnākum
وَوَٰعَدْنَٰكُمْ
இன்னும் உங்களுக்கு வாக்களித்தோம்
jāniba
جَانِبَ
பகுதியை
l-ṭūri
ٱلطُّورِ
தூர் மலை
l-aymana
ٱلْأَيْمَنَ
வலது
wanazzalnā
وَنَزَّلْنَا
இன்னும் இறக்கினோம்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-mana
ٱلْمَنَّ
மன்னு
wal-salwā
وَٱلسَّلْوَىٰ
ஸல்வா
இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்களுடைய எதிரிகளிடமிருந்து காப்பாற்றி "தூர்" என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு "மன்னு சல்வா"வையும் இறக்கி வைத்தோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௦)
Tafseer