Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 2

Maryam

(Maryam)

௧௧

فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا ١١

fakharaja
فَخَرَجَ
அவர் வெளியேறி வந்தார்
ʿalā qawmihi
عَلَىٰ قَوْمِهِۦ
தனது மக்களுக்கு முன்
mina
مِنَ
இருந்து
l-miḥ'rābi
ٱلْمِحْرَابِ
தொழுமிடம்
fa-awḥā
فَأَوْحَىٰٓ
ஜாடை காண்பித்தார்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களை நோக்கி
an sabbiḥū
أَن سَبِّحُوا۟
துதியுங்கள் என்று
buk'ratan
بُكْرَةً
காலையிலும்
waʿashiyyan
وَعَشِيًّا
மாலையிலும்
பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடையாகக் காண்பித்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௧)
Tafseer
௧௨

يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ۗوَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّاۙ ١٢

yāyaḥyā
يَٰيَحْيَىٰ
யஹ்யாவே
khudhi
خُذِ
பற்றிப் பிடிப்பீராக
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
biquwwatin
بِقُوَّةٍۖ
பலமாக
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
l-ḥuk'ma
ٱلْحُكْمَ
ஞானத்தை
ṣabiyyan
صَبِيًّا
சிறு குழந்தை
(நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) "யஹ்யாவே! நீங்கள் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௨)
Tafseer
௧௩

وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ۗوَكَانَ تَقِيًّا ۙ ١٣

waḥanānan
وَحَنَانًا
இரக்கத்தையும்
min ladunnā
مِّن لَّدُنَّا
நம்மிடமிருந்து
wazakatan
وَزَكَوٰةًۖ
தூய்மையையும்
wakāna
وَكَانَ
இன்னும் அவர் இருந்தார்
taqiyyan
تَقِيًّا
இறையச்சமுடையவராக
அன்றி, இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறை அச்சமுடையவராகவே இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௩)
Tafseer
௧௪

وَّبَرًّاۢ بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا ١٤

wabarran
وَبَرًّۢا
இன்னும் நன்மை புரிபவராக
biwālidayhi
بِوَٰلِدَيْهِ
தன் பெற்றோருக்கு
walam yakun
وَلَمْ يَكُن
அவர் இருக்கவில்லை
jabbāran
جَبَّارًا
முரடராக
ʿaṣiyyan
عَصِيًّا
மாறுசெய்பவராக
அன்றி, தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். அவர்களுக்கு மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௪)
Tafseer
௧௫

وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا ࣖ ١٥

wasalāmun
وَسَلَٰمٌ
இன்னும் ஈடேற்றம்
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு
yawma
يَوْمَ
நாளிலும்
wulida wayawma
وُلِدَ وَيَوْمَ
பிறந்த/நாளிலும்
yamūtu
يَمُوتُ
அவர் மரணிக்கின்ற
wayawma yub'ʿathu
وَيَوْمَ يُبْعَثُ
அவர் எழுப்பப்படுகின்ற நாளிலும்
ḥayyan
حَيًّا
உயிர் பெற்றவராக
அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும்பும் நாளிலும் அவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௫)
Tafseer
௧௬

وَاذْكُرْ فِى الْكِتٰبِ مَرْيَمَۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا ۙ ١٦

wa-udh'kur
وَٱذْكُرْ
இன்னும் நினைவு கூறுவீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
maryama
مَرْيَمَ
மர்யமை
idhi intabadhat
إِذِ ٱنتَبَذَتْ
ஒதுங்கியபோது
min ahlihā
مِنْ أَهْلِهَا
தன் குடும்பத்தினரை விட்டு
makānan
مَكَانًا
இடத்திற்கு
sharqiyyan
شَرْقِيًّا
கிழக்கில்
(நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்னுடைய) அறைக்குச் சென்று, ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௬)
Tafseer
௧௭

فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًاۗ فَاَرْسَلْنَآ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا ١٧

fa-ittakhadhat
فَٱتَّخَذَتْ
அவர் ஏற்படுத்திக் கொண்டார்
min dūnihim
مِن دُونِهِمْ
அவர்களுக்கு முன்னாலிருந்து
ḥijāban
حِجَابًا
ஒரு திரையை
fa-arsalnā
فَأَرْسَلْنَآ
நாம் அனுப்பினோம்
ilayhā
إِلَيْهَا
அவரிடம்
rūḥanā
رُوحَنَا
நமது தூதரை
fatamathala
فَتَمَثَّلَ
அவர் தோன்றினார்
lahā
لَهَا
அவளுக்கு
basharan
بَشَرًا
ஒரு மனிதராக
sawiyyan
سَوِيًّا
முழுமையான
(குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரீல் என்னும்) நம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௭)
Tafseer
௧௮

قَالَتْ اِنِّيْٓ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا ١٨

qālat
قَالَتْ
கூறினார்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
aʿūdhu
أَعُوذُ
பாதுகாவல் தேடுகிறேன்
bil-raḥmāni
بِٱلرَّحْمَٰنِ
ரஹ்மானிடம்
minka
مِنكَ
உம்மிடமிருந்து
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
taqiyyan
تَقِيًّا
இறையச்சமுடையவராக
(அவரைக் கண்டதும்) "நிச்சயமாக நான் உங்களிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீங்கள் பரிசுத்தமானவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுங்கள்)" என்றார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௮)
Tafseer
௧௯

قَالَ اِنَّمَآ اَنَا۠ رَسُوْلُ رَبِّكِۖ لِاَهَبَ لَكِ غُلٰمًا زَكِيًّا ١٩

qāla
قَالَ
அவர் கூறினார்
innamā anā
إِنَّمَآ أَنَا۠
நானெல்லாம்
rasūlu
رَسُولُ
தூதர்தான்
rabbiki
رَبِّكِ
உமது இறைவனின்
li-ahaba
لِأَهَبَ
நான்வழங்குவதற்காக
laki
لَكِ
உமக்கு
ghulāman
غُلَٰمًا
ஒரு குழந்தையை
zakiyyan
زَكِيًّا
பரிசுத்தமான
அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை "உங்களுக்களி(க் கப்படும் என்பதை உங்களுக்கு அறிவி)ப்பதற்காக நான் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட (மலக்காகிய) ஒரு தூதர்தான்" என்றார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௯)
Tafseer
௨௦

قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِيْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا ٢٠

qālat
قَالَتْ
அவர் கூறினார்
annā
أَنَّىٰ
எப்படி?
yakūnu lī
يَكُونُ لِى
எனக்கு ஏற்படும்
ghulāmun
غُلَٰمٌ
குழந்தை
walam yamsasnī
وَلَمْ يَمْسَسْنِى
இன்னும் என்னை தொடவில்லை
basharun
بَشَرٌ
ஓர் ஆடவர்
walam aku
وَلَمْ أَكُ
இன்னும் நான் இல்லையே
baghiyyan
بَغِيًّا
விபச்சாரியாக
அதற்கவர் "எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே" என்று கூறினார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௦)
Tafseer